ஓரிறையின் நற்பெயரால்
நாத்திகர்கள் -
பொதுவாக இந்த சமூகத்தில் இறை மறுப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பதிவுலகில் இஸ்லாத்தை எதிர்ப்பதிலே அவர்கள் குறியீடு அதிகம் அறியப்படுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமல்ல. பதிவுலகில் அவர்கள் சார்ந்த கொள்கைகளை விளக்கி இடும் பதிவுகளை காட்டிலும் இஸ்லாத்தை சாடி வெளியிடும் ஆக்கங்களே மிக மிக அதிகம்!
- பெண்ணடிமைத்தனம் ,
- சம நீதியின்மை
- ஆணாதிக்கம்
- தீவிரவாதம்
- மரண தண்டனைகள்
- அடிமை வாழ்வு
இவைகள் போல பல இஸ்லாத்தோடு இணைக்கப்பட்டு பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இன்னும் சிலர் வேத வரிகளுக்கும் தூதர் மொழிகளுக்கும் தன்னிலை விளக்கம் அளித்து அதை பொதுவாக்கி விமர்சிக்கிறார்கள். இன்னும் ஆச்சரியம்! ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்ட அதே புரிதலும் அதே கேள்விகளும் தான் இன்றளவும் விமர்சனங்களாக இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. பதில்கள் தெளிவாய் தரப்பட்ட பின்னரும்...
விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அவை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. மாற்றுக்கருத்து தாரளமாய் இருக்கலாம், அது நம் ஆய்வின் சரியான திசை நோக்க பயன்படும். ஆனால் நாத்திகர்களுக்கோ அந்த விளக்கங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை. இறுதிவரை அவர்களின் கேள்விகள் எங்கேயும் கேள்விகளாகவே மட்டுமே இருக்கப்பட வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும் போலும்!
ஆனால் பாருங்கள் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் - அது ஆணாதிக்க மதம் வேண்டாம் என்கிறார்கள். சரி ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக்கொண்டாலும் எவை மனிதக்குல முழுமைக்கும் தேவை அவை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி எங்கேயும் பதிவுகள் இடுவதில்லை. அதுக்குறித்து விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதில்லை.
எவரும் தாம் ஏற்ற கொள்கை கோட்பாடுகளை விளக்கி அதன் பின்பற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை பொதுவில் முன்மொழிவதில்லை. சமூகத்திற்கு நலன் பயக்கும் பெயரில் ஆக்கங்கள் சில இட்டாலும், இஸ்லாம் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியே அவர்களது பெரும்பாலான கட்டுரைகள் இருக்கின்றன. ஆக என்ன சொல்லவருகிறார்கள் அவர்கள்...?
தம் கொள்கை எப்படியும் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் -சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டவர்கள் நாத்திகர்களென்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் அவர்கள்.
தமிழில் நாத்திகம் - பரிணாமத்தை எதிர்த்து பதிவிடும் முஸ்லிம் தளங்கள் மிகக்குறைவு. (அப்படி விமர்சிக்கும் தளங்களில் கூட கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்யப்படுகிறது.) முஸ்லிம் பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி விளக்கியே மக்களை அதன் பால் அழைக்கிறார்கள்.
தமிழில் நாத்திகம் - பரிணாமத்தை எதிர்த்து பதிவிடும் முஸ்லிம் தளங்கள் மிகக்குறைவு. (அப்படி விமர்சிக்கும் தளங்களில் கூட கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்யப்படுகிறது.) முஸ்லிம் பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி விளக்கியே மக்களை அதன் பால் அழைக்கிறார்கள்.
ஆக நாத்திகத்தை எதிர்க்கமாலும் முஸ்லிம் பதிவர்களால் தங்களின் நிலைப்பாட்டை இணையத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்காமல் எந்த நாத்திக பதிவராலும் தம்மை பதிவுலகில் தக்கவைத்து கொள்ள முடியவில்லையென்பதை தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகிறது.
இதற்கு என்ன காரணம்...?
ஆயிரமாயிரம் கொள்கைகளும் கோட்பாடுகளும் நாத்திகத்திற்கு எதிராய் உலகில் இருக்க இஸ்லாம் மட்டும் ஏன் பிரதானமாக விமர்சிக்கப்படுகிறது?
பதிவின் மையக் கருத்தே இது தான்.. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்
இங்குள்ள எந்த நாத்திகரும்
- வானமும்- பூமியும் படைக்கப்பட்டதன் நிலையறிந்து இவை கடவுளால் படைக்கப்பட வாய்ப்பில்லையென உணர்ந்து மதத்திலிருந்து வெளியேறினார்களா..? இல்லை.,
- காற்றும், மழையும், பிறப்பும், இறப்பும் உண்டாக்க ஒரு கடவுள் தேவையில்லையென்பதை அறிவியல் அளவுகோலில் துல்லியமாக அளந்து கடவுளை மறுத்தார்களா...? என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்க முடியும்
பின் எப்படி மத வெளியேற்றம்...?
எந்த ஒரு மனிதனின் இயல்பு நிலை மாற்றத்திற்கு முதன்மை காரணம் வளரும் சூழலில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்கள். அக்காலங்களில் பயிற்றுவிக்கப்படும் எதுவும் பிற்கால செயல்களில் பிரதிபலிக்க நூறு சதவீகித வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் போதிய அறிவின்றி தவறாகவோ அல்லது புரிதலற்ற முறையிலோ தனக்கு பயிற்றுவிக்கப்படும் கடவுள் கொள்கைகளை உண்மையென ஏற்று பின்னாளில் அவற்றை நிதர்சன வாழ்வில் பொருத்தும் போது நிச்சயமாக அது தனதறிவுக்கு தவறாக தான் காட்டும். அத்தோடு தன் நிலையில் தலைக்கீழ் மாற்றத்தை தான் ஏற்படுத்தும்.
அப்படி பயிற்றுவிக்கப்படுவது இஸ்லாமாக இருந்தாலும் சரியே... அதனால் தான் இணைய உலவிகளில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அனேகர் சொல்வது நான் முன்னாள் முஸ்லிம் என்று... அவர்களின் இம்மாற்றத்திற்கு காரணம் தனக்கு தவறாக விளக்கப்பட்ட இஸ்லாமே தவிர நபிகளார் விளக்கிய இஸ்லாமல்ல.,
அப்படி பயிற்றுவிக்கப்படுவது இஸ்லாமாக இருந்தாலும் சரியே... அதனால் தான் இணைய உலவிகளில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அனேகர் சொல்வது நான் முன்னாள் முஸ்லிம் என்று... அவர்களின் இம்மாற்றத்திற்கு காரணம் தனக்கு தவறாக விளக்கப்பட்ட இஸ்லாமே தவிர நபிகளார் விளக்கிய இஸ்லாமல்ல.,
பின்னாளில் பொதுவில் வந்து அறிவியலாக்க முயலும் பரிணாமத்தையும், கடவுள் குறித்த (தவறாக கற்றுணர்ந்த) தர்க்கரீதியான வாதங்களையும் தோதாக வளைத்து தம் மத வெளியேற்றத்திற்கு இதுவே நிலையான காரணம் என சொல்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் தங்களின் திருமணம், மற்றும் பொது நிகழ்வுகளை ஏதாவது ஒரு மதம் சார்ந்த அடிப்படையிலே செய்து வருகின்றனர்.
அவ்வபோது பொதுவில் எங்கும் கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே எல்லாம் கடவுள் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு பண்டிகை கால வாழ்த்து செய்திகளை பின்னூட்டமாய் பரிமாறுகிறார்கள். இது எதுமாதிரியான கொள்கை பிடிப்போ தெரியவில்லை.? ஆனால் இஸ்லாத்தை மட்டும் தொடர்ந்து தாக்கி எழுத பட வேண்டும் ? ஏன்?
உளவியல் ரீதியாக சிந்தித்தால் எளிதாக உணரலாம்.
உளவியல் ரீதியாக சிந்தித்தால் எளிதாக உணரலாம்.
நாத்திகத்திற்கு நேர் எதிர் கொள்கை ஒன்று உலகில் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே!
பொதுவாக மதங்கள், கடவுள் உண்டென்பதை உறுதியாக நம்பினாலும், கடவுளை வணங்கப்பட வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே வைத்து பார்க்கிறது. கடவுளின் தலையீடு பூஜை, புனஷ்காரம் போன்ற செயல்களிலோ, பண்டிகை தினங்களிலோ அல்லது விழாக்காலங்களிலோ மட்டுமே பிரதான படுத்தப்படுகிறது.
நடைமுறை வாழ்வின் பெரும்பாலான செயல்களுக்கு தங்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கிறார்கள். கடவுளின் கட்டளை ஏற்று நடப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்பதை மறைமுகமாக ஏற்றும் கொள்கிறார்கள். இன்று ஒரு மதம் சார்ந்த இருவர் பேசிக்கொள்ளும் போது கடவுள் குறித்தோ அல்லது அவனது கட்டளைக்குறித்தோ பேசுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. கடவுளின் தாக்கம் அவர்களின் செய்கைகளில் வெளிப்படுவது மிக மிக குறைந்தே இருக்கிறது.
இந்நிலை நாத்திகத்திற்கு மிக வசதியாய் போயிற்று மதம் உருவாக்கிய கடவுள்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி விமர்சித்தாலும் அவற்றை அவர்கள் பொருட்டாய் கொள்வதும் இல்லை.
ஆனால் இஸ்லாம் மட்டுமே வணக்க வழிப்பாட்டோடு கடவுளை ஒரங்கட்டாமல் எந்த ஒரு காரியமெனிலும் அதற்கு கடவுளின் ஓப்புதலை பொருத்தி பார்க்க சொல்கிறது. சரியென்றால் அவற்றை பின்பற்ற சொல்கிறது. தவறேன்றால் விட்டு விலக சொல்கிறது. சர்வ சாதரணமாக சந்திக்கும் தருணங்களில் கூட சலாத்தினையே முதலில் சொல்ல பணிக்கிறது. கல்யாண பத்திரிக்கையில் மட்டும் கடவுள் பெயர் பொதிக்காமல் காலம் முழுவதுமே கடவுளின் தலையீட்டை அவசியமாக்குகிறது.
இப்படி இஸ்லாம் நாத்திகத்திற்கு எதிராய் தம் இருப்பை மௌனத்தால் முன்னிருத்துவதால் நாத்திகத்தின் வெறுப்பும் எதிர்ப்பும் இஸ்லாத்தின் மீது இயல்பாகவே திரும்புகிறது. தமது கொள்கைகளை கட்டிக்காக்க வேண்டிய தருணத்திற்கு நாத்திகம் தள்ளப்படுகிறது. எவ்வளவு பெரிதாய் தம் கோட்டை நாத்திகம் வரைந்தாலும் அதையும் தாண்டி இஸ்லாமிய கோடு பயணிப்பதை நாத்திகம் நிதர்சனமாக உணர்கிறது.
இந்நிலை மாற ஒரே வழி எதிரில் இருக்கும் கோட்டை சிறிதாக்க வேண்டும் அதற்கு அக்கோட்டை அழிக்கவேண்டும் மக்களின் மனதில் நாத்திகம் உயர்ந்த கொள்கையாக எண்ணப்பட வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் இஸ்லாம் குறைப்படுத்த படவேண்டும். ஆம்! அதைத்தான் நாத்திகம் இப்போது செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறது
ஆனால்...
பெயரளவிற்கு மட்டும் கடவுளை ஏற்று...
முஹம்மதை (ஸல்) முன்னமே மறந்து...
வெள்ளிக்கிழமை மட்டுமே இறை தொழுது...
பொழுது போகா விட்டால் மட்டுமே மார்க்கம் பேசி...
எந்த கொள்கையும் தம் சொந்த கொள்கையாக நிறுவி
போலி சமத்துவம் பேச
போலி சமத்துவம் பேச
முஸ்லிம்கள் கற்றுக்கொண்டால்
விமர்சனம் ஏதுமின்றி
பொதுவில் கூட
நாத்திகம் விரும்பும் இஸ்லாம்...! இணையமெங்கும் காட்சியளிக்கும்
பிறச்சேர்க்கை: இந்த தளம் Blog spot லிருந்து dot Com ற்கு மாறி இருப்பதால் இப்பதிவை மீண்டும் புதிதாக தமிழ்மணம் திரட்டி உள்ளது. ஓட்டு போட்டவர்கள் (குறிப்பாய் மைனஸ் ஓட்டுகளை )மீண்டுமொருமுறை போட்டுக்கொள்ளவும்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்