"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, July 27, 2010

குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!

ஓரிறையின் நற்பெயரால்..
பொதுவாக வேறு எந்த ஒரு வேத நூலுக்கும் இல்லா சிறப்பு குர்-ஆனுக்கு மட்டும் வழங்கப்பட்டது யாதெனில் அந்நூலின் "பிரத்தியேக பாதுகாப்பு".இங்கு குர்-ஆனின் பாதுகாப்பை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டு சொல்லும்போது, இக்கூற்றை எதிர்க்க விரும்புவோர்.,ஆரம்பமாக வைக்கும் வாதம் தாம்
1.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
2.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது போல் அதற்கு முந்தைய வேதங்களை ஏன் இறைவன் பாதுக்காக்கவில்லை?அஃது இறைவனால் ஏன் பாதுக்காக்க முடியவில்லை?
இந்த இரண்டும் இரு வேறு கேள்விகளாக இருந்தாலும் இரண்டும் ஒரே பதிலைதான் அடிப்படையாக கொண்டிருக்கிறது எப்படி?.. காண்போம்.,
குர்-ஆனின் பாதுக்காப்பு:
Qur'anic_Manuscript
அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும்.,
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(15:9)
இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்., ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)
மேற்கூறப்பட்ட வசனத்தில் "கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம். நம்மில் பலருக்கு பள்ளிக்காலங்களில் படித்த பாடங்களில் சில வரிகள் இன்றளவும் நம் மனதில் ஞாபகம் இருக்க காண்கிறோம். குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயிலும் பள்ளிப்பாடங்களே இன்றும் மனதின் ஓரத்தில் ஒட்டிருக்கும்பொழுது தினம் ஐவேளை தொழுகையில் குர்-ஆனிய வசனங்கள் அதுவும் பார்க்காமல் திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டும் எனும்போது அத்தகைய இறை வசனங்கள் மனதிலேயே பதிய செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்!ஏனெனில் தொழுகையானது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வு.உளத்தூய்மைக்காக இது பின்பற்றப்பட்டாலும் இயற்கையாகவே மனித மனங்கள் மனனம் செய்வதற்கு இறைவன் உருவாக்கிய மிக சிறப்பான,அழகான ஏற்பாடாகும்.
இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி அனைவருக்கும் எழலாம் (சிலருக்கு ஏற்படாமல் இருக்கலாம்-அவர்களுக்கும் சேர்த்தே இங்கு விளக்கம் -ஏனெனில் தன்னிலை விளக்கமளிப்பதே குர்-ஆனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு)
சஹாபாக்கள் முதல் அவர்களை தொடர்ந்து இன்றுமுள்ளவர்கள் வரை குர்-ஆன் மனதளவில் மனனம் செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டது சரிதான்.ஆனால் குர்-ஆன் அக்கால மக்கள் அனைவருக்கும் கேட்றியும் பொருட்டு பொதுவாக அருளப்படவில்லை.நபிகளாருக்கு அவர்கள் மட்டும் தனியாகவே அறிந்துக் கொள்ளும் பொருட்டும் பிரத்தியேகமாக அருளப்பட்டது.எனவே வான்வழி வந்த இறைச்செய்தியை வாய்வழி அறிவிக்கும் பொழுது நபிகளார் மிக சரியாக கருத்து சிதைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லிருப்பார்களா., ஏனெனில் அவர்கள் எழத,படிக்க தெரியாதவராயிற்றே என அவர்களது ஞாபக சக்தியின் மேல் யாரும் சந்தேகம் கொள்ளவாராயின் அக்கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக இறைவன் குர்-ஆனை மக்களிடத்தில் சேர்ப்பிக்க நபிகளார் மேற்கொள்ளும் செயல்களுக்கும் தாமே பொறுப்பு என்கிறான்.
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள் (75:16)
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19) சுப்ஹானல்லாஹ்! எத்தகையதொரு தெளிவானதொரு விளக்கம்.

எனவே குர்-ஆனின் பாதுகாப்பு எழுத்துவடிவில் இருப்பதாக சொல்வதைவிட ஒலி வடிவில் மனதில் இருப்பதாக கொள்வது நல்லது.இதன் காரணமாக குர்-ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படவில்லையென யாரும் (வேண்டுமென்ற) பொருள் கொண்டு அதன் எழுத்து வடிவிலான நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினார்களால் அஃது ஏற்பட்ட மாற்றம் குறித்து வரலாற்று சான்றுகள் தர வேண்டும்.ஏனெனில் உஸ்மான் (ரலி)அவர்களால் தொகுக்கப்பட்ட குர்-ஆன் அதன் மூல மொழியி(அரபி)லேயே துருக்கியிலும்,ரஸ்யாவிலும் மக்களின் பார்வை மத்தியில் இன்றளவும் இருக்கிறது.
குர்-ஆன் பற்றிய எதிர்மறை கருத்துக்களுக்கு சரியான விளக்கம் குறித்த அனைத்துவிதமான ஆய்வுகளும் அந்தந்த கால கட்டங்களிலேயே அறிஞர்ப் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்டு மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனை கீழ்காணும் சுட்டிகள் வாயிலாக காணலாம்


அருளப்பட்ட வரலாறு
http://www.tamililquran.com/revelation.asp?file=history.html
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/arulappatta-varalaru/

குர்-ஆன் குறித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கான விளக்கங்களுக்கு
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html
http://abumuhai.blogspot.com/2008/09/7.html
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_14.html

இரண்டாவது கேள்விக்குறித்த குற்றச்சாட்டை க்காண்போம்.
ஏனைய கிரந்தங்களை இறைவன் ஏன் பாதுகாக்கவில்லை என்ற கூற்றுக்கு குர்-ஆனை மட்டும் பாதுக்காத்த காரணம் அறிந்தாலே போதுமானது. நூஹ்,ஸாத்,லூத் போன்ற ஏனைய சமுகங்கள் குர்-ஆன் முன்மொழிந்திருப்பினும் முஹம்மது நபிக்கு முன்பாக வந்த இரு சமுகங்கள் மற்றும் அவற்றிற்கு கொணர்ந்த வேதங்கள் குறித்த பார்வை இங்கே.நபி மூஸா(மோசஸ்) அவர்களுக்கும் நபி ஈஸா(ஜீஸஸ்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தவ்ராவும்,இஞ்ஜிலும் அந்தந்த சமுக மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன அதாவது அப்போதைக்கு இருந்த (வாழ்ந்த) யூத,கிறித்துவ சமுகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வணக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைக்கு தேவையான சட்டங்கள் (விதிமுறைகள்-விதி விலக்குகள், அனுமதிக்கப்பட்டவைகள், விலக்கப்பட்டைவைகள் போன்றவை) குறித்து தெளிவுறுத்தப்பட்டது.எனவே ஒரு குறிப்பிட்ட சமுகம் சார்ந்த மக்களுக்காகவே அருளப்பட்ட வேதங்கள் எனும்போது எல்லா மனிதர்களுக்கும் அஃது அது பொதுவான விதிகள் குறித்த மூலங்கள் வரையறுக்கப்பட்ட வேதமாக அணுகமுடியாது.ஏனெனில் அவ்வேதங்கள் அனைத்து மக்களின் அதாவது,யுக முடிவு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும்படியான கருத்துக்கள் வகுக்கப்படவில்லை.அந்த காலகட்டத்தில் உள்ள மக்களின் செயல்பாடுகளுக்கு தகுந்தாற்போல் இறைவேதங்கள் அருளப்பட்டன.(எனினும் அவைகள் குறைப்பாடுடைய வேதங்கள் அல்ல., அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படி) எனவே எல்லோருக்கும் பொதுவானதாக கருத்துக்களை அடங்கிய வேதமாக அல்லாஹ் முஹம்மது நபிகளின் மூலமாக இவ்வுலகத்திற்கு வழங்கினான்.அரபு மொழி பேசும் சமுக மத்தியில் இவ்வேதம் வழங்கப்பட்டாலும்,உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிப்பொருட்டு மேற்கொள்ளப்படும் ஏவல்களும்-விலக்கல்களும், முழுமைப்பெற்ற வாழ்வியல் சட்டத்திட்டங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு நம் முன் இறுதி வேதமாக காட்சி தருகிறது

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (06:90)
மேலும் பார்க்க:(2:2,17:9,82,18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44, 50:45, 80:11)

கீழ்காணும் வசனங்களும் முன்னர் வருகை புரிந்த இறைத்தூதர்களையும், அவர்கள் கொணர்ந்த வேதங்களையும் உண்மைப்படுத்துவதாக கூறுகிறது
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.(41:43)
மேலும் பார்க்க ( 2:91,4:47, 5:48, 6:92,29:47, 43:45)
மேலும் எதுக்குறித்து தூதுவர்கள் இறைப்புறத்திலிருந்து அனுப்பப் பட்டார்களோ அந்த தூதுத்துவப்பணியின் நோக்கமும் முஹம்மது நபிகளாரோடு முடியுற்றது -அதாவது மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டிய- சேர்க்க வேண்டிய அனைத்து செயல்பாடுகளையும் இறுதித்தூதின் மூலமாக இறைவன் முழுமைப்படுத்திவிட்டான்.
...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (05:03 சுருக்கம்)
அல்லாஹ்வே இஸ்லாத்தை முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாக தேர்ந்தெடுத்தால் உலக இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்!

மனிதன் என்ற முறையில் இவ்வாக்கத்தில் எங்கேனும் தவறிருப்பின் அதற்குநானே பொறுப்பு
ஆதாரத்துடன் சொன்னால் -திருத்தலாம்

அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!"

Tuesday, July 20, 2010

முஹம்மது(ஸல்)... என்னும் முழு மனிதர்.

                                                     ஓரிறையின் நற்பெயரால்...
 உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன்  மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.

இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.

 Although his name is now invoked in reverence several billion times every day, Muhammad was the most reviled figure in the history of the West from the 7th century until quite recent times.
...Muhammad is one of the most influential figures in history, his life, deeds, and thoughts have been debated by followers and opponents over the centuries,
    -taken from wikipidia &Britannica Concise Encyclopedia

                        இன்றுவரையிலும் மனித சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் "மா நபி முஹம்மத் (ஸ-ல்) என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அத்தைகைய தூயோரின் மொத்த வாழ்வும் திறந்த புத்தகமாகவே இன்றவும் உள்ளது.

இன்று தலைவர்கள் என போற்றப்படுபவர்கள் அவர்கள் கொண்ட மதம்,அரசியல் மற்றும் சமுக சார்ந்த எந்த ஒரு துறையில் மட்டுமே அவர்கள் பிரத்தியேக தன்மையுடன் விளங்குகிறார்கள்.

ஆனால் முஹம்மத் (ஸ-ல்) என்ற ஒரு தலைவர் மட்டுமே மேற்குறியவைகளில் மட்டுமல்லாது குடும்பவியல்,பொருளியல்,என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களும் பின்பற்ற தகுந்த ஒரு வாழ்வு நெறியே ஏற்படுத்தினார்கள்.

ஏன்... சுருங்கக்கூறினால் ஒருவர் காலையில் விழித்ததிலிருந்து இரவு உறங்க சொல்லும் வரை மேற்கொள்ளும்   அன்றாட வாழ்வின் செயல்கள் அனைத்திலும் அவர்களின் வழிகாட்டுதல்களும், பின்பற்றுதல்களும் இருக்கிறது.

எனவே தான் வல்லோன் தன் வான் மறையில் வள்ளல் முஹம்மது(ஸ்-ல்) பற்றி
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.  (33:21) 


    என கூறுகிறான்.எனவே இன்று உலகில் வாழும்  5 ல் ஒருவர் அண்ணல் அவர்களை தம் உயிரினும் மேலாக மதிக்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வு தூயது எனபதில் ஆச்சரியமில்லை!

     ஆனால் இன்று இஸ்லாத்தை விமர்சிப்போரின் தலையாய பணி அன்னாரை கேவலப்படுத்துவதற்காக தங்களது வலை தேசங்களுக்கு வரையறையற்ற எல்லை விரிப்பை ஏற்படுத்தி முகமற்ற முகவரி தந்து வார்த்தை பயங்கரத்தை பயப்படாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தனது கைக்கு அருகிலிருக்கும் கணிணியின் சுவிட்சை ஆன் செய்வதற்கு முன்பு திறந்திருக்கும் தமது மன கணிணியில் வாழ்கைக்கு தேவையான downloadகள் 60 லிருந்து 70 ஆண்டுகள் வரை மட்டுமே பெற முடியும் எனபதை மறந்து விட வேண்டாம்.

அதுவும் மரணமென்னும் சுவீட்சு முன்னரே OFF செய்யபடாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்! எனவே குறுகிய சிந்தனை கொண்டு நிரந்தர, நீண்ட வாழ்வை மறுக்க, இழக்க விளையாதீர்கள்.

 முஹம்மது (ஸ-ல்) அவர்கள் குறித்து பார்க்கும் முன்பு.,
     இறைவனுக்கு மாறு செய்த யுத சமுகம் இறை தூதருக்கான வருகையே தங்கள் சமுதாயமல்லாது பிறிதொரு சமுகத்தில் வருவதற்கு கடும் எதிர்ப்பை கொண்டிருந்தது.அவர்கள் எதிர்பார்த்தது போலலல்லாது  அரேபிய சமுகத்தில் இறுதித்தூதர் வெளிப்பட்டதால் அன்னாருக்கேதிராக காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தங்களது எதிர்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டத் தொடங்கினர்.
(அன்று தொடங்கிய எதிர்ப்பு இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது என்பதை வரலாறு அறிந்தோர் அனைவரும் உணரும் உண்மை)

   சம காலத்திலேயே அன்னாருக்கும்,ஏனைய முஸ்லிம்களுக்கும், மக்கத்து காஃபிர்களுடன் சேர்ந்து தொல்லை விளைவித்தனர்.மேலும் முஸ்லிகள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக வேத வெளிபாடன  குர்-ஆனில் தமது கை சரக்கை சேர்க்க முடியாததென்பதை உணர்ந்து அது  போக ஏனைய வழிகளில் குழப்பத்தை ஏற்படுத்த தலைப்பட்டனர்.

   அதன் உச்சக்கட்டமே இஸ்லாத்தின் பின்பற்றுதலுக்குறிய இரண்டாம் அடிப்படையில் அமைந்த நபிகளாரின் வாழ்வு நெறியில் (ஹதிஸ்களில்) தம் சொந்த கருத்தை புகுத்த முயன்றனர்.அதில் சிறிது வெற்றியும் கண்டனர்.

எனினும் அஃது இரண்டற கலந்த அவ்வதிஸ்களை புஹாரி,முஸ்லிம் போன்ற பெரும் இமாம்கள் பெருமானார்-பெருமானாரிமிருந்து வழிவழியாக அறிவித்தவர் யாரென்றும்,அவரது நம்பக தன்மையை அளவு கோலாக கொண்டும் தரம் பிரித்து ஹதிஸ்களை ஸயி (உண்மையானது) ஹசன் (நல்லது), லைஃப் (பலகீனமானது) மற்றும் மப்ஃளூஆத் (இட்டுக் கட்டப்பட்டது) என வகைபடுத்தியுள்ளனர்.

இன்று இஸ்லாத்திற்கேதிராக நபிகளாரின் வாழ்வை குறை காணும் (அ)சத்தியவான்கள் பெரும்பாலும் இவ்வாறு இனம் பிரித்து இட்டுக் கட்டபட்ட ஹதிஸ்களையே மேற்கொள் காட்டுகின்றனர். எனினும் நியாயமான பார்வைக்கு இஸ்லாத்திலும்,நபிகளாரின் வாழ்விலும் நடு நிலையான பதிவுகள் உள்ளன.

நபிகளாரின் நம்பகதன்மை 
இறைத்தூதராக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு முன்பே அவர்கள் அச்சமுக மக்களின் நற்பெயரை பெற்றிருந்தார்கள்.அம்மக்களின் அடைக்கலப் (அமானித) பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு அன்னாரிடமே இருந்தது. அவர்களின் குணநலன்கள் அடிப்படையில் நாணயமற்றவர் என்றோ, அடுத்தவர் பொருளை அபகரிப்பவர் என்றோ, ஒருகுற்றச்சாட்டு அவர்கள் வாழ்வு முழுவதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எழெவே இல்லை.

மாறாக அவர்கள் கொணர்ந்த ஓரிறையின் அடிப்படை நாதமான "அல்லாஹ்விற்கு" இணை கற்பிக்காதீர்கள் என்ற ஒற்றை சொல்லில் அதிருப்தியுற்றவர்களாக தாம் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக ஒரு கொள்கையே கண்டதால் சமரசம் பேச "ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அண்ணல் இயம்ப" அவர்களை பொய்யர் என்றும்,பைத்திய காரர் என்றும் சொல்ல தொடங்கினர்.

  எனினும் அவர்களின் நீத தன்மையே எந்த ஒரு நிகழ்விலும் அம்மக்கள் குறை கூறவில்லை என்பதை ஒருசில காட்சிகள் நமக்கு  சாட்சியாக உள்ளன
 *பகிரங்கமாக பிரச்சார புரியக்கூறி இறைவசனம் இறங்கிய போது தன் சமுக மக்களை 'ஸபா' மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர்கள் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்டார்கள்:

 “ இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மக்கள்: ‘ஆம், நம்புவோம்’ முஹம்மத்: ‘ஏன் நம்புவீர்கள்’
மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’ முஹம்மத்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’


"உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும் , என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள்.


அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன். அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்"
     
*முஹம்மத் (ஸ-ல்) அவர்களின் பிரச்சாரத்தை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட
“ முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன்.



    * மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவர் அபுஸுப்யான்  ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின்  (Heraclius) அவைக்கு சென்ற போது அரசருக்கும் அவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலில்
   “ முஹம்மத் எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை" என்று கூறியவுடன், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்
 “ மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
 மனிதர்கள் பெயரால் பொய் சொல்ல விரும்பாதவர் கடவுளின் பெயரால் எவ்வாறு பொய் பேச எத்தனிப்பார்..?
   


     என்பதை அறியும் போதே முஹம்மது(ஸ-ல்)அவர்கள் நேர்மை,வாய்மை மிக்கவர்கள் என்பது வரலாற்று வெளிச்சத்தில்  அவர்களின் வாழ்வை உற்று நோக்குபவர்கள் எவரும் அறிந்துக் கொள்ளும் அழகான உண்மை.இங்கு மன்னர் ஹிராக்ளியஸ் கூறிய வாசகங்கள் மாற்று எண்ணங்கொண்ட நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மற்றுமொரு செய்தி!

மாநபியின் மணங்கள்
       அன்னார் அவர்கள் 8 க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துக் கொண்டதை விமர்சிக்கும் எவரும் அவர்களின் முதல் திருமணம் பற்றி வாய் திறப்பதில்லை.

விதவையான அன்னை கதிஜா (ரலி)அவர்களை அவர்களின் விருப்பத்தின் பேரிலே திருமணம் செய்து கொள்கிறார்கள்.அதுவும் அவர்களை விட ஏறத்தாழ 15 அகவை அதிக வித்தியாசத்தில்.,

  அவர்களின் மறைவுக்கு பின்னரே ஆயிசா (ரலி) உட்பட ஏனைய திருமணங்கள்  நபிகளாரின் 50 வயதிற்கு மேலாக தான் நடைப்பெற்றன. இந்நிலையே ஒப்பிடும் யாராக இருந்தாலும் 50 வயதிற்கு மேலாக தான் ஏனைய திருமணங்கள் நடைப்பெற்றது.

இதை அறியும் யாராகிலும் முஹம்மது (ஸ-ல்)அவர்களின் உடற் தேவையே விட மற்றுமொரு முக்கிய தேவைக்காகவே அத்தகைய திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை யோசிக்க முற்படுங்கள் முடியாவிட்டால் முயற்சியுங்கள்,அதுதான் உண்மையும் கூட.,

 முஹம்மத் (ஸ்-ல்)அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தூதுத்துவ பணியின் அடிப்படை இறைவனின் வழிக்காட்டுதலுகிணங்க அனைத்து சமுதாய மக்களுக்கும் முன்மாதிரியாக அவர்களின் வாழ்வு விளக்கப்பட வேண்டும்.

 ஏற்று செய்வாதயினும்,விட்டு விலகுவாதயினும் அன்னார் அவர்களின் முழு அங்கிகாரம் வேத வெளிப்பாட்டின் அடிப்படையில் அச்செயலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.வெளிப்புற நடவடிக்கை தொடர்பான செயல்பாடுகளை விளக்க ஏனைய நபர் சார்ந்த தலையீடு தேவையில்லை.

ஆனால் இல்லறம்,குடும்பம் சார்ந்த செயல் பாடுகளில் அதுவும் பெண்கள் சம்பந்தமாக விளக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு கண்டிப்பாக மூன்றாம் நபர் அங்கு தேவை.அதுவும் இல்லறத் தொடர்பான செய்திகளுக்கு தன் மனைவியாலே மற்ற எல்லா பெண்களையும் விட  கூச்சப்படாமல் அவைகள் தொடர்பான கேள்விகளை கேட்டு, தெளிவாக, விளக்கமான பதில்களை பெறமுடியும்.

 அதற்காகவே நபிகளாருக்கு திருமணங்கள் என்பதை அறியலாம்.(ஆயிசா(ரலி) மற்றும் ஏனைய மனைவிகள்  அறிவித்த இல்லற மற்றும் அது தொடர்பான செய்திகள் ஹதிதுகளில் நிறைந்து காணக்கிடப்பதே மேற்கூறிய செயலுக்கு சான்றாகவுள்ளது)

   மேலும்,அத்திருமணங்கள் யாவும் காரண,காரியங்களின் அடிப்படையில் அமைந்த சூழ்நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது.
ஆயிசா(ரலி) அவர்கள் 6 வயது நிரம்பிய சிறுமியாக இருக்கும்போது நபிகளார் மணமுடித்ததை பெரிய கொடுமையாக சித்தரிக்க முயலும் சமுக பெண் நல(?) விரும்பிகள் அதற்கான சமுக சூழல் நிலையே ஒப்பிட்டு பார்க்க மறுப்பது ஏன் என்று தான்  தெரியவில்லை.

   இத்திருமண சம்பவம் நடந்தது கி.பி.7ம் நூற்றாண்டில் என்பது கவனிக்கத்தக்கது. அன்றைய அரபுகள் தங்களுக்கிடையில் உறவை வலுப்படுத்துவதற்காக திருமண ஒப்பந்தங்களை அதிகமாக ஏற்படுத்துவதை அவர்களின் வழக்கமாக கொண்டிருந்தனர்.

 அதன் அடிப்படையில் அபு பக்கர்(ரலி)அவர்கள் இறைத்தூதரும் தமது ஆருயிர் நண்பருமான அண்ணல் முஹம்மத் (ஸ-ல்)அவர்களுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொள்ள தமது மகளான ஆயிசா(ரலி) அவர்களை திருமணம் செய்து வைக்கிறார்கள்.எதில் எங்கே தவறு? ஓ அந்த 6 வயது...தான் பிரச்சனையோ...அதற்கு நிகழ்கால ஒப்பீடை அளவுகோலாக கொள்ளலாம்.

   நமது நாட்டில் தற்போதைய "பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவிப்பு செய்கிறது.இன்னும் பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்றால் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது.இன்னும் சற்று முன்னோக்கி (யா? பின்னோக்கியா ?) சென்று நமது பாட்டி,தாத்தா கால திருமண வயதை அறிந்துக்கொண்டால்  இங்கு 6 வயது கேள்வியே எழாது.

  மேலும் அண்ணலின் அத்தைய திருமணம் சமுக,கால சூழ் நிலை சார்ந்தே மேற்கொள்ளப்பட்டது. எனவே தான் சம காலத்திய எதிரிகள் கூட இத்திருமணக் குறித்து விமர்சனம் எழுப்பவில்லை.

ஏனெனில் இது தவறென்றால் நபிகளரை எதிப்பதற்கு இந்த பால்ய விவாகம் போதுமான ஒரு ஆயுதமாக இருந்திருக்கும்.ஆனால் வரலாற்று சுவடுகளில்  இத்திருமணம் குறித்து எதிர்ப்பதிவுகள் எங்கேணும் எதிரிகளால் பதியப்படவில்லை. .

  மேற்குறிய ஆயிசா(ரலி) திருமண நிகழ்வுக்கான எடுத்து கூறப்பட்ட விளக்கம் இரண்டாம் நிலை காரணங்கள் தான்.ஏனெனில் பால்ய திருமணம் இஸ்லாமிய திருமண சட்டத்தில் பொது விதியாக ஆக்கப்பட வில்லை.இறைத்தூதருக்கு இறைப்புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு சிறப்பு அனுமதி என்பதையும் விமர்சன விரும்பிகள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,.

  அன்னை ஆயிசா(ரலி) நபிகள் திருமணத்திற்கு இதுவே முதற்காரணம்.
அதுபோலவே, அன்னை ஸைனப் (ரலி) அனனை ஸப்பிஃயா (ரலி) திருமணங்கள் எந்த சூழ்நிலையில் நடைபெற்றன எனபதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு கட்டாயப்படுத்தி தான் அப்பெண்களை அண்ணல் முஹம்மது (ஸ-ல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்றால் அன்னாரின் மரணத்திற்கு பிறகே அனைத்து மனைவிமார்களும் மரணிக்கிறார்கள்.

 மாநபியின் மரணத்திற்கு பிறகு தெளிவாக,பயப்படாமல்  தம் கருத்தை சமுக முன்னிலையில் எடுத்து சொல்லலாம். எனவே நபிகளார் செய்தது தவறென்றால் இச்சமயத்தில் அவர்கள் குறித்து பகிரங்கப்படுத்தலாம். எந்த மனைவியாரின் ஓலக்குரல் வரலாற்றின் எந்த ஓரத்திலாவது ஒலித்திருக்கிறதா ?

போர்களும்,சில பொய்களும்
 இஸ்லாம் வாள்முனையால் பரப்பபட்ட மார்க்கம்,முஹம்மது (ஸ-ல்)அவர்கள் தமது அரசியல் இஸ்லாம் வளர்க்க வன்முறையே கையாண்டார் -என உலகமே நபிகள் நாயகம் (ஸ-ல்)அவர்கள் பிறப்புக்குப் பிறகு தான் வாளையோ, போர்களையோ பார்த்தது போல் பிம்பத்தை ஏற்படுத்த விரும்புவோர் அண்ணல் அவர்கள் போரில் கொண்டவை,கொன்றவை குறித்து பட்டியல் தருவார்களா?

 அவர்கள் மேற்கொண்ட போர்கள் அனைத்தும் தற்காப்பின் அடிப்படையிலோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ நடைப்பெற்றதே ஆகும். நடைப்பெற்ற  அப்போர்களில் எதிர்த்து போரிட்ட ஏனைய படைபலத்துடன் முஸ்லிம் படை வீரர்களின் எண்ணிக்கையே வரலாற்று வெளியில் ஒப்பிட்டு பார்த்தாலே அது புரிந்துப்போகும்.

       மேலும் முஹம்மது (ஸ-ல்)அவர்கள்   வாளைவிட கூர்மையான வன்முறையே கையிளேந்தினார்கள் என அப(பா)ய குரலேப்புவோர் நபிகளார் போர் குறித்த செயல் பாடுகள் வன்முறை அடிப்படையிலமைந்ததாக கூறும்  வரலாற்று ஆவண பதிவுகள் நபிகளாரின் சம காலத்தில் வாழ்ந்த எந்த அரசர் குறிப்பில் இருக்கிறது?

  நபிகளாரின் படையெடுப்பால் வறுமை கோட்டை விட தம் வாழ்வியல் கோடு வலுவிழந்த அத்தகைய நாடு எது?அகிம்சை வியாதிகள் ஆதாரம் தருவார்களா? இன்று நம் கண்ணெதிரே அமெரிக்க,அரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் இஸ்லாத்தை தழுவியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கதே.அங்கு சென்று வாளேந்தி வன்முறையால் இஸ்லாமிய வருகையே அதிகரித்தவர்கள் யார்?,

இறுதித்தூதின் இறுதி நாட்கள்
    இறுதி மூச்சு உள்ளவரை அந்த மாமனிதர் தங்களின் சமுதாய மக்களின் நலனிலேயே அக்கறை செலுத்தலானார்கள்.இறைபோதனைகளை ஏற்று செயல் பட சொல்லிய அந்த தூயோனின் தூதர் மக்களுக்கு போதித்த தொழுகையாகட்டும், நோன்பாகட்டும் ஏனைய வழிப்படும் முறையாகட்டும். மக்களுக்கு சொல்லி தந்தவைகளை விட செய்து காட்டியது அதிகம்.

அவர்களின் மக்கா முழுவதுமான ஆட்சி,அதிகாரம் வந்த பின்னும் கூட அரசு கட்டிலில் ஏறி ஒய்யாரமாய் அமர்ந்திடவில்லை,தங்கமும்,வெள்ளியும் தனது காலடியில் கொட்டப்பட்ட பிறகும் கூட அவர்களின் மாளிகை மண் குடிலாகவே இருந்தது.சொடுக்கினால் ஏவல் புரிய காத்திருந்த மக்கள் கூட்ட மத்தியில் தனக்கும்,தன் குடுமப தேவைக்கு தானே கைகளால் உழைத்து சம்பாதித்து உண்ணலானார்கள்.

இறைத்தூதெனும் இமாலயப்பணியே  முழு உலகம் நன்மை பெற வெற்றிகரமாக செயல்படுத்திய போதிலும்., ஆறோடு ஏழாய் அண்ணல் அமர்ந்திருக்க.,"உங்களில் யார் முஹம்மது?" என கேட்பதே அவர் அவை நோக்கி வருவோரின் ஆரம்ப கேள்வியாய் இருந்தது.

 இன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்;ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என அன்றே உரக்கக் சொல்லிய உண்மை தலைவர், உலக தலைவர்.

பள்ளியில் பாடம் பயிலா அந்த உம்மி நபி உலகமெங்கேணும் ஒரு உருவ படத்தை கூட வடித்திட வாய்ப்பளிக்காத வாய்மையாளர்.கல்லில் கடவுளை காண்பவன் முட்டாள் என கூறியோர்களையே மறைவுக்கு பின் கல்லாய் சமைத்து, அவர்களுக்கு மாலைகளும்,அணிகலங்களும் வித்திடும் இன்றைய உலகம் கடவுள் ஒருவனே என ஒரிறைக் கொள்கையே ஓங்கி எழ செய்த அந்த முழு மனிதருக்கு இன்றவும் எங்கும் சிலையில்லா நிலை பார்த்து உலகமே வியக்கிறது.

மக்கமா நகரத்தின் அரசரான அந்த இறுதித்தூது விட்டுச்சென்ற மொத்த சொத்தின் மதிப்பு
   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) புகாரி, ஹதீஸ் எண்: 2739)


 வரலாற்று ஒளியில் முஹம்மதை ஆராய்கிறோம் என அடுக்கடுக்காய் ஆவணங்களை அலசும் அதிமேதாவிகள் இங்கு பதியப்பட்ட கடைசி இரு பத்திகள் குறித்த செய்திகளைப் பற்றி பறைச்சாற்றாதது ஏன்? இவை வரலாறு இல்லையா..?அல்லது அவர்கள் காணும் வரலாற்றில் இல்லையா...?

            இந்த வியப்பின் காரணமாக தான் நடு நிலை சிந்தனை கொண்ட அறிஞர்களும் தம் பார்வையில் அவர்களை குறித்து கூறும் போது .,

   "உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே. ”

       M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp.33)

    " உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள்.

அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்.

வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன."
        - அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

  “மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.

நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல"
                                                                           - மகாத்மா காந்தி - (Young India)

               "சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ     ”
                                                                     - Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship

    “ அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.     ”
                                                          - போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith


       உதாரணத்திற்காகதான்  இங்கு சில மேற்கோள்கள் சர் வில்லியம் மூரின் இஸ்லாமிய எதிர்ப்பு மேற்கொள்களை மட்டுமே கண்டவர்கள் மேற்கண்டவர்கள் சொன்னதும் உண்மைதான் என்பதை உணர்வார்களா? நாயகத்தை தன் நரகல் எழுத்துகளால் உரசிப்பார்க்க விளைவோர் அவர்களின் பெயர் வாக்கியத்திற்கு கூட சிறிதும் கலங்கம் ஏற்படுத்த முடியாது  எழுத,படிக்காத தெரியாத அந்த தனி மனிதர் ஏனைய மத/அரசியல் சார்ந்த தலைவர்களை விட மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் தான் அவர்களை வரலாற்று நாயகனாய் பார்க்காமல் வரலாற்றின் நாயனாய் பார்க்கபடுகிறார்கள் .

  முஹம்மத் என்னும் அந்த முழு மனிதரை இறைத்தூதர் என்று ஏற்காவிட்டால் எந்த வித நட்டம் அவர்களுக்கில்லை.அவர்களை இழிவுப்படுத்திப் பார்க்க விளைவோருக்கே இருலகிலும் நட்டம் என்பதை முடிந்தால் உணர முயற்சியுங்கள்...
அண்ணலார் பற்றிய இவ்வாக்கம் குறித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் கீழ்க்காணும் சுட்டிகளை பார்க்கவும் (இவை யாவும்  ஏற்கனவே கொடுக்கப்பட்ட விளக்கங்கள்)

அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் திருமணம் குறித்து
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_19.html 
அன்னை ஸபிஃயா(ரலி)அவர்கள் திருமணம் குறித்து
http://abumuhai.blogspot.com/2007_03_01_archive.html
பல திருமணங்கள் குறித்து
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

போர்க்களம் குறித்து
http://abumuhai.blogspot.com/2009/08/blog-post.html
http://abumuhai.blogspot.com/2006_09_01_archive.html
http://www.satyamargam.com/363

ஜஸ்யா வரி குறித்து
http://abumuhai.blogspot.com/2008_06_01_archive.html
வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா இஸ்லாம்
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/spread_sword.htm
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/abuasia6.htm#61
அந்த மாமனிதர் தனக்காக யாரையும் பழிவாங்கியதில்லை
http://abumuhai.blogspot.com/2005_07_01_archive.html
தண்டனைகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/thandanai.htm

அடிமைகள் குறித்து
http://abumuhai.blogspot.com/2006_02_01_archive.html
http://www.annajaath.com/qa1-0205.pdf
பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/oppresses_women.htm

இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள்
http://onlinepj.com/books/arthamulla_kelvikal/

                                                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்



    
read more "முஹம்மது(ஸல்)... என்னும் முழு மனிதர்."

Thursday, July 15, 2010

குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?

                                                                   ஓரிறையின் நற்பெயரால்...
        குர்-ஆன் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களின் 40 வயதில் ஹிரா குகையில் ரமலான் மாத கடைசி பத்து இரவுகளில் ஓரிரவு இறை புறத்திலிருந்து வானவர் தலைவர் ஜீப்ரஹில் மூலமாக அருளப்பட தொடங்கியது.பின் சிறுகச்சிறுக அன்னாரின் வாழ்வு முழுவதும் 23 ஆண்டுகளில் சுழலுக்கேற்ப மக்கள் மேற்க்கொள்ளும் நடைமுறை செயல் பாடுகளால் உண்டாகும் நன்மைகளையும்,தீமைகளையும் பிரித்தறிவிக்கும் நோக்குடன் இறக்கியருளப்பட்ட வேதம் தான்  அல்குர்-ஆன்

          இன்று, இஸ்லாத்தில் உள்ள குறைகளை  விமர்ச்சிக்கிறோம் என கிளம்பிய சிந்தனைச்சிற்பிகளில் சிலர் இஸ்லாத்தையும்,முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களையும் தரம் தாழ்த்தி தமிழ் எழுத்தும் வெட்கி  தலை குனியும் அளவிற்கு காழ்ப்புணர்ச்சியின் மொத்த வடிவத்தையும் யுனிக்கோட்டில் எழுத்துருவாய் மாற்றி உலக வலையில் உலவ விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் வார்த்தை யுத்ததில் சுற்றி வளைக்கப்பட்ட அப்பாவி வாசகம் தான் நான் மேலே குறிப்பிட்ட இக்கட்டுரையின் தலைப்பு.
 குர்-ஆனை உருவாக்கியது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) என்று கூறுவோர்  மூன்று வாதங்களை அதற்கு காரணமாக  முன் வைக்கின்றனர்.

1.சமுகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்காக      
2.தன் சுயநலத்திற்கு  தகுந்தாற்போல் சில வாசகங்கள் அமைத்துக்கொண்டார்கள்.மற்றும்
3.விஞ்ஞான,வரலாற்று செய்திகளை ஏனைய கிரகந்தகங்களிருந்து பெற்றார்கள்.


    *முதல் மற்றும் முதன்மை காரணமாக சொல்லப்படும் சமுக அந்தஸ்து பெறுவதற்காக குர்-ஆனை முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  உருவாக்கினார்கள் என்பது சரியா?


 அரபுக்குலங்களிலேயே குரைஷி என்னும் உயர்க்குடியில் பிறந்தவர்கள் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  என்பது அரேபிய வரலாறு அறியா மக்கள் கூட அறிந்திருக்கும் மறுக்க இயலா உண்மை.ஆக பிறப்பிலேயே குல அடிப்படையில்(அவர்களால் இஸ்லாம் தொடரப்படுவதற்கு முன்பு) சமுகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள்,

மேலும் அவர்களின் நேர்மை,ஒழுக்கம், நம்பக தன்மை, வாக்குறுதி மாறமை, நீதி செலுத்தல் போன்ற உயரிய பண்புகளால் சம காலத்திய மக்களால் வாய்மையாளர், உண்மையாளர் எனப்பொருள்படும் "அல்-அமீன்,அல்-சாதிக்" என போற்றப்பட்டார்கள்.எனவே தன்னின் தனிப்பட்ட சமுக அந்தஸ்து மேம்பட வேண்டும் என்பதற்காகவே  இறைவனின் பெயரால் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் பொய்யுரைக்க வேண்டிய அவசியமில்லை,

சொல்லப் போனால் தன்னை இறைவனின் தூதுவர் என பிரகடன படுத்திய பின்னர் தான் அவர்கள் பொருள் மற்றும் செல்வ நிலை சேதப்படுத்தப்பட்டத்தோடு அவர்களின் தேகமும் சொல்லோண்ண கொடுமைகளை சந்தித்தது.

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். (15:97)மேலும் பார்க்க:9:61, 96:9-19


            ஆக தனது பெயர் சமுகத்தில் உயர வேண்டும் என்ற நோக்கிற்காக குர்-ஆனை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது சாத்தியமே இல்லை. மாறாக குர்-ஆன் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்வதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள் குறித்து மேற்கண்ட வசனங்களில் காணலாம்.

 *இரண்டாம் காரணம், குர்-ஆனில் நபிகளாரை பெருமை(கண்ணிய)ப்படுத்தும் வசனங்கள் ஏராளமாக உள்ளது உண்மைதான்.அதற்காக வேண்டி அவர்கள் தான் குர்-ஆனை உருவாக்கியவர்கள் என சொல்வது ஏற்புடையதா?


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

   உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.(33:6 ன் சுருக்கம்)


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குறித்து மேலும் பார்க்க:36:69, 69:41, 69:42, 38:4, 2:143, 4:41, 22:78, 33:45, 73:15,5:19, 3:159, 9:61,128, 7:184, 15:89, 36:6, 53:56, 33:47, 33:40)

 
   மேற்கூறப்பட்ட வசனங்களில் நபியவர்களின் நிலைக்குறித்து உயர்வாக சொல்லப்பட்டாலும், அதற்கு காரணம் அவர்களின் முறையான கிழ்படிதல், பொறுமை,அவர்களின் நேர்மை, அனாதைகள் மற்றும் அமானிதங்களை பராமரித்தல், வாய்மை, இரக்கக்குணம் ஆகியவையே..

சுருங்கக்குறின் அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது ஏவல்,விலக்கல்களை முன்னிருத்தி  தங்களது வாழ்வை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே ஆகும்.இதனை அவர்கள் வரலாறு வழி நெடுக்கிலும் காணலாம்.
சரி., முரண்பாட்டு அடிப்படையில் உடன்பட்டு நபிகள் தான் தன்னை உயர்வு படுத்த இவ்வாக்கியங்களை குர்-ஆனில் உருவாக்கினார்கள் என வைத்துக் கொள்வோம்.,

கிழ்காணும் வாசகங்களும் குர்-ஆனில் தான் உள்ளது


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் எதற்கு அசவரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (6:58)    

   அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்-அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,-(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?-அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.-(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.-ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.-ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,-அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.-அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.-எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். (80:1 -12)

  (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."(7:188)

     அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:15)

   நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(66:01)

      அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக. (07:187)


 மேலும் பார்க்க:06:50,52, 75:16,109, 10:16, 33:52,59, 52:31, 3:144, 6:56,57&68)           
           
        மேற்கண்ட வசனங்களில் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்களை கண்டிப்பது போலவும்,இறைவன்  ஆட்சியிலும்,அதிகாரத்திலும் உள்ள செயல்கள் குறித்து தனது மனதின் படி அவர்கள் சொல்ல அனுமதி இல்லை என்றும்,மறைவான ஞானம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது, நன்மையோ,தீமையோ தனது சுய நாட்டப்படி தான் மேற்கொள்ள முடியாது என்றும்- விளக்கமாக கூறப்படுகிறது.

     பொதுவாக தானே இயற்றிய நூலாக இருந்தால் ஒருவேளை அவர் தன்னைப்பற்றி புகழ்ந்து கூறாமல் வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் தன்னை ஒருவர் கண்டித்தைப்பற்றியோ, அதிகாரத்தில் பங்கு இல்லை என்று கூறியது பற்றியோ  நூலில் குறிப்பிட மாட்டார். அதே அடிப்படையில் ஒப்பிடும்பொழுது

  குர்-ஆன் முஹம்மது நபிகள் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தால் மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் குர்-ஆனில் இடம் பெற வேண்டிய அவசியமென்ன...? தன் நரகல் நடை எழுத்துக்கு நாகரிக வர்ணம் பூசுவோர் சொல்வார்களா?


     குர்-ஆனில் விஞ்ஞானம் குறித்து மிக தெளிவாக செய்முறை விளக்கத்தோடு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை.ஏனெனில் அதன் தலையாய பணி மனித சமுதாய முழுமைக்குமான நேர் வழிக்காட்டுவதே ஆகும். அஃதில்லாத விஞ்ஞான விவரிப்புகள் இரண்டாம் பட்சமே (மேலும் அறிவியல் தொடர்பான விபரங்களுக்கு  குர்-ஆனும்-விஞ்ஞானமும் என்ற இடுகை காண்க)
  
 *குர்-ஆனில் கூறப்படும் விஞ்ஞான உண்மைகள்,வரலாற்று நிகழ்வுகள் யாவும் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் முந்திய சமுகத்திலிருந்து ஒன்று திரட்டி அதை தொகுத்து குர்-ஆனாக வடித்தார் என்ற வாதம் குறித்துப்பார்ப்போம்.


 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. (27:18)

"அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்று ஹுது ஹுது பறவை கூறிற்று).27:26


    மேற்கூறிய வசனத்தில் சுலைமான் நபி அவர்கள் குறித்தும் அவர்களின் படை குறித்தும் கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு சுலைமான் நபி குறித்த பார்வை முந்தைய வேதங்களிலிருந்து திரட்ட பட்டது என வைத்துக்கொண்டாலும்  இங்கு பறவையும், எறும்பும் பேசியது குறித்த மூலத்தை எங்கிருந்து  நபியவர்கள் எடுத்தார்கள்...?

ஏனெனில் எறும்பும், பறவையும்  பேசுவதென்பது  சாதாரண செயலல்ல.. அதுவும் தெளிவாக காரணங்களோடு அது ஒரு விஞ்ஞான உண்மையும் கூட,அந்த அறிவியல் உண்மை அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

தோரயமாக சொல்லிருப்பார்கள் என சமாளிப்பதற்காக சொல்வார்களேயானால் அன்றைய நேரத்தில் அந்த சம்பவத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம் என்ன...?

மேலும் ஒரு சம கால உதாரணம்


    *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள் 111:1-5)



    மேற்குறிப்பிடப்பட்ட வசனம் ஒரு தனிப்பட்ட மனிதனை குறித்து பேசுகிறது. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் தொடரப்பட்ட இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நபியவர்களுக்கும் ஏனைய இஸ்லாத்தை தழுவியோருக்கும் பெறும் தீங்கை விளைவித்தவன் தான் இவ்வசனம் குறிப்பிடும் அபுலஹப்.

அவன்  மேற்கொண்ட அட்டுழியங்களின் விளைவாக அவன் இஸ்லாமை ஏற்க மாட்டான்.மேலும் அவன் நரகமே செல்வான் எனவும் இவ்வசனம் கூறுகிறது. இவ்வசனம் அபுலஹப் உயிரோடிருக்கும் பொழுதே  அவனை குறித்து விளிக்கிறது. என்பதுதான் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தி .

முஹம்மது நபிகள்(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  தன் கோப வெளிபாடாக இவ்வார்த்தையை சொன்னதாக கொண்டால்., அவன் (அபுலஹப்) நினைத்தால் குர்-ஆனை பொய்யாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்ற ஒற்றை வாக்கியத்தை உதட்டளவில் சொல்லி பெருமானாரின் கரம் பிடித்திருந்தால்  போதும், இஸ்லாம் குறித்து இக்கட்டுரையே இங்கு தேவையிருக்காது,

ஏனெனில்... இஸ்லாமே அங்கு இருந்திருக்காது. ஏன் அவ்வாறு சொல்லவில்லை...? அதுமட்டுமா அவனது மனைவியேயும் சேர்த்தே இந்த வசனம் அவ்வாறு குறிப்பிடுகிறது... அவளாவது சொன்னாளா..? என்றால் அதுவும் இல்லை.. வரலாற்று ஆவணங்களை புரட்டி பார்த்து புட்டு புட்டு வைக்கும் புத்தக(நச்சு)ப்புழுக்கள் அவர்கள் வாய் பொத்திய வரலாறு சொல்வார்களா...?
 
  *இயேசுவை (ஈஸா அலை)கடவுளாக கருதிய சமயத்தில், வந்துதித்த முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் இயேசு (ஈஸா அலை) சிலுவையில் அறையப்பட வில்லை என கிறித்துவர்களின்(?) அடிப்படை க்கொள்கைகளை தகர்த்தெறிந்து அன்னாரை   வணங்குவோருக்கு நரகம் தான் என வேதகாரர்கள் சமுகத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் புரிய காரணமென்ன...?


இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)


    தம் கடவுட்கொள்கையின் பக்கம் அவர்களை வசப்படுத்த இவ்வாக்கியங்கள் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததாக ஒருவேளை கூறினால் ... இயேசு (ஈஸா அலை) அவர்களும் தம்மைப் போன்றே இறைவனின் ஒரு தூதர் என சொல்ல வேண்டிய அவசியமென்ன...?


... அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; (04:171 ன் சுருக்கம்) 
    மேலும் பார்க்க:04:172, 05:75, 19:30)

     *கீழ்காணும் வசனம் மனிதர்களை போல் ஜின்கள் என்ற படைப்பு குறித்து கூறுகிறது


 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56) 
மேலும் ஜின்கள் குறித்து பார்க்க:(6:100, 15:27, 17:88, 27:17,39, 34:12,14,41, 46:29, 55:15,38, 72:1-15, 114:6)  
   
     முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குர்-ஆனை இயற்றியதாக இருந்தால் ஜின்கள் குறித்த மூலங்களை எங்கிருந்து பெற்றார்கள்...? சாதாரணமாக நீதி போதனைகளை சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளலாமே...ஜின்கள் குறித்து மக்கள் மத்தியில் சொல்லுவதற்கான அவசியமோ,அத்தியாவசியமோ ஏன் வந்தது...?


*அது போலவே மலக்குகள் என்ற படைப்பு குறித்தும்.,
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.2:98


       எந்த மனிதரும் மலக்குகள் குறித்து அறியாதிருக்கும் பொழுது அவர்களின் தன்மை குறித்து மக்கள் மத்தியில் கூற காரணமென்ன...? கற்பனையாக (ஒரு வடிவம் கொடுத்து) தான் அவர்கள் கூறினார்கள் என்றால் அவ்வாறு கூற காரணம் என்ன...?அவ்வாறு சொன்னதால் அவர்கள் பெற்ற பொருளாதார பயன்பாடு என்ன...?   
               
 மேலுள்ள கட்டுரையில் எத்தனை கேள்விக்குறிகள் பல வாக்கிய முடிவுகளில் காழ்ப்புணர்ச்சியே கரைத்து குடித்தவர்களுக்கு அவை அனைத்தும் ஆச்சரியக்குறியை ஏற்படுத்தா விட்டாலும் பரவாயில்லை.அவர்கள் விமர்சிக்க முற்படும் இஸ்லாத்தில் அபாய குறிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டாம்.

         வெறுப்பில் வார்த்த சந்தேக சாவிக்கொண்டு  திறக்க முயற்சிக்காதீர்கள்: ஏனெனில் காற்றில் கட்டப்பட்ட கற்பனை கோட்டையல்ல, விமர்சன காற்று தினம் வந்து போக திறந்தே இருக்கும் உங்கள் எதிரில் உள்ள ஒற்றை மாடி வீடுதான்  இஸ்லாம்         

    இப்போது மீண்டும்  ஒருமுறை தலைப்பை உற்று நோக்குங்கள்...

          இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
"அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக! (17:49,50&51)

                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?"

Monday, July 12, 2010

ஆறு நாள் உலக படைப்பு- அபத்தமா?

                                                        ஓரிறையின் நற்பெயரால்...

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!

1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?


2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?
            
    பார்த்தீர்களா... குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்லபடுகிறது. ஆனால் இது எவ்வளவு பெரிய முரண்பாடு   ஆஹா.....    குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தெளிவு!

        மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.

   தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
    
முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
   திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் ஆறு
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது

   இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள், கட்டங்கள், நிலைகள் (STEPS/ STAGES ) என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,


  • அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
  • வசனம் :54
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.


Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)


  • அத்தியாயம் :யூனுஸ் (10)
  • வசனம் :03
     நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?


    Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)

  • அத்தியாயம் :ஹுது (11)
  • வசனம் :7
        மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.


   Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)

  • அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
  • வசனம் :59
  அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.


    Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)



  • அத்தியாயம் :காஃப் (50)
  • வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.


   Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)


  • அத்தியாயம் :அல் ஹதீத்(57)
  • வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.


 Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)

  மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...

    ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

     இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக..

   6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?

   பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு

                                                   6 X 24 = 144
                   144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்.,  குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.

     ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள். அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது

      ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

        மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.

   பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.

      தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.

 ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.

இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்


   அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,

  "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.


அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).


பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.


ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இதில் முதல் வசனத்திற்கு -  -2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு        -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு           -2 நாட்கள்

  ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.

    ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!

இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?

 குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையை நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம். ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
  
 ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)


(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)


     ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்படையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான், சிலவற்றை நீண்ட- நெடிய காலங்களுக்கு பிறகு வெளியாக்குகிறான்.

 தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்..,
 
  அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)

                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "ஆறு நாள் உலக படைப்பு- அபத்தமா?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்