"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, July 08, 2010

இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் -"மலக்குகள்"

                                               ஓரிறையின் நற்பெயரால்...
   மேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை

இறையின் படைப்பில்

    இறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல)தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் உருவாக்கி இருக்கிறான்.அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பினங்களை நாம் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.

1.மலக்குகள்


2.ஜின்கள்


3.மனிதர்கள்


4.மனிதர்கள் அல்லாத இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள் மற்றும்


5.உயிரற்ற பொருட்கள்

இங்கு மலக்குகள் குறித்து மட்டுமே பார்ப்பதால் ஏனைய படைப்பினங்கள் பற்றிய பார்வை வேண்டாம்.மேலே உள்ள பட்டியல் அப்படைப்பினங்களின் தரத்திற்கேற்பவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஆக மலக்குகள் மனித,ஜின் வர்க்கங்களை விட உயர்ந்த படைப்பு என்பது தெளிவு! அதை அடிப்படையாக வைத்தே இனியும் கட்டுரையை தொடருங்கள்.

மலக்குகள் யார்?

இறைனின் ஏவல்களை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களே மலக்குகள். அவனின் அனைத்து ஆணைகளுக்கும் உடன்படுவதே அவர்களின் தனிச்சிறப்பு. மேலும்,அதுவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கமும் கூட,
...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 சுருக்கம்)


      இவ்வாறு இறை படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மலக்குகள் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து குர்-ஆனில் சிலவற்றை பார்ப்போம்.
     பொறுப்புகள் பல அவர்கள் மீது சாட்டப்பட்டாலும் மனித சமுகத்தோடு அவர்களுக்கு உள்ள மிக முக்கியமான தொடர்புகள் குறித்து,

    *இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய தூதுவர்களுக்கு இறை புறத்திலிருந்து வெளிபடும் வேத வெளிப்பாட்டை (வஹீயை) அறிவிப்பது அவர்களின் தலையாய பணியாகும்.
அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். (16:02)

*மனிதர்கள் மேற்கொள்ளும் நன்மை/தீமைகளின் அடிப்படையில் அமைந்த அனைத்து செயல்களையும் பதிவு செய்கின்றனர்.
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (50:17)
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.(82:10-12)

*மனிதர்களுக்கு தாயின் கர்ப்ப அறைக்குள் உயிர் ஊதுவதும்,மனித வாழ்நாள் தவணை முடிந்ததும் அவர்களின் உயிரை கைப்பற்றுவதும் அவர்கள் செய்யும் பிறிதொரு பணியாகும்.
"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும். (32:11)
  
ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும், (47:27)

     மலக்குகள் செயல் பாட்டை மேற்கூறிய வசனங்களில் அறியலாம். மேலும் அவர்களை குறித்து அறிய...
அவர்களுக்கு மனிதனோடு கொண்ட தொடர்பு பற்றி
(2:30, 2:34, 7:11, 17:61, 18:50, 20:116, 38:73, 13:11, 82:10,86:4, 8:12, 40:7, 42:5, 3:123-126, 8:9,10)

இறைவனுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி
(2:30, 39:75, 40:, 42:5, 79:1-3)

பிற
(3:42, 2:98, 6:111,158, 15:78, 16:2,33, 25:21, 41:30, 97:4, 6:9, 17:95, 35:1, 37:149,150, 43:19, 53:26-28)


இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி,மலக்குகளுக்கு தனியானதொரு சக்தியோ,இறைவனுக்கு தன் தேவையின் அடிப்படையிலோ அவர்களுக்கு அச்செயல்பாடுகள் வழங்கப்படவில்லை.மாறாக இறைவனின் வல்லமையின் ஒரு வெளிப்பாடாகவே இது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் தன் திருமறையில்


 அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது. (40:68)


மேலே குறிப்பிடப்பட்டவை மலக்குகள் குறித்த ஆன்மிக பார்வை
இனி,.

மலக்குகள் இருப்பதை அறிவியலால் நிருப்பிக்க முடியுமா...?
    
  மலக்குகள் மனிதனை போன்றே ஒரு படைப்பை தவிர மனித படைப்பின் எத்தகையை அம்சமும் அவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் வைத்து தொடருங்கள்.,

    அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குர்-ஆனிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்., இன்று நம்மிடையே அறிவியல் என உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டு,பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.

    ஒரு எளிய நிகழ்வுதாரணம், இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல்,
 
    காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில், நேரங்களில், இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த நிகழ்வுகளை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து மிக தெளிவாக அறிகிறோம்.
   
      இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயல் வடிவத்தை வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னின்ன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை.
 
  இதற்கு விளக்கம்- எந்த அறிவியலாரிடமும் இருக்கிறதா...? வானவில் குறித்து அவர்கள் முன்னர் அறியாததே...!
 என்ற ஒரு காரணமே விடையாக இருக்கும், மேலும் இன்று நாம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கோட்பாடுகளாக வைத்திருக்கின்றோம்.

    மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து இனி மாறாது என எவரும் சொல்ல முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து யாரும் ,ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக வானவில் குறித்த "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" மேலும் ஒரு மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள்.

  ஆக,நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!,

         அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும்,எந்த நாட்டில் எவ்வளவு நேரம் தெரியும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த அறிவியலாருக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த எந்த வித தகவல்களும் இல்லை.,

    அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல்படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டை நாம் முன்னிருத்துவதில்லை

                இதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மிக அழகாக, தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும், யாருக்காகவும் எதற்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.

     அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் நாம் பார்க்கும் மலக்குகள் சார்ந்த கோட்பாடுகள் வருகிறது.

         ஆக மலக்குகளின் தன்மையை விளக்கி அவர்களை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே அவர்கள் குறித்த இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது. 

    குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று மலக்குகளை ஏற்க/நம்ப மறுப்போர் எவரும் மலக்குகள் குறித்து பேசும் போது அவர்(மலக்கு)கள் தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது., 

  எனவே யாரும் அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உளவியல் மற்றும் உணர்வுரீதியாக அவர்களின் இருப்பை அறிந்துக்கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது

  ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.

    அதுபோலவே ஏனைய மறுமை கோட்பாடுகள் குறித்த அறிவியல் நடவடிக்கையும்.,முரண்படாத அறிவியலுக்கு பொருந்தக்கூடிய எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே!

  ஒளியின் வேகத்தை விட,மிக வேகமாக செயல்படும் மலக்குகள் குறித்த ஆய்வை மனித உருவாக்க கருவிகளால் கண்டறிய முயல்வது எப்படி சாத்தியம்...அதுவும் அவர்கள் தனித்தன்மை தெளிவாக,விரிவாக கூறப்பட்ட பிறகும்...?
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

18 comments:

  1. அல்லாஹ் மிகத் தூய்மையானவன்..
    வானவர்கள் பற்றி மாற்றுமத சகோதரர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் உள்ளது.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    எல்லா புகழும் இறைவனுக்கே!
    சகோதரர் பாஸித் அவர்களுக்கு., நன்றி., தங்களின் ஆதரவையும்,ஆலோசனைகளையும் எதிர்ப்பார்க்கும்.,
    -ஓர் இறை அடிமை

    ReplyDelete
  3. அன்பு குலாம்,

    மலகுகளுக்கு மனிதனைப் போல சிந்திக்கும் ஆற்ரல் உண்டா?

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ

    இறைனின் ஏவல்களை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களே மலக்குகள். அவனின் அனைத்து ஆணைகளுக்கும் உடன்படுவதே அவர்களின் தனிச்சிறப்பு. மேலும்,அதுவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கமும் கூட,

    ...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 சுருக்கம்)

    இப்படி குர்-ஆனில் அல்லாஹ் தெளிவாக குறிப்பிட்டிருப்பதிலிருந்து அவர்கள் மனித- ஜீன் வர்க்கம் போல எதையும் சுயமாய் சிந்தித்து முடிவுகள் எடுக்க வாய்ப்பு அளிக்கப்படாத ஓர் இனம் என அறிய முடிகிறது..

    ReplyDelete
  5. நன்றி அன்பு குலாம். ஆனால் அல்பகரா 2:30 வசனம் அவர்கள் சுயமாக சிந்திப்பவர்கள் போலல்லவா கருத வைக்கிறது.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அதே அல்பகரா வசனம் 32 தெளிவாக உங்கள் கேள்விக்கு பதில் தருகிறதே சகோ இப்படி..

    அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (2:32)

    ReplyDelete
  7. அன்பு குலாம்,

    பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன் என இறைவன் கூறிய உடனே அல்லவா மலக்குகள் எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்கள் இது இப்படி கேளுங்கள் என கற்றுக்கொடுக்கப்பட்ட ஒன்றா?

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அன்பு சகோ... எதார்த்தத்தில் இதை படிக்கும் போது அப்படி தான் கேட்க தோன்றும்... மலக்குகள் என்பவர்கள் இறைவன் ஏவல்களுக்கு கட்டுப்பட கூடியவர்கள் என்று பல வசனங்களில் அல்லாஹ் சொல்வதை மேற்கண்ட ஆக்கத்தில் காணலாம். அப்படியிருக்க இந்த வசனத்தில் முரண்படுவதுப்போல் உங்களுக்கு தோன்றினால் அதற்கு இவ்விரு நிலைகளில் எதை சார்ந்த கருத்துக்கள் ஏனைய வசனங்களில் பிரதிபலிக்கிறதோ அதை மேற்கண்ட நிலையில் பொருத்தி அதில் நாம் தெளிவு பெற வேண்டும்...

    // பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன் என இறைவன் கூறிய உடனே அல்லவா மலக்குகள் எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்கள்//
    இப்படி கேட்கப்படும் போது அது எப்படி எதிர்க்கேள்வியாகும் சகோ... இறைவன் மனிதனை படைக்க போவதாக சொன்ன உடன் மலக்குகள் இப்படி கூறினாலும் அந்த வசனம் சொல்வதை முழுவதும் அறிய வேண்டும்.

    அந்த வசனத்தில்
    (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்;

    இதில் எந்த முரண்பாடும் இல்லை சகோ., ஏனெனில் மலக்குகள் என்றால் அவர்கள் இறைவனுக்கு மாறு செய்யும் எண்ணங்கள் இல்லாமல் படைக்கப்பட்ட படைப்பு. ஆனால் அப்படியில்லாமல் சுயமாய் சிந்தித்து நன்மையோ -தீமையோ செய்யும் தகுதிகளோடு பகுத்தறிவுக் கொண்டு செயல்படும் மனித படைப்பை படைக்க போவதாக இறைவன் மலக்குகளிடம் கூறி இருக்கலாம்... மேலும் அவர்கள் செயல்பாட்டை குறித்து அவர்களுக்கு விளக்கியும் இருக்கலாம்...

    இதனடிப்படையில் இறைவன் மனித படைப்பு குறித்து கூறியதை கேட்டபோது மலக்குகள் மேற்கண்ட பதில் வார்த்தைகளை சொல்லி இருப்பார்கள். இவை எனது ஊகங்கள் அல்ல., மாறாக குர்-ஆனே முன்மொழியும் உண்மைகள். ஏனெனில் மலக்குகள் இவ்வாறு கூற கேட்டதும் இறைவன்
    "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.

    ஆக ஏற்கனவே இறைவன் எதை அறிவித்துக்கொடுத்தானோ அந்த புரிதலில் மட்டுமே மலக்குகள் பதில் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் இறைவனின் இந்த பதிலை கேட்டு மலக்குகள் மீண்டும் சொன்ன பதில் தான் இங்கே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மேற்சொன்ன விளக்கத்தையும் உண்மைப்படுத்துகிறது

    அதாவது
    அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.

    // நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. // - என அவர்களே வாக்குமூலம் தந்த பிறகு.. இதில் ஐயங்கொள்ள என்ன இருக்கிறது சகோ...

    இன்ஷா அல்லாஹ் இதிலும் உங்கள் சந்தேகம் தொடர்ந்தால் மேலும் தொடருவோம்..

    அப்புறம் ஒரு விசயம்... உங்கள் பெயர் அபுபக்கர் என இருந்தாலும் எனது எண்ணப்படி நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்க வாய்ப்பில்லையென்பதைதான் உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது. சுமார் நான் இரண்டு முறை சலாம் சொல்லியும் உங்கள் பதில் சலாம் இல்லை. எந்த கருத்தில் முரண்பட்டாலும் ஒருவர் சலாமுக்கு பதில் சலாம் சொல்லாத ஒருவராக இருக்க மாட்டார்... அத்தோடு இதே கேள்வியை எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நாத்திக சகோதர் இதே தோரணையிலும் கேட்டார்.

    ஆக ஒருவேளை நீங்கள் முஸ்லிமாக இல்லாவிட்டாலும் நாத்திகராக இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உண்மையை அறிந்துக்கொள்வது தான் உங்கள் நோக்கம் என்றால் உங்கள் பெயரை உண்மையாக பதிந்து சந்தேகம் / விமர்சனம் / கேள்விகளை தொடரலாமே சகோ... உங்களின் பின்னூட்டங்கள் கண்ணியமாய் பதியப்படும் வரை... எந்த மட்டுறுதலும் இல்லாமல் இங்கே பிரசுரிக்கப்படும்..

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  9. அன்பு குலாம்,

    அப்படி விளக்கும்போது அதிலிருந்து எழுந்த மலக்குகளின் சந்தேக சொற்கள்தான் கவனிக்கப்பட வேண்டியவை.

    மலக்குகள் என்பவர்கள் இறைவன் கற்றுக் கொடுத்ததை மட்டுமே அறிந்தவர்கள். உதாரணத்திற்கு, அவர்களுக்கு இறைவன் சுபஹானல்லா என்று கற்றுக்கொடுத்து அதனைக் கூறுங்கள் என்றால் அதை மட்டுமே கூறிக்கொண்டிருப்பார்கள் அல்லவா! அதைவிடுத்து ஏன் அப்படி கூறச் சொல்கிறாய் என்று அவர்கள் கேட்டால் அங்கு பகுத்தறிவு வேலை செய்கிறது என்று பொருள் அல்லவா? அதனால்தான் நான் கேட்கிறேன், இது போன்ற ஒரு படைப்பை நான் படைக்கப் போகிறேன் என்று இறைவன் அவர்களிடம் கூறிய போது அதைக் கேட்டு அவர்கள் மனிதன் என்ற படைப்பு இறைவனால் படைக்கப்படுகிறது என்பதனை அறிந்து கொண்ட செயலோடு நின்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏன் படைக்கிறாய் என்ற கேள்வியினை கேட்டிருக்கிறார்கள். இங்கு அறிவு இயக்கம் பெற்றிருக்கிறது என்றுதானே புரிந்துகொள்ளமுடியும்.

    ReplyDelete
  10. அன்பு சகோ...
    உங்கள் உண்மை பெயர் அபுபக்கர் இல்லையென்பது எனக்கு தெரியும்...

    இங்கே முதலில் மலக்குகள் குறித்த குர்-ஆனின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    //...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 சுருக்கம்) //

    இங்கே அவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதில்லை என்பதே அவர்கள் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம். இங்கே படைக்கப்படும் மனித இனம் குறித்து இறைவன் கூறியவுடன்... அவர்கள் அதை மறுக்கவோ எதிர்க்கவோ இல்லை. மாறாக இறைவன் எதை அறிவித்து கொடுத்தானோ அதன் வாயிலாக சில செய்திகளை கூறுகிறார்கள். இந்த நிலைப்பாடு ஜின் இனத்தவனான இப்லிஸ் செய்த சுய சிந்தனை மூலமாக மேற்கொண்ட செயல் அல்ல. இரண்டிற்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களை அறிந்துக்கொண்டாலே இது தெளிவாக விளங்கும்...

    அத்தோடு இறைவனின் சொல்லுக்கு கட்டுபடுவார்கள் என்பது இறைவனுக்கு நன்றாய் தெரிந்திருக்க அவர்களிடம் இந்த கேள்வியை இறைவன் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அப்படி கேட்டாலும் அவர்கள் நீங்கள் சொல்வதுப்போல // அவர்கள் மனிதன் என்ற படைப்பு இறைவனால் படைக்கப்படுகிறது என்பதனை அறிந்து கொண்ட செயலோடு நின்றிருக்க வேண்டும். // அப்படி இருந்தால் மேற்கண்ட வசனம் இடம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஆக இதன் முலம் நமக்கு(மனித சமூகத்திற்கு) படிப்பினை ஏற்படுத்துவதற்காக அவர்கள் வாய் மொழி சொல்லாக இறைவன் சொல்ல வைக்கிறான்.

    மலக்குகள் குறிப்பாக அவனை துதிப்பதற்கும், மாறுபடாமல் இருப்பதற்குமே படைக்கப்பட்ட பிரத்தியேக படைப்பு. மற்ற படி அவர்களுக்கென்று சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால் ( வஹீ கொண்டு வருதல், உயிர் ஊட்டுதல், எடுத்தல், கப்ரில்) அதற்கு அவர்களுக்கு அறிவும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். மாறுபடுவதற்கும், ஏற்று நடப்பதற்கும் சிய சிந்தனை, அறிவு அவசியமானலும் அதே அறிவை கொண்டு மாறு செய்யாமல் ஏவல்களுக்கு மட்டுமே கட்டுபடுவதும் இறைவன் புறத்திலிருந்து சாத்தியமே...

    ReplyDelete
  11. உங்களின் கற்பனையில் உதித்த அனுமானமானங்கள் எல்லாம் பதிலாகாது அன்பு குலாம்.

    ReplyDelete
  12. சரிதான்... உங்கள் "கற்பனையில் உதித்த அனுமானங்கள்" மட்டும் அறிவார்ந்த கேள்விகள் !? அப்படிதானே சகோ?

    ReplyDelete
  13. //சரிதான்... உங்கள் "கற்பனையில் உதித்த அனுமானங்கள்" மட்டும் அறிவார்ந்த கேள்விகள் !? அப்படிதானே சகோ?//

    உங்களது விளக்கங்கள் எல்லாம் உங்களது கற்பனையில் உதித்த அனுமானங்கள்தான் என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி அன்பு குலாம்.

    ஆனால், என்னுடைய அனுமானங்கள் கற்பனையல்ல என்பதை விளக்க ஆயத்தமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  14. அன்பு சகோ.,

    முதலில்., உங்கள் பெயர் பதிந்து கருத்திட கூட உங்களுக்கு நேர்மையில்லை., அப்புறம் எங்கே இருக்கிறது உங்கள் சொல்லில் உண்மையான விளக்கங்கள்., நீங்கள் யார் என்பது எனக்கும் தெரியும்...

    முஸ்லிம் முகமூடி அணிந்து வரும் உங்களைப்போன்ற போலி உலவிகளுக்காக நான் அனானி ஆப்சனை திறந்து வைக்கவில்லை.,

    காலத்திற்கும் இப்படியே இருங்கள்
    :)

    ReplyDelete
  15. ///நீங்கள் யார் என்பது எனக்கும் தெரியும்//..

    தெரியாத, புரியாத, பார்த்திராத ஒன்றை தெரிந்ததுபோல் நடிப்பதும், தெரியும் என்று உறுதியாகப் பேசுவதும் நமக்கெல்லாம் பழக்கமான செயல்தானே, புதியதல்லவே!

    அன்பு குலாம்,

    எனது பெயருக்கும் குர்ஆன் வசன விளக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ன? நாம் என் பெயர் விளக்க விவாதத்திற்கு முன் அல்பகரா 2:30 விளக்க விவாதத்தை தொடரலாமே! எனது விளக்கத்தைக் கேட்பது உங்களுக்கும் நல்லது என்பதே என் கருத்து. ஏனெனில், பிற்கு குறிப்பிட்ட வசன விளக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா!

    ReplyDelete
  16. அன்பு சகோ அனானி,
    அல்பகரா வசனத்திற்கும் உங்களைப்போன்றவர்களுக்கும் அதிக சம்பந்தமில்லை. ஆனால் அபுபக்கர் என்ற பெயருக்கும் அல்பகராவிற்கும் அதிக தொடர்பு உண்டு, இந்த கருத்தாடல்களை பார்க்கும் பலருக்கு முஸ்லிம் அடையாளத்துடன் முரண்பாட்டுடன் குர்-ஆன் குறித்து பேசுவது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மத்தப்படி உங்கள் பெயர் மரம், செடி, கொடி என எதுவாக இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை.,

    குறைந்த பட்ச நேர்மைகூட தெரியாமல் அனானியாக வந்தாவது கருத்தை சொல்லலாம். ஆனால் பாருங்கள் இஸ்லாத்தை எதிர்க்க கூட உங்களுக்கு இஸ்லாமிய அடையாள பெயர் தான் தேவைப்படுகிறது.. இதெல்லாம் உங்களைப்போன்றவர்களுக்கு கை வந்த கலையாயிற்றே., அது சரி உங்கள் போன்றவர்கள் யார் தான் சொந்த பெயரில் எழுதி வருகிறீர்கள்... கேட்டால் புனைப்பெயர் எழுத்துலகில் அவசியமான ஒன்று என்று அங்கலாக்கிறீர்கள்...

    ஏது புனைப்பெயர்? தம் சொந்த பெயரை கூட சொல்ல தரமற்று அஃறிணைப்பெயர்களில் உலவுவது தான் உங்களின் தரத்திற்கு நீங்களே கொடுக்கும் சான்று...

    அடுத்த முறை வரும்போதாவது உங்கள் முகமுடியை கழற்றி வைத்து விட்டு உண்மை முகத்துடன் வர முயற்சியுங்கள்.,
    அடுத்து விவாதம் குறித்து பேசலாம்...

    ReplyDelete
  17. என் பெயரைத் தெரியப்படுத்தி விட்டால் கூட நம்பிவிடப் போகிறீர்களா என்ன! இருந்தாலும்................

    இந்த உலகில் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள என் தாய், தந்தையர் எனக்கு இட்ட பெயர் அபுபக்கர் சித்தீக்.

    அன்பு குலாம், நீங்கள் ஏதேதோ யார்யாருடனோ சம்பந்தப்படுத்தி எழுதுகிறீர்கள். ஏன் என்றுதான் விளங்கவில்லை? எனக்கு உங்கள் அளவிற்குக் கூட அநாகரிகமாகப் பேசத் தெரியாது குலாம்.

    முஸ்லீம் என்றால் இப்படித்தான் பேசவேண்டும் என்பது ஒரு மூடநம்பிக்கையின் பாற்பட்ட புரிதல். ஒருவேளை நான் தவறாக விளங்கியிருந்தால் அதற்கு சரியான விளக்கத்தை கொடுக்கவேண்டியது உங்களது கடமையல்லவா?

    ReplyDelete
  18. ஐயா., அபுபக்கரே.,

    உண்மையில் உங்களை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது இஸ்லாமிய தாய் தந்தையர் தான் என்றால்... தவறான இஸ்லாமிய புரிதலில் நீங்கள் இருப்பதாய் நான் உணர்கிறேன்.,

    முஸ்லிம் என்றால் எப்படி பேச வேண்டும் என்பது மூட நம்பிக்கையின் புரிதல் அல்ல., முஹம்மது நபியின் வழிமுறைப்படி பேசினால் மட்டுமே அவன் முஸ்லிம் என்ற புரிதல் எனக்கு.,

    இட்ஸ் ஓகே.,
    தொடர்வோம்., நீங்கள் முஸ்லிம் என சொன்னதால் நான் தொடர்வதாக எண்ண வேண்டாம்., ஏனெனில் நீங்கள் முஸ்லிமோ முஸ்லிம் அல்லாதவரோ அது இங்கே எனக்கு தேவையற்றது., உங்களின் உண்மை முகமும், உங்களுக்கு தவறாக விளங்கி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என நீங்கள் சொன்னதாலே நான் தொடர்கிறேன்.,

    சரி சொல்லுங்கள் மலக்குகள் குறித்த மூலத்தை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் ?

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்