"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, January 18, 2013

கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?

                                      ஓரிறையின் நற்பெயரால்


முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும். 

எந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 

 கடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,
1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது
2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது

இதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும். 

ஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.

கடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.

ஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று!

அடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம். 
கடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங்களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை!

இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை! " இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்.. 


சில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்., 
 இவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது
 அவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை
 உலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்
 அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது
போன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட., 

ஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும்? ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை! 

ஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்

சரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா..? அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா? அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா...? அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள்? என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா?

ஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.

அறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்

ஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்., 

அதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...   

                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்