"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, October 17, 2011

தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


                                             ஓரிறையின் நற்பெயரால்.,

    சமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,
=====================================
இத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,
=====================================
. . . 

 டெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,

 இப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத

உங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக..!! என்ற இஸ்லாமிய முகமனை திரித்து

// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். // 
 - என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.


2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

     இப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்)  விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,
(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)

      ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

   அதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்

On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.)

  என்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,

   ஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்

   தனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,


புரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...
நன்றி.!





தமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)
(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)

1. சகோதரி அஸ்மா:
 http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
 

2. சகோதரர் குலாம்: 
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
 

3. சகோதரர் Faaique:
http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
 

4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: 
http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
 

5. சகோதரர் அப்துல் பாசித்:  
http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
 

6. சகோதரர் ஹைதர் அலி:
 http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
 

7. சகோதரி ஆமீனா: 
http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
 

8. சகோதரர் ஜமால்: 
http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
 

9. சகோதரர் ரஜின்: 
http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
 

10. சகோதரர் இளம் தூயவன்:  
http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
 

11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்): 
http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
 

12. சகோதரர் கார்பன் கூட்டாளி:  
http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
 

13. சகோதரி ஜலீலா கமால்: 
http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
 

14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:  
http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
 

15. சகோதரர் ஹாஜா மைதீன்: 
http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
 

16. சகோதரர் HajasreeN:  
http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
 
17. சகோதரர் அரபுத்தமிழன்: 

18. சகோதரர் அப்துல் ஹகீம்:  
http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html
                                                   

    இறை நாடினால் இனியும் தொடரும்....

read more "தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!"

Wednesday, October 12, 2011

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

                                 ஓரிறையின் நற்பெயரால்
  • இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...? 
      விவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....
. . .
    விஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.
   
ஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.

கடவுளின் பிறப்பு..?
இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.

     அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.

  கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். ?

 மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்
 
      கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.? அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..?

     ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும்,  யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!


கடவுளின் இருப்பு..?


  கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்


     ஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள்? ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

     ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.

மேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.

          உதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.

  ஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,

  மாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,

   மனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.

   ஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு!

    அதனடிப்படையில்,
  • மனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும், 
  •  எந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும், 
  • எண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்?????
 ஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக
எதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..!


படைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.  (02:255)

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்.""

Thursday, October 06, 2011

ஒரு நீதிக்கவிதை..!


சூரியனுக்கும் தாகமெடுக்கும் நண்பகல் கோடை
கானல் நீரும் கரைந்துப்போகும் கடுமையான சூடு...
எங்கு நோக்கினும்.,
வெப்பக்காற்றின் வேதனையான வருடல்...
எச்சில்- விலை என்ன என்றுக்கேட்க தோன்றும் நாவறட்சி

புழுதிப்படிந்த பெருந்திறலில்
திசைமாறிய தசை உருவம்
உயிரற்ற காற்றின் உஷ்ணம் தாங்காமல் மேலெழும்பி -கீழே
மயங்கிவிழும் மஞ்சள் நிற மணல் நிறைந்த 
பாலை தேசத்தின் நடுவே

கண்களுக்குள் விரல் புதைத்து வாழ்வின் வழி செல்ல
மெல்ல மெல்ல தள்ளாடி வந்தது....
அயர்ந்த அவ்வேளையிலும்
வறண்ட வாய் தேசம் புக துளித் தண்ணீரை தேடி
சுடுமணலில் சுருங்கி நின்றது

சுழற்றி அடிக்கும் சூறாவளின் சுவாலைகளில்
சுழலாமல் கருக்கும் அனலின் சுவாசங்களில் - சிக்குண்டும்
ஒற்றை உயிர் இனியும் உலவ வேண்டும் என்ற எண்ணத்தில்
கண்ணின் வழி
காட்சிகளை
பற்றி பிடிக்க...

சற்றே தூரத்தில் அசாதரணமாய் ஏதோ தென்பட
அங்கேணும் தண்ணீர்
கிடைக்குமா
என சந்தேகத்தில் கண்கள் கண்ணீர் கொண்டது
கிடைக்கும் இந்த தேசத்தில்...
கால்கள் நம்பிக்கை கொண்டது.

கால் வாசி உயிரும்
முக்கால் வாசி உணர்வும் அற்ற நிலையில்
அவ்விடம் நோக்கி தேகம் மையல் கொண்டன
தண்ணீரின் தடயங்கள் இருப்பதை பார்த்து
தாகத்தின் சுவடுகள் சாந்தம் கொண்டன...

ஆயிரம் வால்ட் மின்சாரத்தை
அதிவேகமாக மின்மினி பூச்சிகளில் புகுத்திய
புத்துணர்ச்சி...
காரணம் கண்ட காட்சி
அகல விழி திறந்து
ஆராவாரம் அற்ற அப்பகுதியில்
அறிவார்ந்து
அதை நோக்கிய போது

கரைப்படிந்த பாத்திரம் - எனினும்
அதனுள்ளே கால்வாசி தண்ணீர்..!
அதிர்ச்சி விழிகளில் ஆசை தீ பரவ
எடுத்து பருகும் எண்ணத்தில்
பாத்திரம் நோக்கி தம் கரம் நீட்ட
பாத்திரம் தொடும் முன் ஒரு பத்திரம்
கண் சுட்டது

ஆம்! அங்கே ஒரு பலகை
பலவகை வார்த்தைகளுடன்.,
நேற்றி சுருக்கி எழுத்தை ஆராய்ந்தான்...


                                                                  அறிவிப்பு
====================================================================
  இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணிரை அருகே இருக்கும் குழாயில் ஊற்றி
பம்பில் அடித்தால் தண்ணீர் வரும்- 
குடித்து முடித்தப்பின் அந்த பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி இங்கு வைத்து விடவும.
=====================================================================

" வார்த்தைகள் படித்ததும் வரையறையற்ற குழப்பம்.."

அருகே...
ஆயிரம் வருடங்களுக்கும் மேலான
அரதபுரதான...
ஆழ்துளை ஆயுத குழாய் - தண்ணீர்
வருவதற்கான அடையாளங்களை முற்றிலும் தொலைத்த
அறிகுறீகளுடன் அயர்ந்து நின்றது.

வார்த்தை பிழையென்றால்
தண்ணீரும் வீண்
தம் உயிரும் வீண்
செய்முறை பயிற்சிப்படி செயல்பட மனம் மறுத்தது

 சுயநல சுருக்கு
சிந்தையை இறுக்கி கட்டியது
சூன்யமாய் விளக்கி...
கொண்ட தாகத்தை பெரிதாய் காட்டியது
முடிவில் முரண்பாட்டு அறிவு சொன்னதை
முழுதாய் மனம் ஏற்றது

பருகலாம் என்று பத்திரமாய் எடுத்த
பாத்திரம் வாய்வரை செல்ல
உதட்டின் ஓரத்தில் ஒருதுளி விழ
சுளிரென்று சுட்டது சுய சிந்தனை

எழுதிய வார்த்தைகள் உண்மையென்றால்...
அறிவற்று அனேக மக்களுக்கு
அநீதி விளைவித்தவன் போலாவேனே...?

இன்றைய என் சுய நலத்திற்காக
இந்நீர்அருந்தினால்
இவ்விடம் நோக்கும்
நாளைய மனிதர்களின் நல்வாழ்வை நாசமாக்குதல்
சரியா...?

பராவயில்லை.,
இருக்கும் தண்ணிரை குழாயில் ஊற்றுவோம்
எழுதியது பொய்யென்றால்
பயனற்று போவது நம்வாழ்வு மட்டும்
உண்மையென்றால்
பயனடையபோவது
இனிவரும் எல்லோரும் தான்

முடிவாய் குழாயில் நீர் ஊற்ற
முடிவு செய்தான்.

ஊற்றினான்..!
ஒன்றும் ஆகவில்லை -எனினும்
உயிர் இன்னும் போகவில்லை... எண்ணிணான்
சில நிசப்தங்களுடன் கணங்கள் தொடர்ந்தன


ஆச்சரியம்!
இறக்க முனைந்தவனின் மீது 
இரக்கம் கொண்டதோ என்னவோ...
மெல்ல தலைக்காட்டிய  தண்ணீர்
புவியில் கால்ப்பதித்த மகிழ்ச்சியில்
குழாயின் வாய் பிளந்து
தம் வருகையே
அதிகரித்தது...

வாயில் நுழைந்த நீர் அவனது
வாழ்வையை ஈரமாக்கியது
புத்துணர்ச்சி...பூ
அப்பாலையில் புதிதாய் பூத்தது
மனமகிழ்ச்சி பொங்க.. அள்ளி பருகிய
நீர்
தாகத்தை தகர்த்தது...
பெருகிய வெள்ளத்தில் அவனது
சுயநல அழுக்கு அடித்துப்போனது...

நிரம்ப குடித்த மகிழ்ச்சியில்
கடவுளுக்கு நன்றி உதிர்த்துவிட்டு
பவ்யமாய் பழைய பாத்திரத்தில்
புதுநீர் புகுத்தி
நலமுடன் வைத்து

வெற்றி புன்னகையோடு
வடக்கோ தெற்கோ.. ஏதும் அறியாமல்
வாழ்வியல் திசை நோக்கி புறப்பட்டான்...
அந்த பொதுநல விரும்பி..!

.  .  .

 இந்த நீதிக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்., எனினும் கவிதை வடிவில் எழுத இங்கு சிறிய முயற்சி.

     நம் எல்லோர் வாழ்விலும் இக்கட்டான சில தருணங்கள் வரத்தான் செய்கிறது. எனினும் சுய நலமிக்க மனிதர்கள் கிடைக்கும் அந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்... ஆனால் அத்தருண சுய நலங்கள் பலரது வாழ்வையை அழித்து விடுகிறது., ஆக நமக்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் பொது நல விரும்பியாக இருக்கவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதே இக்கதை சொல்லும் நீதி!!!


read more "ஒரு நீதிக்கவிதை..!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்