"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, April 14, 2020

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹூ
இப்பதிவை படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

இச்சமூகத்தின் தலைவர்களை ஒருவர் விரும்பினால் அவரது கொள்கைகள், கோட்பாடுகளை பொது வாழ்வில் பின்பற்ற முனைவது யதார்த்தமான ஒன்று!

அதிலும் அத்தலைவர் தமக்கு ரொம்ப பிடித்தவரென்றால் அவரது சில செயல்பாடுகளை தம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவரவும் முயற்சிப்போம். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பொருந்தும்

ஆனால்... எந்த ஒரு தலைவரின் வாழ்வையும் அவரது காலத்தை தாண்டி நூறு சதவீகிதம் பின்பற்ற இவ்வுலகில் எவரும் முயற்சியெடுப்பதும் இல்லை. அதை பெரிதும் விரும்புவதும் இல்லை. இது தான் இந்த உலகியலின் பொது நியதி.

இதிலும் ஒரு தெளிவான விதிவிலக்கு இச்சமூகத்திற்கு உண்டு.
ஆம்! அவர் தாம் முஹம்மது நபி (இறைவன் அவர்களை பொருந்திக்கொள்வானாக)...

பொதுவாக முஸ்லிமல்லாதவர்களுக்கு அவர்கள் குறித்து ஒரு எண்ணம் உண்டு. அரேபியாவில் 1400 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவர் என்பதே அது... மேலும் அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற எண்ணமும் உண்டு. இவை முற்றிலும் தவறான புரிதலாகும் சகோஸ்...

ஏனெனில் கடவுளை நம்புவோர் நிச்சயம் முஹம்மது நபிக்குறித்து அறிந்துக்கொள்ளல் மிக இன்றியமையாதது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.. வாய்ப்பிருப்போர் நிச்சயம் சில நேரங்களை ஒதுக்கி படியுங்கள்., நடு நிலையோடு படிக்க தொடங்கினால் முடிவில் ஒன்று, அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக மாந்தர்களுக்கெல்லாம் தலைவர் என்பதை உணர்ந்துக்கொள்வீர்கள். இரண்டு அந்த மகத்தானவரின் வாழ்வை கண்டு வியப்பீர்கள்..

ஏனெனில் தன்னை இறைவனின் தூதுவராக அரேபிய பாலையில் பிரகடனம் செய்தபோது... தனது நம்பகதன்மையை நிருபிக்க அவர்கள் சொன்ன வார்த்தை "உங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்த எனது நாற்பது வருட வாழ்வை பாருங்கள்" என்பதே... எந்த தலைவனாலும் இச்சமூகத்திற்கு மத்தியில் தங்கள் கடந்த கால வரலாற்றை முன்வைத்து தம்மை ஆதாரிக்க சொல்ல முடியாது.

ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் தொடங்கி ஒட்டுமொத்த சமூகமே ஒரு மனிதரை அணுஅணுவாக பின்பற்ற முனைகிறதென்றால், அதுவும் தம் இனம், மொழி, நிறம், காலம் கடந்து தம் சுய விருப்பு வெறுப்புகளை விடுத்து அவரது பேச்சையும், செயலையும் தாங்கி பிடிக்கிறார்களென்றால் அந்த மனிதரின் வாழ்வு எத்தனை எத்தனை தாக்கத்தை தங்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கிறதென்று நடுநிலை பேணுவோர் அவசியம் ஆராய வேண்டும்.

பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தங்கள் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகளை விட ஏன் தங்கள் உயிரையும் விட அந்த மனிதரை நேசிக்கிறார்களென்றால் அவர் எப்படியானவர் என்பதையும், அவர் இந்த சமூகத்திற்கு சொன்னது என்னவென்பதையும் நீங்கள் ஒரு கணம் யோசிக்க கடமைப்பட்டிருக்கீறிர்கள் சகோஸ்...

உண்மையை அறியும் ஆர்வமும், நன்மையின் பக்கம் விரையும் ஆசையும் உங்களுக்கு உண்மையாகவே இருந்தால் வாழ்வில் ஒருமுறையேனும் அவர்களது வரலாற்றை காய்தல் உவர்த்தலின்றி படித்து பாருங்கள் வியப்பில் உங்கள் விழிகள் உயர்வதை விவரிக்க இயலாது.

அவர்களின் வாழ்வில் மனித படிப்பினைக்கு உகந்த குடும்பவியல்- பொருளியில்- அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த ஏராள செய்திகள் உண்டு. அதனை நானறிந்த வரையில் எல்லோரும் படித்திட ஏதுவாக சில ஆக்கங்களை கீழே கொடுத்திருக்கின்றேன். படியுங்கள் இறைவனின் நாடினால் தொடர்வோம் .

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)


உங்கள் சகோதரன்
குலாம்


முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் 




No comments:

Post a Comment

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்