"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, November 23, 2013

கடவுளின் நிறம்?!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..! 

  • பறப்பதாகட்டும்
  • மிதப்பாதகட்டும்
  • நடப்பதாகட்டும்
  • பாசத்தை பொழிவதாகட்டும்


கைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது எல்லாவற்றிலும் கீழாக பூஜ்யம் கூட அறியாதவனாய் பிறக்கிறான்.

மற்ற உயிரினத்தை காட்டிலும் மனித படைப்புக்கு மட்டும் இந்த தலைக்கீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன? ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும்.? பிறப்பின் அடிப்படையிலேயே மற்ற உயிரினத்திற்கும், மனித படைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் இங்கே நமக்கு தெளிவாய் எதையோ உணர்த்துக்கின்றது. புரிந்துக்கொள்ள முற்படுவதில் தான் நமதறிவில் பிரச்சனை

* * *

மனிதன் உட்பட அனைத்து படைப்பின் நோக்கம் குறித்து ஆராய முற்படும் போது இவ்வுலகில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்று ஆத்திகர்களும், எதையும் படைக்க கடவுள் தேவையில்லை  என்று நாத்திகர்களும் கூறுகின்றனர்.

இங்கே பொது நிலையில் வைத்து விமர்சிக்கப்படுவது கடவுள் என்ற பதமே. படைப்பு நிலை குறித்து பின்னர் பார்ப்போம், கடவுள் என்பது யார் அல்லது என்ன என்பதை இருவருக்கும் பொதுவாக முதலில் வரையறை செய்வோம்,

கடவுள் என்பதனை இவ்வுலகில் இதுவரை எவரும் கண்ணால் கண்டதில்லை. இதுதான் ஆரம்ப மற்றும் பொதுவாக கடவுள் குறித்து எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதை அடிப்படையாக வைத்து கடவுள் இல்லையென்பதை ஒருவர் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதாக இருந்தால் ஒரு பொது நிலை உடன்பாட்டிற்கு அவர் வந்தாக வேண்டும். அதாவது,

# புலன்களுக்கு அகப்படாமை
# இப்பிரஞ்சத்தில் காணக்கிடைக்காமை
# நம்புவதற்கான காரண - காரியங்கள் இல்லாமை

இப்பிரஞ்ச முழுக்க தேடினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கடவுளின் இருப்பும் நிருப்பிக்கப் படவில்லை. உறுதி செய்யப்படாத ஒன்றை நம்பவேண்டும் என்ற அவசியமுமில்லை என கடவுளை மறுக்க ஆய்வுகளை துணைக்கழைக்கும் நாத்திகர்கள் அதே அளவுகோலை தான் ஏற்பதாக சொல்லும் அறிவியலுக்கு கொடுப்பதில்லை..

ஏனெனில் காரண காரியங்களின் வெளிப்பாடே அறிவியல். அந்த அறிவியலின் உறுதிப்பாட்டிலே பெரும்பான்மை விசயங்கள் ஏற்கவோ, மறுக்கவோ படுகிறது.

 பொதுவில் இல்லாத, கண்ணுக்கு தென்படாத ஒன்றை நம்ப தேவையில்லையென சொல்லும் அறிவியல் கடவுளின் இல்லாமை குறித்து எந்த பிரகடனத்தையும் தெளிவாக முன்மொழியவில்லை. அப்படியிருக்க

1. கடவுள் என்றால் கண்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றோ
2. இப்பிரபஞ்சக்கூட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்றோ

எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாத்திகர்கள் இந்த கேள்விகளை எழுப்புகின்றனர்.? அறிவியல் ஒன்றை இல்லையென்று சொன்னால் அது பார்க்கும் வடிவில் இருந்தாக வேண்டிய பொருள் என்பது பொதுவில் நிருபணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதே அதன் எதிர் நிலையே பொய்யென நிருபிக்க முடியும்

கடவுள் என்பது / என்பவர் பார்க்கும் பொருளாக இருந்தாக வேண்டும் என அறிவியல் வரையறை தந்திருந்தால் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பு இல்லா நிலை பார்த்து, கடவுள் என்பது ஒரு வெற்று நம்பிக்கையென்பதாக பொருள்கொள்ள முடியும்.

கடவுளின் இருப்பை ஆதாரப்பூர்வமான நிருபிக்க அறிவியல் எங்கும் வரையறை தந்திடா பொழுது கடவுள் என்பது /என்பவர் காணும் வடிவில் இருந்தாக வேண்டும் என்ற அறிவை நாத்திகர்களுக்கு யார் கொடுத்தது..?

ஆய்வு ரீதியாக கடவுளை மறுக்க வழியில்லை எனும் போது தம் சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்க எதிர் நிலையே தான் கையாள வேண்டும். அதாவது, கடவுள் பெயரால் முன்னிருத்தப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பதிலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் நாத்திகம் வளர்க்கும் அறிவியல் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, இந்த மேஜையையும் அதன் மீது ஒரு பேனாவையும் வைத்தது நான் என்கிறேன். அதை மறுக்கும் நீங்கள் என்னை பொய்ப்படுத்த வேண்டுமென்றால் எனக்கு எதிரான நிருபணம் தந்தாக வேண்டும். அந்த மேஜை மற்றும் பேனாவை வைத்தது நான் இல்லையென்று நீங்கள் சொன்னால் சாத்தியக்கூற்றில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே நீங்கள் நிறைவு செய்து இருக்கீறிர்கள்.

பதிலின் இரண்டாம் பாதியாய் அதனை அங்கே வைத்தது யாரென சொல்லியாக வேண்டும். அப்போதே பதில் முழுமையுறும். மேஜையும், பேனாவும் உங்கள் முன் இருப்பது மட்டும் நிஜம், திடீரென மேஜை தோன்றி அதில் நேர்த்தியாக பேனாவும் வைக்கப்பட்டிருக்கிறது என யாரேனும் சொல்வாரானால்... என்னை பொய்ப்பிக்க அல்ல, என் கேள்வியை உள்வாங்கும் அடிப்படை தகுதி கூட உங்களிடம் இல்லையென தான் சொல்லுவேன்.

இப்படியான உதாரணம் தான் இன்று உண்மைப்படுத்தப்படுகிறது. ஆம்! இப்பிரபஞ்சத்தை, அதில் உள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று கூறினால் அதை மறுக்கும் நாத்திகக்கூட்டம், எதையும் படைக்க கடவுள் தேவயில்லையென என பதில் கூறுகிறது,

நேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த(?) பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு. எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு!






கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை

கேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி., 

சூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக  வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி?

பூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்?

சூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV - Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவியில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி?

சந்திரனில் வெப்பம் அதிகம்,  வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்?

இன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட  இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது? என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும்? என்ற ஒற்றை கேள்வியில் தன் இயலாமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.

இந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன?

ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.

எதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.

ஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள். அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.

கடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை. கடவுள் இல்லையென எதிர்க்காலத்தில் கண்டறிப்படலாம் என எவராவது சொல்வாரானால்..

குட் இது ஏற்றுக்கொள்ளும் வாதம். ஆனால் அதுவரை கடவுள் இல்லையென பொதுவில் எந்த நாத்திகரும் சொல்ல கூடாது!

அடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் - தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்!


புரிதலில் உதவி
பிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book) 


                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


தொடர்புடைய ஆக்கங்கள் :
கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்.
பரிணாமத்தில் மனிதன்.
read more "கடவுளின் நிறம்?!"

Friday, September 20, 2013

வாக்களிப்பட்ட நன்மைகள்..!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...

மனித உற்பத்தி மண்ணில் தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில் தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில் மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் முன்மொழிகிறது.

இஸ்லாம் மட்டுமே இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். (5:3) இப்படி முன்மொழிந்தாலும் தம்மை பின்பற்றுதல் குறித்து இரண்டு வாய்ப்புகளை இந்த மனித சமூதாயத்திற்கு வழங்குகிறது. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; (2:256) ஆக ஒருவர் விரும்பாவிட்டால் இந்த மார்க்கத்தை முற்றிலும் புறக்கணிக்கலாம். ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் (2:208) என சந்தர்ப்ப வாத காலங்களில் மட்டும் ஒருவன் மார்க்கத்தை பின்பற்றாமல் ல்லா தருணங்களிலும், ஏன் இறுதி வரை தம்மை பின்பற்றியே ஆக வேண்டும் என பணிக்கிறது.

இஸ்லாம் கூறும் விசயங்களில் நூறு சதவீகிதம் உடன்பட்டால் மட்டுமே முழு முஸ்லிமாக ஒருவன் ஆக முடியும் எனும் நிலையில் இஸ்லாத்தின் மீதான கொள்கை உறுதிப்பாட்டில் நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அலசவே இக்கட்டுரை.

பொதுவாக மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்திருக்கும் பொழுதுகளில் இஸ்லாத்தின் மீதானப்பிடிப்பு நமக்கு குறைவதில்லை. மாறாக துன்பமோ, இழப்போ நமக்கு ஏற்படுமாயின் இறைவன் மீதான அதிருப்தி இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இஸ்லாம் குறித்த போதிய அறிவின்மை. அல்லது பெயரளவிற்கே நாம் மார்க்கத்தை பின்பற்றுகிறோம்- இதுதான் ஆச்சரியமான உண்மையும் கூட! இவ்வுலகில் ஒருவர் நல்லவராகவோ தீயவராகவோ இருப்பீனும் இறைவனின் கருணை பொதுவாக உண்டு. அதே நேரத்தில் இஸ்லாத்தை ஒருவர் நன்முறையில் பின்பற்றினால் அவருக்கு நன்மை உண்டு என கூறும் இஸ்லாம் அவருக்கு தீமையை ஏற்படாது என கூறவில்லை.

 ஏனெனில் நமது அமல்களுக்கு தகுந்தார்ப்போல் வெகுமதி இவ்வுலகில் தரப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஐவேளை தொழுகிறேன், கடமையான, உபரியான நோன்புகளை நோற்கிறேன். சதாகவும், ஜக்காத்தும் கொடுக்கிறேன். ஹஜ்ஜூம் செய்கிறேன், ஹலால்-ஹராம் பேணுகிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. இருந்தாலும் எனக்கு இப்படி ஆகி விட்டதே, வேண்டியது கிடைக்கவில்லையே .. என மனவேதனைக்கு ஆட்பட்டு நமது இழப்பியல் தாரசில் இறைவனின் கருணையை எடை போடுகிறோம்.இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவ்வளவு தூயவராக இருப்பீனும் இறைவனின் சோதனை இவ்வுலகில் நிச்சயம் உண்டு. இதனை மறைமொழி இப்படி இயம்புகிறது.

நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? " ( 29 | 2)
சுஃப்ஹானல்லாஹ்..! இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை படிப்பினை.


ஒரு மனிதனின் உறுதிப்பாடு எப்போது குறையுமென்றால் வேதனைகளும்- சோதனைகளும் தொடரும் போதே... ஆனால் ஒரு முஸ்லிம் கொள்கையில் பிடிப்போடு இருந்தால் அவனுக்கான சோதனைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் வெற்றியடைய நன்மையான காரியங்கள் செய்தால் மட்டும் போதாது. தீமையான காரியங்களிலிருந்தும் தவீர்ந்திருக்க வேண்டும். நமக்கு எதிராய் சோதனைகள் நிறையும் போதே அதை சரிக்கட்ட தீமையான காரியங்கள் செய்ய இயல்பாகவே மனித மனம் நாடும். அதையும் தாண்டி அவற்றிலிருந்து விலகி நிற்கிறோமா? என்பதை உணர தான் நமது கொள்கையில் உறுதி அவசியம்!

எந்த அளவிற்கு நாம் கொள்கையில் பிடிப்புடன் இருக்கின்றமோ அந்த அளவிற்கே சோதனையின் தாக்கமும் இருக்கும். உதாரணமாக மார்க்கம் மதுவை தடை செய்திருக்கிறது. இருந்தும் சைத்தானின் தூண்டுதலால் ஒருவர் குடிப்பாரேயானால் இறை சோதனையில் அவர் அப்போதே தோல்வியை தழுவுகிறார். முதல் கட்டத்திலே தோல்வியை தழுவும் போது அடுத்தக்கட்ட சோதனைக்கு செல்ல அவருக்கு தகுதியும், அவசியமும் இல்லை. மாறாக அதிலும் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் பிறரோடு தொடர்பு, பழக்க வழக்கங்கள், பணம், சொத்து, குடும்பம், வர்த்தகம், சமூகம் இப்படி அடுத்தடுத்த பங்களிப்பில் சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுவார். அனைத்திலும் வெற்றியடையும் போதே இறைவனின் அருட்கொடை அவர் மீது நிரப்பமாய் அருளப்படும்.  

கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலே இறைவனின் அருட்கொடை மூலம்..

இப்ராஹீம் நபியை நெருப்பு கரிக்கவில்லை
மூஸா நபியை கடல் மூழ்கடிக்கவில்லை
இஸ்மாயில் நபியை கத்தி அறுக்கவில்லை..


இன்னும் இதைப்போன்ற அற்புத சம்பவங்கள் தான் வரலாற்றில் எத்தனை எத்தனை...

அந்த உறுதிப்பாட்டை நிதர்சனமாய் உணர்ந்ததாலோ என்னவோ., பெருமானாரின் பயிற்சி பாசறையில் பாடம் பயின்ற சஹாபா பெருமக்களின் கொள்கையில் தான் எவ்வளவு பிடிப்பு. வெறும் ஆறு, ஏழு வசனங்கள் இறங்கிய காலத்தின் போதே கொண்ட கொள்கைக்காக தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயீர் ஈந்தவரும் உண்டு, தனது இயலாமையால் சுடுமணலில் கிடத்தப்பட்டு பாறாங்கற்களை நெஞ்சில் சுமந்தவரும் உண்டு. 

கழுமரங்களும்,, கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகளும் அந்த மக்களுக்கு சிறிதும் பயத்தையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. எதற்காகவும். யாருக்காகவும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித தளர்வோ, சமரசமோ செய்ய முன்வரவில்லை தங்களின் கொள்கையில் நிலைத்திருக்க தம் இன்னுயிரையும் பகரமாக்கிக்கொண்டார்கள் அந்த மேன்மக்கள்..

 ஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு மார்க்கம் முழுமையாக்கப்பட்டு எந்தவித இன்னலும் இடைஞ்சலும் இல்லா எளிய முறையில் நம்மிடம் வந்த பிறகும் நமது கொள்கைப்பிடிப்பு எந்தளவிற்கு இருக்கிறது? ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட்டோமா..? என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும். 

தினம் ஐவேளை என்ற நிலை போய் வாரம் இரண்டு ரக்அத் மட்டுமே தொழுகையை கடமையாக்கிக்கொண்டோர் நம்மில் பலர், ஆறு நாட்கள் வளர்ந்திருக்கும் சின்னஞ்சிறிய தாடியையும் ஏழாம் நாள் ஸ்பெஷல் சேவிங் செய்து சுன்னத்துக்கு அங்கே ஒரு நாள் விடுப்பு அளிக்கிறோம். எவ்வித நிர்பந்தமும் இல்லாமலே நாம் பர்ளையும், சுன்னத்தையும் புறக்கணிக்கிறோமென்றால் வரும் காலங்களில் இஸ்லாத்தை பின்பற்றுவதற்கு ஏதும் எதிர்ப்பு வந்தால் அப்போது நம் நிலை...

எண்ணிக்கையில் இருக்கின்றோம் முஸ்லிகளாக.. எண்ணத்தில் வாழ்கின்றோமா.. ? நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது! சகோஸ்

ஏசி காற்றில் கால்மேல் கால் போட்டு குஷன் நாற்காலியில் அமர்ந்து நம் வீட்டு வரவேற்பறைக்கே நொடிப்பொழுதில் மார்க்கம் குறித்து அனைத்து விசயங்களையும் வர செய்தும் அதை அடுத்தவருக்கு சொல்ல மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எழுதுவதால், படிப்பதால் அடுத்தவருக்கு பரப்புவதால் ஏற்படும் நன்மைகளை விட மார்க்கத்தை செயல் ரீதியில் பின்பற்றும் போதே நாம் எதிர்ப்பார்த்த பலனை அடைந்துக்கொள்ள முடியும்.

.ஏனெனில்...
இறைவனால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம்
முஸ்லிமாக பிறப்பதால் மட்டும் ஒருவருக்கு தீர்மானிக்கப்படுவதில்லை..
முஸ்லிமாக இறப்பவர்க்கே தீர்மானிக்கப்படுகிறது.
முஸ்லிமாக இறக்க வேண்டுமென்றால்
முஸ்லிமாக வாழ வேண்டும்...
அது கொள்கையில் உறுதியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!

                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "வாக்களிப்பட்ட நன்மைகள்..!"

Friday, April 12, 2013

உடையும் பகுத்தறிவு..!


                                      ஓரிறையின் நற்பெயரால்

பகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் (?) எந்த விதத்தில் உடன்படுகிறது என்பதை கொஞ்சம் அலசுவோம்

பகுத்தறிவு எனப்படுவது  நிகழ்வுகளின் அல்லது கருத்துக்களின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான நிருபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைப்பது ஆகும். சுருக்கமாக கூறினால் பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.  

பகுத்தறிவு மற்றும் நாத்திகம் இவை இரண்டிற்கும் விக்கி பீடியா கொடுக்கும் வரைவிலக்கணம் இவை. ஆனால் மேற்கண்ட இரண்டு செயல்முறைகளும் முற்றிலும் தொடர்பற்றவை. அப்படியிருக்க இன்று பகுத்தறிவாதிகள் என சமூகத்தில் நாத்திகர்கள் அடையாளப்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம்..?

தொடர்வோம்.

நாத்திகர்களின் பிரதான கொள்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரே கொள்கை "கடவுள் மறுப்பு" ஒன்றே. கடவுளை மறுக்க ஆரம்பத்தில் அவர்கள் கையாண்ட வழிமுறைகள் * கடவுளின் பெயரால் சமூகத்தில் வர்த்தகரீதியான பிளவு, * கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்கள், * அறிவுக்கு ஒத்து வராத மூட பழக்க வழக்கங்கள்.

இவற்றை நன்கு கவனித்தால் ஒரு குறிப்பிட மதம் கொண்ட கொள்கைக்கு எதிர்ப்பாக மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஏனெனில் உலக அளவில் பெரும்பாலானோர் பின்பற்றும் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தால் அந்த கொள்கைகள் கூறும் அனைத்து விசயங்களையும் எதிர்க்க தன்னிடம் ஆணித்தரமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வரையறைகளை தன்னிடம் தெளிவாக வைத்திருக்காத மதங்கள் கூற்றை எதிர்த்தே தன்னை இந்த மண்ணில் நாத்திகம்  நிலை  நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

 ஆனால் இஸ்லாம் தனது கோட்பாடுகளை முன்வைத்து, கடவுள் குறித்த அனுமானங்கள், கடவுளின் பெயரால் மூட பழக்க வழக்கங்கள், கடவுளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை கூடாது என தெளிவாக பிரகடனப்படுத்திய பிறகு நாத்திகம் தனது எதிர்ப்பை இஸ்லாத்திலும் நுழைக்க, மேற்கண்ட பட்டியலோடு தற்காலத்தில் அறிவியலையும் கடவுளை மறுக்க துணைக்கு அழைக்கிறது.

ஆகவே தான் நாத்திகம் எங்கே தனது உரையாடலை தொடங்கினாலும் கடவுள் மறுப்பு, கடவுள் இருப்பு என்ற வட்டத்தில் மட்டுமே நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் எதிரில் இஸ்லாம் இருந்தால் உடனே இஸ்லாமிய சட்டத்துக்குள்ளும் தம் கிளை கேள்விகளை தொடர்கிறது. இதை தான் இன்று வரையிலும் நேரடியாகவும், இணைத்திலும் கண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் தம் கொள்கைகளை விவரித்து, அவை மட்டுமே இந்த சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு உயர்ந்த வழியென்றும், சிறந்த வழியென்றும் எங்கேயும், எப்போதும் எடுத்து கூறி மக்களை தம் பால் அழைப்பதில்லை. மாறாக கடவுள் மறுப்பை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அதையை இச்சமூகத்தில் ஒரு பிரதான ஆயுதமாக்கி தம் இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கிறது.


   தனக்கென பிரத்தியேகமான கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு என்ற ஒற்றை அணுகுமுறையை வைத்திருக்கும் ஒன்றை எப்படி அறிவார்ந்த பேரியக்கம் என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்...? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வியும் நாத்திகர்களிடையே உண்டு.

விமர்சனம் ஒன்றின் மீது பதிவு செய்யப்படுவதாக இருந்தால் அதை விமர்சிக்க முற்படும் அளவிற்கு அதன் கொள்கை- கோட்பாடுகள் வெளிப்படையாக நமக்கு முன்மொழியப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இஸ்லாத்தின் கோட்பாடுகள் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதுப் போல நாத்திகம் தனது கொள்கை கோட்பாடுகளை இந்த உலகத்திற்கு தெளிவாக முன் மொழிந்து இருக்கிறதா...? 

இன்னும் சொல்ல போனால் கடவுள் மறுப்பு என்பது தனிமனித வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு நிலைப்பாடு அவ்வளவே... மாறாக, அதுக்கொள்கையல்ல... ஒருவர் தன்னை நாத்திகராக இந்த உலகில் நிலை நிறுத்திக்கொள்ள, தம் வாழ்வை தொடர எத்தகைய வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? அதற்கு நாத்திகம் பதில் சொல்லுமா...?

மனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று ஒரு கொள்கையை விமர்சித்து அதை பொதுப்படுத்தினால் அதை விட மேலான ஒரு கொள்கையை இவ்வுலகிற்கு அதுவும் எல்லா காலத்திலும், எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படி எங்காவது நாத்திகம் தம் கொள்கையை பிரகடனப்படுத்தி இருக்கிறதா...? 

தனக்கென கொள்கையையும் தெளிவான பின்பற்றலும் இல்லாத ஒன்றின் மீது எப்படி விமர்சனங்களை பதிவு செய்ய முடியும்..? அதனால் தான் அதிகமாக நாத்திகத்தின் மீதான விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அது மட்டுமில்லை இன்று சமூகத்தில் நாத்திகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென்று எந்த பிரத்தியேக வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. இணையத்தில் கூட அஃறிணை பெயர்களோடு தான் உலா வருகிறார்கள். மதம் சார்ந்த குறியீடுகள் தம் மீது விழாமல் இருப்பதற்காக... ஆனால்

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.

உள்ளூர் முதல் உலக வர்த்த மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா..? தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் (?) மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..?

தம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் "லாவக போக்கு". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...

தனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

தொடர்புடைய ஆக்கம் :
நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "உடையும் பகுத்தறிவு..! "

Friday, March 08, 2013

இவர்கள் தான் சஹாபாக்கள்..!

                                   ஓரிறையின் நற்பெயரால் 
"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிலர் வரலாறுகளே மக்களுக்கு பாடமாய் அமைகின்றன." 

தனிமனித உரிமைகளும், சுதந்திரங்களும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அநியாயங்கள் நூறு சதவீகித ஆஃபரில் விற்றுக்கொண்டிருந்த  பரப்பரப்பான சூழல். கூடவே இலவச இணைப்பாக அடக்கு முறைகளும். நடக்கும் அவலங்களின் மீது கொண்ட வெறுப்பாலோ என்னவோ சூரியனுக்கே தாகம் எடுக்கும் அளவிற்கு உஷ்ணத்தை அந்த பாலை பெருவெளி வேகமாய் உமிழ்ந்துக்கொண்டிருந்தது

அந்த குரைஷிக்கூட்டத்தாரின் ஆவேச கூச்சலுக்கு மத்தியில் ஒருவர் இழுத்து வரப்படுகிறார். கொல்லப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்காக. மக்காவின் எல்லைக்கு வெளியே கொண்டு வரப்பட்டு தண்டனை தர தயாரான போது "நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா...?" இறுதியாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டு ரக்அத்துகள் தொழுதுக்கொள்ள மட்டும் என்னை விடுங்கள். பதில் பொருத்தமற்றும, பொறுமையாகவும் வந்தது. அவர் செய்வதை அறிய அனுமதியும் அளிக்கப்பட்டது. 

அவர் நிதானமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதார். பிறகு, தன்னை கொல்ல குழுமி இருக்கும் மக்களின் பக்கம் திரும்பி 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் தொழுகையை இன்னும் அதிகமாக்கியிருப்பேன்" என்று உரக்க கூறினார். பின்னர் அநியாயத்திற்கும் அதிகமாய் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார். கொலை செய்வதற்கு அந்த குரைஷிக்கூட்டாதாருக்கு " அவர் ஏற்ற இஸ்லாமே" பிரதான காரணமாக இருந்தது

நபித்தோழர் குபைப் இப்னு அதீ (ரலி) அவர்களின் இறுதி நிமிடங்கள் தான் மேல விவரித்தவை. உதிரத்தால் எழுதப்பட்ட அவரது வாழ்வின் இறுதிப்பக்கங்கள் இப்படி தான் முடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அதன் பின் நடந்தவைகள் தான் படிப்பினை வாய்ந்தவைகள்

அந்த கூட்டத்தில் இச்சம்பவத்தை உற்று நோக்கிய ஒரு குரைஷி இளைஞரின் இதயத்தில் இஸ்லாம் எனும் விதை மெல்ல வளர தொடங்கியது. கொண்ட கொள்கையில் பிடிப்பு, நிதானம், வீரம், இறைவனுக்காக எதையும் துச்சமாக மதித்தல், என்னிலையிலும் உறுதி இப்படி தம் மரணத்தருவாயில் கூட அனைத்தையும் மிக சரியாக தன் கண் முன்னால் ஒருவர் செயல்படுத்திய விதம் நடு நிலைக்கொண்ட எவர் உள்ளத்தையும் சற்று உரசிப்பார்க்க தானே முற்படும். 

ஆம்! ஒரு சிறந்த மனிதரின் மரணத்தின் படிப்பினை அடுத்து ஒரு சிறந்த மனிதரை உருவாக்க வேண்டும் என்பார்கள். இதோ! குபைப் ரலியல்லாஹ்வின் மரணமும் மிக சிறந்த இன்னொரு மனிதரை உருவாக்கி சென்றது... வாருங்கள் அவரது வரலாற்றையும் சற்று அசைப்போடுவோம்...

                                               ▁▂▃▄
சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பட்டியலை தந்தது. அது ஹிம்ஸ் பகுதியில் வாழும் வறியவர்களின் பட்டியல். தலை நகரில் இருக்கும் ஜகாத் பொருட்களை வாங்கி செல்வதற்காக வந்த குழு அவர்கள். வந்த அனைவரும் கலிஃபாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள். 

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு குழப்பம் அதில் ஒரு பெயர் விளங்கவில்லை. பளிச்சென கேட்டார் கலிஃபா உமர் 
”யார் இந்த ஸயீத்?" 
"எங்கள் அமீர்" என்றனர். வந்த அனைவரும் அமீருல் மூமினிடம் 
"என்னது, உங்கள் கவர்னர், அமீர் ஏழையா?" என்ற உமர் (ரலி) கேள்வி பல ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.

"ஆம்!. அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுப்புகள் நெருப்பின் வாசத்தை கூட நுகர்ந்ததில்லை" என்று கலிஃபாவின் ஆச்சரியத்திற்கு மேலும் பல ஆச்சரியக்குறிகளை ஏற்படுத்தினர் வந்தவர்கள்.

மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? யோசித்த மறுகணமே அவர்களையும் அறியாமல் அழ தொடங்கினார்கள் கலிஃபா உமர் (ரலி) ! ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, "என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்".

அப்பணத்தை கூட அவர் வாங்கவில்லை என்பது வரலாற்றின் இன்னொரு பக்கங்கள் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு பகுதியின் ஆளுனரின் நிலை கண்டு உமர் ரலி மனம் மட்டுமல்ல நம் மனமும் ஏனோ நிலைகுலைந்து தான் போகின்றன.. 

இவரின் அத்தகைய எளிய வாழ்க்கைக்கு என்ன காரணம்...? இஸ்லாம் தரவிருக்கும் இமாலய சொர்க்கத்திற்கு இவ்வுலக வாழ்க்கையின் ஆடம்பரங்களையும், அத்தியவாசிய தேவை தாண்டிய அனைத்தையும் பகரமாக்கி விட்டார்கள். 

ஹூம்ஸூக்கு கவர்னராக தேர்ந்தெடுக்க உமர் ரலி ஆவல் கொண்ட போது, அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை:  உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டவாளியாக்கி விடாதீர்கள்".  என்ன மனிதர் இவர்?! பதவி தன்னை தேடிவரும் போது கூட பக்கத்தில் கூட நிற்க அனுமதி வழங்கவில்லை. 

"என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்". என்று உமர் ரலியின் நெருப்பு வார்த்தைகளை கேட்ட பிறகே பொறுப்பில் அமர ஒப்புக்கொண்டவர். அவர் தான் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹ் அவர்கள்.


குபைப் ரலியின் மரணம் வாயிலாக இஸ்லாத்தை அறியும் நோக்கில் புறப்பட்ட இவரது பயணம் ஒரு நேர்மையான, எளிமையான ஆட்சியாளராக இன்று உலகத்திற்கு காட்டியது. உதாரணத்திற்கு தான் இந்த இரு நபித்தோழர்களின் சம்பவங்களும்... இன்னும் ஆயிரமாயிரம் சம்பவங்கள் வரலாற்று பக்கங்களில் வாய்மையுடன் காண கிடைக்கிறது. 

"  பிறந்த குழந்தைகளை உயிருடன் புதைப்பதிலிருந்து, பெண்களை மோகத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அடிமை மனிதர்களை அஃறிணை உயிர்களாக மட்டுமே எண்ணிக்கொண்டு, கொடுத்தல் வாங்களில் அநீதம் இழைத்துக்கொண்டு, தம்மில் எளியோர்களை தாக்கிக்கொண்டு தனக்கென நிலையான வாழ்வியல் முறைகளற்று இருந்த ஒரு நாடோடி சமூகம் பொன்னெழுத்துக்களில் பதியவேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக மாறி போனது எவ்வளவு பெரிய  ஆச்சரியம்! "


குலங்களாலும், கோத்திரங்களாலும் இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து வேறுப்பட்டு கூறுப்பட்டு நின்ற ஒரு சமூகத்தை பின்னாளில் பொருளீட்டலில் நேர்மையாளர்களாகவும், உறவு முறை பேணுதலில் சகிப்பு தன்மை உள்ளவர்களாவும், அளவைகளில் -நீதிகளில் நீதம் பேணக்கூடியவர்களாகவும், தன்னைப்போலவே பிறரையும் எண்ணக்கூடியவர்களாகவும் மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் அழகிய வாழ்வியலிற்கும் உண்டு.

அல்லாஹ்வும் ,அவனது தூதர் சொல்லும் எந்த ஒரு சொல்லுக்கும் கட்டுப்படுவதோடு மட்டுமில்லாமல், தம் ஒவ்வொரு செயலையும், நடவடிக்கையும் அதற்காகவே அர்ப்பணித்தார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தம் நாடு , மனைவி, மக்கள், சொத்து என எல்லாவற்றையும் இழந்து, இறுதியாக தம் உயிரையும் துறந்த மேன் மக்கள் அவர்கள். 

இஸ்லாத்தை ஏற்றதற்காகவே தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயிர் நீத்த அன்னை சுமையா ரலியல்லாஹ் அன்ஹா, பரந்த பாலைவெளியில் பாராங்கற்களுக்கு அடியில் கிடத்தப்பட்ட போதும் அஹத்.. அஹத் என்ற ஒற்றை சொல்லை மட்டுமே உயிர் மூச்சாக கொண்ட பிலால் ரலியல்லாஹ் அன்ஹூ போன்றவர்களின் வாழ்வை உற்று நோக்கினால் இஸ்லாம் ஒரு மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி விட்டால் அது ஏற்படுத்த கூடிய தாக்கத்தின் பிடிப்பை உணரலாம்!

சுய ஒழுக்கத்தோடு, பிறர் நலனில் கொண்ட அக்கறைக்கும் அவர்களிடத்தில் உச்சவரம்பு கிடையாது. பிறருக்கும் ஈயவேண்டுமென்பதற்காகவே தம் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியவர்கள் அவர்கள். அபுபக்கர் சித்திக், அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ் (ரலியல்லாஹ் அன்ஹூ) போன்றவர்களின் வாழ்வியல் அதற்கோர் அழகிய சான்று. 

அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு கட்டளை வந்துவிட்டால் தம் விருப்பு வெறுப்புகளை தூர எறிந்து விடுவார்கள்.
உங்களுக்கு விருப்பமானவற்றை (இறை வழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது [ஆல இம்றான்: 92] என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட மறுகணமே பெரும் செல்வந்தரான அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவருக்கு மிகவும் விருப்பமான செழிப்பான, பயன்மிக்க பைரஹா எனும் ஈச்சந்தோப்பை, தனது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்கள். 

மேலும் உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹூவோ யூதர்களின் கைவசம் இருந்த கிணற்றை இறை பொருத்ததிற்காக பெரும் தொகை கொடுத்து வாங்கி மதின மக்களுக்கு பொதுவில் சதாகா செய்தார்கள்.


சகோதரத்துவத்திற்கு மார்க்க அகராதியில் பொருள் தேடினால் அங்கே அன்சாரிகள் என்று பதியப் பட்டிருக்கும். பெயரளவிற்கு இல்லாமல் மக்காவை துறந்து வந்த முஹாஜிரீன்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்திலும் சரிபாதியை கொடுக்க முன்வந்தார்கள் அவர்கள். 

இஸ்லாமிய பாடசாலையில் பெருமானாரிடமிருந்து பயின்றவர்கள் அப்படி செய்து காட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்.! அதனால் தான் நபித்தோழர்கள் இன்றும் வரலாற்று நாயகர்களாக நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதைப்போன்ற பக்கங்கள் வரலாறு முழுக்க இன்னும் அதிகமதிகம். ஆனால் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்ள முயல்கிறேன்.  மனித நேயப்பிறவி மாநபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை குறித்து முத்தாய்ப்பாய் இப்படி சொன்னார்கள். 

உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்றார்கள்

அல்லாஹ்வோ தம் மறையில் 
"அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள் அவர்களை அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான்" (அத்-தௌபா: 100)

அல்லாஹ் அவனது அடிமையாக ஒருவரை ஏற்றுக்கொள்வதே பிறவிப் பலன் அடையக்கூடிய விசயம். ஆனால் அந்த மக்களை  திருப்தியுடன் தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் கூறுவது எவ்வளவு பெரிய விசயம்...  சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.!

ரலியல்லாஹ் அன்ஹூ.. என சஹாபா பெருமக்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு வித வியப்பும், சிலிர்ப்பும் ஒரு கணம் நம் மனதில் தோன்ற தான் செய்கின்றன... 

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Thanks to :
Bro. Noorudeen,
Sis. Moulavia. M.V. Massiya. B.A (Hons)


Reference :
http://manaruddawa.org/index_files/home.htm
http://www.satyamargam.com/
http://sahaabaakkal.blogspot.com/
read more "இவர்கள் தான் சஹாபாக்கள்..!"

Friday, February 08, 2013

முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...

                                    ஓரிறையின் நற்பெயரால்

வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது என கேட்டார்..? உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர். சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது.. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே.... என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.

உண்மைதான்..! அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று!

முஸ்லிம் என்ற ஒற்றை சொல் தொடர்புடைய எந்த செயலாக இருப்பீனும் அச்செயலின் முடிவில் இன்று இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. பொதுவெளியில் இந்த சமூகத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்களென மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய் பிரச்சாரமே இதற்கு தலையாய காரணமென்றால் அது மிகையில்லை. அதனை வெற்றிக்கரமாக இச்மூகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இன்று ஓசாமாவும், தாலிபான்களும் இஸ்லாத்தின் அடையாளமாக வைத்து விமர்சிக்கப்படுவதோடு தாடிகளும், தொப்பிகளும் தீவிரவாதத்தின் அடையாளமாக்கப்படுகிறது.

இந்த கரும்பலகை உதாரண புரிதல் இன்று தமிழத்திலும் ஊடுருவி விட்டது என எண்ணும் போது இந்த கட்டுரைக்கு அவசியமே ஏற்பட்டது. சரி இனி கட்டுரை உள்ளே பயணிப்போம்.

இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை... இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது. பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதாய் சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால், முஸ்லிம் பெயர் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் பக்கம் கையே நீட்டி தம் சான்றை நிறுவ பார்க்கிறார்கள். இதுவா ஒன்றை உண்மைப்படுத்த எடுக்கும் அளவுகோல்...?

 இஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்... இவை மட்டும் தான் இஸ்லாம். குர்-ஆனோ அல்லது நபிகளாரோ (அப்பாவி) மனிதர்களை கொல்லுங்கள் என்று கட்டளையிட்டிருந்தால் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு முடிச்சிடுவதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை குற்றப்படுத்துவது நூற்றுக்கு நூறு உண்மையானதும் கூட எனலாம். ஆனால்...

வீணாய் ஒருவனை கொல்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது. (5:32 ) என தனி மனித உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்து சொல்லியிருக்கும் போது இஸ்லாம் சொன்னதால் தான் அப்பாவி மக்களை கொலை செய்கிறோம் என ஒருவனோ / ஒரு குழுவோ சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...? குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா...? சிந்திக்க வேண்டும் சகோஸ்...

இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும். தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.

தீவிரவாதத்தை செய்வதினால் தான் தாலிபான்களை எதிர்க்கிறோம் என பக்கத்திற்கு பக்கம், வரிக்கு வரி மனிதம் பேசும் மனித பிறவிகள் எவரும், அதே தீவிரவாதத்தை வெவேறு பெயர்களில், வெவ்வேறு போலி காரணத்திற்காக ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் அரங்கேற்றி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் பொதுவெளியில் எதிர்க்கவில்லை, நடுநிலை முக்காடு போட்டிருக்கும் ஊடகங்கள் கூட இவற்றிற்கு எதிராய் செயல்பட்டதில்லையே அது ஏன்..? புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்களும் மனிதர்கள் தான்... 

(9/11 நிகழ்வின் அடிப்படையில் தாலிபான்களை எதிர்ப்பதாக சொன்னால் அந்த நிகழ்வும் அமெரிக்காவின் உள்ளரங்க சதி என்பது நாடறிந்த உண்மை) 


இஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பதிலும் அதே முரண்பாடுதான். சவுதி உட்பட எந்த நாடும் தங்களை இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் அவற்றின் சட்ட முறைமைகள் மீறப்படும் போது இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது.

குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் போது இரு தரப்பையும் நன்கு விசாரித்த பிறகே நடுநிலையாய் தீர்ப்பை வழங்க சொல்கிறது இஸ்லாம். அது தம்மை சார்ந்தவர்களுக்கு பாதகமாக அமைந்தாலும் (6:152 ) நீதி செலுத்த சொல்கிறது. ஆக இங்கே குறை இஸ்லாமிய சட்ட முறைமைகளில் இல்லை. மாறாக அதை அமுல்படுத்துவோரிடம் பிரச்சனை இருந்தால் இதற்கு எப்படி மார்க்கம் காரணமாகும்..?

 இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால், அண்ணலாரின் ஆட்சியிலிருந்தோ அல்லது அதற்கடுத்து வந்த கலிஃபாக்களின் ஆட்சியிலிருந்தோ விமர்சனங்களை பதிய வேண்டும். ஏனெனில் அவை தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்டவை.. ஆனால் இன்று சவுதி ஆட்சியாளர்களுக்கு எதிராக கூப்பாடும் போடும் எவரும் மேற்கண்ட ஆட்சியமைப்பு பற்றி வாய் திறப்பதில்லை...

உண்மையாக இஸ்லாம் என்ன சொன்னது என்பதை அறிய அதை செயல்படுத்தியவர்களிடம் மட்டும் தான் ஒப்பு நோக்க வேண்டும். தன் தந்தையாராலே ஓட்டகைகள் மேய்ப்பதற்கு கூட தகுதியில்லையென ஒதுக்கப்பட்ட உமர் (ரலி), பிற்காலத்தில் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை எந்த வித முறைகேடுகளும் இன்றி திறமையான நிர்வாக திறன் கொண்டு நீதமான ஆட்சியை சுமார் 10 ஆண்டு காலம் செய்ய முடிந்தது என்றால் அதற்கு பெயர் தான் இஸ்லாமிய ஆட்சி. அதை செய்ய வைத்தது தான் இஸ்லாம்! இவர்களது ஆட்சியை விமர்சிக்க வாருங்கள் தாரளமாய் ...

இன்னும் பாருங்கள், சமீபத்தில் இஸ்லாமிய விரோத போக்குக்கொண்ட ஒரு படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இறங்கியதை சேனல் நியுஸ்களிலும், இணையத்தில் எழுத்துக்கள் வாயிலாகவும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயலாக கண்டித்த இதே ஊடகங்கள், இதற்கு முன்னர் இதே முஸ்லிம் அமைப்புகள் இரத்த தான முகாம்கள் பல நடத்திய போதும், வரதட்சணைக்கு எதிராக பல மேடைகள் போட்ட போதும், சுனாமி எனும் பேரிடர் ஏற்பட்ட தருணத்தில் மத சார்பற்று களப்பணியாற்றிய போதும் ஓரிரு வார்த்தைகள் கூட அவர்கள் குறித்து செய்திகள் வெளியிடவில்லையே ஏன்...?

  • பொதுவெளியில் முஸ்லிம்கள் என்றாலே பிரச்சனைக்குரியவர்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுத்த கூடியவர்கள் என்ற பிம்பம் மட்டுமே நிலை பெற வேண்டும் சுய நல சிந்தனைக்கு என்ன காரணம்...? 
  • இன்று தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அரேபியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அல்லர். மாறாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உங்கள் பார்வைகளுக்கு மத்தியிலே சுப்பனாகவோ, குப்பனாகவோ அல்லது தலித், கிறித்துவ, நாடார்.. இப்படி ஏதாவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களாகவோ தான் இருந்திருப்போம். சாதியெனும் அடைமொழி தொலைக்கவே எங்களின் இஸ்லாமிய தழுவல். ஆரம்பத்தில் இல்லாமல் இன்று உங்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி இருக்கிறதென்றால் அதற்கு யார் காரணம்..? அன்னியப்படுத்தப்பட்டு நிற்பது நாங்கள் மாத்திரமல்ல, உண்மைகளும் தான்.!    
  • இஸ்லாம் சொன்ன ஒரே காரணத்திற்காகவே சிகரெட் பிடிக்காமல், மது அருந்தாமல், விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல், வட்டி வாங்காமல், மதுக்கடைகள் நடத்தாமல், ஹராமான தொழில் செய்யாமல் இன்று உங்களின் மத்தியில் எத்தனையோ முஸ்லிம்கள் நாள்தோறும் வலம் வருகிறார்களே அவர்களை ஏன் இஸ்லாத்தின் அடையாளமாக கருத மறுக்கிறீர்கள்...? 

நல்ல தமிழர்களாக வாழ்ந்துக்கொண்டே எங்களால் நல்ல முஸ்லிம்களாகவும் வாழ முடியும் என்கிறோம். அதை செயல்படுத்தி காட்ட உள்ளூர் சகோதரத்துவத்தை உலக அளவில் பேச முற்பட்டால் அது தவறா..?  சிந்திக்க கடமைப்பட்டிருக்றீர்கள் சகோஸ்..

முஸ்லிம் சகோதரர்களே...! இத்தருணத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்யும் போது சிறியதாகினும், பெரியதாகினும் அது இச்சமுகத்தில் எந்த கோணத்தில் பார்க்க படுகிறது என்பதை தான் தற்கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல)  என்றும் மறவாதீர்கள்.

உங்கள் சகோதரன்
குலாம்

                                                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
read more "முஸ்லிம்களும் மனிதர்கள் தான்... "

Friday, January 18, 2013

கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?

                                      ஓரிறையின் நற்பெயரால்


முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும். 

எந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 

 கடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,
1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது
2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது

இதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும். 

ஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.

கடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.

ஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று!

அடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம். 
கடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங்களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை!

இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை! " இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்.. 


சில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்., 
 இவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது
 அவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை
 உலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்
 அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது
போன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட., 

ஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும்? ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை! 

ஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்

சரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா..? அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா? அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா...? அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள்? என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா?

ஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.

அறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்

ஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்., 

அதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...   

                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்