"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, March 27, 2012

நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?

                                              ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகர்கள் - 

பொதுவாக இந்த சமூகத்தில் இறை மறுப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பதிவுலகில் இஸ்லாத்தை எதிர்ப்பதிலே அவர்கள் குறியீடு அதிகம் அறியப்படுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமல்ல. பதிவுலகில் அவர்கள் சார்ந்த கொள்கைகளை விளக்கி இடும் பதிவுகளை காட்டிலும் இஸ்லாத்தை சாடி வெளியிடும் ஆக்கங்களே மிக மிக அதிகம்!

  • பெண்ணடிமைத்தனம் ,
  • சம நீதியின்மை
  • ஆணாதிக்கம்
  • தீவிரவாதம்
  • மரண தண்டனைகள்
  • அடிமை வாழ்வு

இவைகள் போல பல இஸ்லாத்தோடு இணைக்கப்பட்டு பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இன்னும் சிலர் வேத வரிகளுக்கும் தூதர் மொழிகளுக்கும் தன்னிலை விளக்கம் அளித்து அதை பொதுவாக்கி விமர்சிக்கிறார்கள். இன்னும் ஆச்சரியம்! ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்ட அதே புரிதலும் அதே கேள்விகளும் தான் இன்றளவும் விமர்சனங்களாக இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. பதில்கள் தெளிவாய் தரப்பட்ட பின்னரும்...

விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அவை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. மாற்றுக்கருத்து தாரளமாய் இருக்கலாம், அது நம் ஆய்வின் சரியான திசை நோக்க பயன்படும். ஆனால் நாத்திகர்களுக்கோ அந்த விளக்கங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை. இறுதிவரை அவர்களின் கேள்விகள் எங்கேயும் கேள்விகளாகவே மட்டுமே இருக்கப்பட வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும் போலும்!

ஆனால் பாருங்கள் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் - அது ஆணாதிக்க மதம் வேண்டாம் என்கிறார்கள். சரி ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக்கொண்டாலும் எவை மனிதக்குல முழுமைக்கும் தேவை அவை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி எங்கேயும் பதிவுகள் இடுவதில்லை. அதுக்குறித்து விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதில்லை. 

எவரும் தாம் ஏற்ற கொள்கை கோட்பாடுகளை விளக்கி அதன் பின்பற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை பொதுவில் முன்மொழிவதில்லை. சமூகத்திற்கு நலன் பயக்கும் பெயரில் ஆக்கங்கள் சில இட்டாலும், இஸ்லாம் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியே அவர்களது பெரும்பாலான கட்டுரைகள் இருக்கின்றன. ஆக என்ன சொல்லவருகிறார்கள் அவர்கள்...?

தம் கொள்கை எப்படியும் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் -சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டவர்கள் நாத்திகர்களென்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் அவர்கள்.

தமிழில் நாத்திகம் - பரிணாமத்தை எதிர்த்து பதிவிடும் முஸ்லிம் தளங்கள் மிகக்குறைவு. (அப்படி விமர்சிக்கும் தளங்களில் கூட கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்யப்படுகிறது.) முஸ்லிம் பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி விளக்கியே மக்களை அதன் பால் அழைக்கிறார்கள். 

ஆக நாத்திகத்தை எதிர்க்கமாலும் முஸ்லிம் பதிவர்களால் தங்களின் நிலைப்பாட்டை இணையத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். 
ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்காமல் எந்த நாத்திக பதிவராலும் தம்மை பதிவுலகில் தக்கவைத்து கொள்ள முடியவில்லையென்பதை தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகிறது. 

இதற்கு என்ன காரணம்...? 

ஆயிரமாயிரம் கொள்கைகளும் கோட்பாடுகளும் நாத்திகத்திற்கு எதிராய் உலகில் இருக்க இஸ்லாம் மட்டும் ஏன் பிரதானமாக விமர்சிக்கப்படுகிறது?

பதிவின் மையக் கருத்தே இது தான்.. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்

                


இங்குள்ள எந்த நாத்திகரும்

  • வானமும்- பூமியும் படைக்கப்பட்டதன் நிலையறிந்து இவை கடவுளால் படைக்கப்பட வாய்ப்பில்லையென உணர்ந்து மதத்திலிருந்து வெளியேறினார்களா..? இல்லை., 
  • காற்றும், மழையும், பிறப்பும், இறப்பும் உண்டாக்க ஒரு கடவுள் தேவையில்லையென்பதை அறிவியல் அளவுகோலில் துல்லியமாக அளந்து கடவுளை மறுத்தார்களா...? என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்க முடியும் 
பின் எப்படி மத வெளியேற்றம்...? 

எந்த ஒரு மனிதனின் இயல்பு நிலை மாற்றத்திற்கு முதன்மை காரணம் வளரும் சூழலில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்கள். அக்காலங்களில் பயிற்றுவிக்கப்படும் எதுவும் பிற்கால செயல்களில் பிரதிபலிக்க நூறு சதவீகித வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் போதிய அறிவின்றி தவறாகவோ அல்லது புரிதலற்ற முறையிலோ தனக்கு பயிற்றுவிக்கப்படும் கடவுள் கொள்கைகளை உண்மையென ஏற்று பின்னாளில் அவற்றை நிதர்சன வாழ்வில் பொருத்தும் போது நிச்சயமாக அது தனதறிவுக்கு தவறாக தான் காட்டும். அத்தோடு தன் நிலையில் தலைக்கீழ் மாற்றத்தை தான் ஏற்படுத்தும்.

அப்படி பயிற்றுவிக்கப்படுவது இஸ்லாமாக இருந்தாலும் சரியே... அதனால் தான் இணைய உலவிகளில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அனேகர் சொல்வது நான் முன்னாள் முஸ்லிம் என்று... அவர்களின் இம்மாற்றத்திற்கு காரணம் தனக்கு தவறாக விளக்கப்பட்ட இஸ்லாமே தவிர நபிகளார் விளக்கிய இஸ்லாமல்ல., 

பின்னாளில் பொதுவில் வந்து அறிவியலாக்க முயலும் பரிணாமத்தையும், கடவுள் குறித்த (தவறாக கற்றுணர்ந்த) தர்க்கரீதியான வாதங்களையும் தோதாக வளைத்து தம் மத வெளியேற்றத்திற்கு இதுவே நிலையான காரணம் என சொல்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் தங்களின் திருமணம், மற்றும் பொது நிகழ்வுகளை ஏதாவது ஒரு மதம் சார்ந்த அடிப்படையிலே செய்து வருகின்றனர். 

அவ்வபோது பொதுவில் எங்கும் கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே எல்லாம் கடவுள் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு பண்டிகை கால வாழ்த்து செய்திகளை பின்னூட்டமாய் பரிமாறுகிறார்கள். இது எதுமாதிரியான கொள்கை பிடிப்போ தெரியவில்லை.? ஆனால் இஸ்லாத்தை மட்டும் தொடர்ந்து தாக்கி எழுத பட வேண்டும் ? ஏன்?

 உளவியல் ரீதியாக சிந்தித்தால் எளிதாக உணரலாம்.

நாத்திகத்திற்கு நேர் எதிர் கொள்கை ஒன்று உலகில் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே! 

பொதுவாக மதங்கள், கடவுள் உண்டென்பதை உறுதியாக நம்பினாலும், கடவுளை வணங்கப்பட வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே வைத்து பார்க்கிறது. கடவுளின் தலையீடு பூஜை, புனஷ்காரம் போன்ற செயல்களிலோ, பண்டிகை தினங்களிலோ அல்லது விழாக்காலங்களிலோ மட்டுமே பிரதான படுத்தப்படுகிறது.      
  
நடைமுறை வாழ்வின் பெரும்பாலான செயல்களுக்கு தங்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கிறார்கள். கடவுளின் கட்டளை ஏற்று நடப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்பதை மறைமுகமாக ஏற்றும் கொள்கிறார்கள். இன்று ஒரு மதம் சார்ந்த இருவர் பேசிக்கொள்ளும் போது கடவுள் குறித்தோ அல்லது அவனது கட்டளைக்குறித்தோ பேசுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. கடவுளின் தாக்கம் அவர்களின் செய்கைகளில் வெளிப்படுவது மிக மிக குறைந்தே இருக்கிறது.

இந்நிலை நாத்திகத்திற்கு மிக வசதியாய் போயிற்று மதம் உருவாக்கிய கடவுள்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி விமர்சித்தாலும் அவற்றை அவர்கள் பொருட்டாய் கொள்வதும் இல்லை.

ஆனால் இஸ்லாம் மட்டுமே வணக்க வழிப்பாட்டோடு கடவுளை ஒரங்கட்டாமல் எந்த ஒரு காரியமெனிலும் அதற்கு கடவுளின் ஓப்புதலை பொருத்தி பார்க்க சொல்கிறது. சரியென்றால் அவற்றை பின்பற்ற சொல்கிறது. தவறேன்றால் விட்டு விலக சொல்கிறது. சர்வ சாதரணமாக சந்திக்கும் தருணங்களில் கூட சலாத்தினையே முதலில் சொல்ல பணிக்கிறது. கல்யாண பத்திரிக்கையில் மட்டும் கடவுள் பெயர் பொதிக்காமல் காலம் முழுவதுமே கடவுளின் தலையீட்டை அவசியமாக்குகிறது.

இப்படி இஸ்லாம் நாத்திகத்திற்கு எதிராய் தம் இருப்பை மௌனத்தால் முன்னிருத்துவதால் நாத்திகத்தின் வெறுப்பும் எதிர்ப்பும் இஸ்லாத்தின் மீது இயல்பாகவே திரும்புகிறது. தமது கொள்கைகளை கட்டிக்காக்க வேண்டிய தருணத்திற்கு நாத்திகம் தள்ளப்படுகிறது. எவ்வளவு பெரிதாய் தம் கோட்டை நாத்திகம் வரைந்தாலும் அதையும் தாண்டி இஸ்லாமிய கோடு பயணிப்பதை நாத்திகம் நிதர்சனமாக உணர்கிறது. 

 இந்நிலை மாற ஒரே வழி எதிரில் இருக்கும் கோட்டை சிறிதாக்க வேண்டும் அதற்கு அக்கோட்டை அழிக்கவேண்டும் மக்களின் மனதில் நாத்திகம் உயர்ந்த கொள்கையாக எண்ணப்பட வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் இஸ்லாம் குறைப்படுத்த படவேண்டும். ஆம்! அதைத்தான் நாத்திகம் இப்போது செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறது 

ஆனால்...
பெயரளவிற்கு மட்டும் கடவுளை ஏற்று...
முஹம்மதை (ஸல்) முன்னமே மறந்து... 
வெள்ளிக்கிழமை மட்டுமே இறை தொழுது...
பொழுது போகா விட்டால் மட்டுமே மார்க்கம் பேசி...
எந்த கொள்கையும் தம் சொந்த கொள்கையாக நிறுவி
போலி சமத்துவம் பேச
முஸ்லிம்கள் கற்றுக்கொண்டால்

விமர்சனம் ஏதுமின்றி
பொதுவில் கூட
நாத்திகம் விரும்பும் இஸ்லாம்...! இணையமெங்கும் காட்சியளிக்கும்


பிறச்சேர்க்கை:  இந்த தளம் Blog spot லிருந்து dot Com ற்கு மாறி இருப்பதால் இப்பதிவை மீண்டும் புதிதாக தமிழ்மணம் திரட்டி உள்ளது. ஓட்டு போட்டவர்கள் (குறிப்பாய் மைனஸ் ஓட்டுகளை )மீண்டுமொருமுறை போட்டுக்கொள்ளவும் 

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?"

Tuesday, March 13, 2012

தீவிரவாதமும், முஸ்லிம்களும்!

                                                  ஓரிறையின் நற்பெயரால்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

- என்று கூறுகின்றன.

மேற்கத்திய ஊடகங்களால் மக்கள் மத்தியில் 
திரும்ப திரும்ப பரப்படுகின்ற ஒரு விஷமப்பிரச்சாரம் இது. 
உலகில் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை மாத்திரம் ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மன்பான்மைக்கு என்ன காரணம்..?
தீவிரவாதம் முஸ்லிம்களுக்கு குலச்சொத்தா என்ன ...?  

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!

பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...

1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். 
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?

1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். 

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

  • 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.
  • 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.
  • 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
  • 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A  அமைப்பு

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு 

உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு

                      

இது மட்டுமா நம் இந்தியாவில் கூட 

பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

திரிபுராவில் A T T F  மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.


# ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது. .

      மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

 சிவசேனா...  சொல்லவே தேவையில்லை.,


பால் தாக்கரேயின் முழக்கம் (?) பற்றி ஏஷியா டைம்ஸ் இப்படி அறிவித்தது:
"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.
சங்பரிவார்கள் அமைப்பு இன்னும் ஒரு படி மேல போயி ஒரு Hindu Unity எனும் தளம் உருவாக்கி கொல்லப்பட வேண்டியவர்கள் குறித்த ஒரு block list ஐ தயாரித்து வைத்து இருக்கிறது.,

நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 
2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்)

எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.


இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக

60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்
இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்
தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...  
யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, 
I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, 
மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, 
உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, 
பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, 
L T T E  ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, 
ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ, 
A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..? 

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. 

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


Our sincere thanks to :
Dr.ZAHIR NAIK &
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)

REFERENCE :
  
                   
read more "தீவிரவாதமும், முஸ்லிம்களும்!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்