ஓரிறையின் நற்பெயரால்
நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!
முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு
ஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.
பொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே..! ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.
அப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,
தொடருங்கள்...
இன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை...? இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -
ஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...?
கடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவுப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்
மேற்கண்ட வினாவிற்கு
எந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..?
இஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று
நான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..?
இப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்
- ஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,
- அல்லது அறியாமை.
வேறன்ன சொல்ல முடியும்?
கடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...?
பின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...?
அதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)எனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.
என் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..!
உங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...
உங்கள் சகோதரன்.
G u l a m
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...
அல்லாஹ் நன்கு அறிந்தவன்
இஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு
விளக்கமாய்
சகோதரிகளின்
ஒர் புதிய வலைத்தளம்..!
✿ ✿ ✿
- கடவுள் இருகின்றானா?
- கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
- கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?
- கடவுளில்லா உலகம்...?
- நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...?
- பதில் தருமா பரிணாமம்..?
- தேவையுடையவனா...இறைவன்?
- யார் கடவுள்...?
- மனித வாழ்வில் மனசாட்சி!
- பரிணாமத்தில் மனிதன்..?
- கடவுள் இருந்தால்..
- கடவுளும்- நாமும்
- பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
- "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"
- மரணம்:- பொய்க்கும் நாத்திகம்
- நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!
- 'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.
- கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
- இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?
- கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?
- கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?
- இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?
- கி.மு வில் கடவுள்!
- நாத்திகம் விரும்பும் இஸ்லாம்..!..?
- #கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!
(நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)
Tweet | |||||
அன்பு சகோஸ்.,
ReplyDeleteமேற்கண்ட ஆக்கம் ஒரு அழைப்பு மட்டுமே.,
எதிர் மறை கருத்துக்கள் கொண்டோர் தங்கள் விமர்சனத்தை / குற்றச்சாட்டை கொடுக்கப்பட்ட ஆக்கத்தின் கீழாக அங்கேயே தாரளமாக பதியலாம்.
ஏனெனில் குர்-ஆன், இஸ்லாம், நாத்திகம், கடவுள் போன்ற பல அடிப்படை கேள்விகள் குறித்து மேற்கண்ட ஆக்கத்தின் பின்னூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
ஆக நீங்கள் ஆக்கங்களை பார்வையிட்டால் ஏற்கனவே விவாதிக்கப்பட்டவை விடுத்து உங்கள் விமர்சனங்களை எளிதாக அங்கே தொடரலாம்.
அந்த காரணத்திற்காகவே இந்த ஆக்கத்திற்கு மட்டும் பின்னூட்ட பெட்டி மூடப்பட்டுள்ளது.
நன்றி!
உங்கள் சகோதரன்
குலாம்