என் இறைவா..!
ஆதத்தை (அலை) வழிக்கெடுக்க
முனைந்தவன் நான்
ஆனால் அவர் தம் மக்களோ
என்னையல்லவா.... வழிக்கெடுக்க முயல்கிறார்கள்
இது உனது விதியோ...
இல்லை
பழிக்கு பழியோ...
உன் கட்டளைக்கு உடன்படாததால்
மக்களுக்கு
மாறு செய்பவன் நான்
உன் கட்டளைக்கு உடன் பட்டும்
எனக்கு மாறு செய்வதில்லையே மக்கள்....
சஹாபாக்கள் காலத்தில்
சர்வ காலமும் போராட்டமாக இருந்தது...
பல முறை அவர்கள் வெல்ல...
சிலமுறை வென்றிருக்கிறேன்.
ஆனால்... இன்றோ
அப்துல் ரஹ்மானை வழிக்கெடுக்க முயலும் முன்
அப்துல்லாவையும் இலவசமாக
வழிகெடுத்தே என் முன் வருகிறார்.
உன்னைப் பற்றி அறியாததால்..
நான் ஏதோ ஆனேன்
என்னைப்பற்றி அறிந்தும் -மக்கள்
வீணாய் போனது ஏன்...?
நபிகளார் காலத்தில் நாளெல்லாம்
யோசித்தேன்...
துன்பம் தருவது எவ்வாறு என்று
ஆனால் இன்றோ...
யோசிக்கிறார்கள்
இன்பம் பெறுவது என்னிடம் எவ்வாறு என்று
அன்று உமரோ (ரலி) ஒரு தெரு வழி நடக்க
நானோ பிறிதொரு தெரு ஓடினேன்
இன்று எவரும்
வருவதை கண்டு ஓடி ஒளிந்தாலும்
கண்டறிந்தல்லவா...
என் தோள் மீது கைப்போட்டு
அழைத்து செல்கிறார்கள்
அனாச்சாரியங்கள் பல புரிவதற்கு
பாங்கொலி சத்தம் கேளாமல் இருக்க
"பாடு" பட்டேன் அப்போது
பாங்கொலி கேட்டுவிட போகிறது என்பதற்காக
'பாட்டு' கேட்கிறார்கள் எப்போதும்....
உன் இறைமறையில்
எண்ணற்ற இடங்களில்
என்னைப்பற்றி
எச்சரித்தாய் அல்லவா... மக்களுக்கு
ஒருமுறையேனும்
அவர்களை குறித்து என்னிடம் சொல்லிருந்தால்
அப்போதே....
சிரம் பணிந்திருப்பேனே...
ஆதி பிதா ஆதமுக்கு
கியாம நாள் வரை வாழ அவகாசம் கேட்டவன் நான்
சரியென, அதுவரை சாகாவரம் தந்தவன் நீ....
போதும்....
பொய்யானவர்களுடன்
பொறுப்போடு வாழ்ந்தது
ரப்பே., இனி எனக்கு இங்கு வேலையில்லை...
உயர்ந்தோனே....
யாரை வழி கெடுப்பது இனி...
உண்மையானவர்களை
உலகத்தில்
இனங்காட்டு...
இல்லையேல்
உண்மையாகவே
மரணித்து விடு... என்னை
-இப்படிக்கு இப்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இது கற்பனையாக எழுதப்பட்டாலும்., இன்றைய சமுகத்தில் வாழும் மக்களின் நிலைபாட்டை விவரிக்கும் சில வரிகளே இது. இன்று சைத்தானே கெட்கம் கொள்ளும் அளவிற்கு தான் மனிதர்களின் நடத்தைகள் குறிப்பாக இஸ்லாமியர்களின் செயல்கள் இருக்கின்றன...கேடுகெட்ட எண்ணங்கள் மற்றும் செயல்களிலிருந்து விலகி படைத்தவனுக்கே முற்றிலும் பணிந்து சைத்தானுக்கு மாறு செய்யும் மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக
பின் குறிப்பு: மேலுள்ள புகைப்படத்திற்கும் இப்லிஸூக்கும் (சைத்தான்) எந்தவித சம்பந்தமுமில்லை
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
ஆதத்தை (அலை) வழிக்கெடுக்க
முனைந்தவன் நான்
ஆனால் அவர் தம் மக்களோ
என்னையல்லவா.... வழிக்கெடுக்க முயல்கிறார்கள்
இது உனது விதியோ...
இல்லை
பழிக்கு பழியோ...
உன் கட்டளைக்கு உடன்படாததால்
மக்களுக்கு
மாறு செய்பவன் நான்
உன் கட்டளைக்கு உடன் பட்டும்
எனக்கு மாறு செய்வதில்லையே மக்கள்....
சஹாபாக்கள் காலத்தில்
சர்வ காலமும் போராட்டமாக இருந்தது...
பல முறை அவர்கள் வெல்ல...
சிலமுறை வென்றிருக்கிறேன்.
ஆனால்... இன்றோ
அப்துல் ரஹ்மானை வழிக்கெடுக்க முயலும் முன்
அப்துல்லாவையும் இலவசமாக
வழிகெடுத்தே என் முன் வருகிறார்.
உன்னைப் பற்றி அறியாததால்..
நான் ஏதோ ஆனேன்
என்னைப்பற்றி அறிந்தும் -மக்கள்
வீணாய் போனது ஏன்...?
நபிகளார் காலத்தில் நாளெல்லாம்
யோசித்தேன்...
துன்பம் தருவது எவ்வாறு என்று
ஆனால் இன்றோ...
யோசிக்கிறார்கள்
இன்பம் பெறுவது என்னிடம் எவ்வாறு என்று
அன்று உமரோ (ரலி) ஒரு தெரு வழி நடக்க
நானோ பிறிதொரு தெரு ஓடினேன்
இன்று எவரும்
வருவதை கண்டு ஓடி ஒளிந்தாலும்
கண்டறிந்தல்லவா...
என் தோள் மீது கைப்போட்டு
அழைத்து செல்கிறார்கள்
அனாச்சாரியங்கள் பல புரிவதற்கு
பாங்கொலி சத்தம் கேளாமல் இருக்க
"பாடு" பட்டேன் அப்போது
பாங்கொலி கேட்டுவிட போகிறது என்பதற்காக
'பாட்டு' கேட்கிறார்கள் எப்போதும்....
உன் இறைமறையில்
எண்ணற்ற இடங்களில்
என்னைப்பற்றி
எச்சரித்தாய் அல்லவா... மக்களுக்கு
ஒருமுறையேனும்
அவர்களை குறித்து என்னிடம் சொல்லிருந்தால்
அப்போதே....
சிரம் பணிந்திருப்பேனே...
ஆதி பிதா ஆதமுக்கு
கியாம நாள் வரை வாழ அவகாசம் கேட்டவன் நான்
சரியென, அதுவரை சாகாவரம் தந்தவன் நீ....
போதும்....
பொய்யானவர்களுடன்
பொறுப்போடு வாழ்ந்தது
ரப்பே., இனி எனக்கு இங்கு வேலையில்லை...
உயர்ந்தோனே....
யாரை வழி கெடுப்பது இனி...
உண்மையானவர்களை
உலகத்தில்
இனங்காட்டு...
இல்லையேல்
உண்மையாகவே
மரணித்து விடு... என்னை
-இப்படிக்கு இப்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இது கற்பனையாக எழுதப்பட்டாலும்., இன்றைய சமுகத்தில் வாழும் மக்களின் நிலைபாட்டை விவரிக்கும் சில வரிகளே இது. இன்று சைத்தானே கெட்கம் கொள்ளும் அளவிற்கு தான் மனிதர்களின் நடத்தைகள் குறிப்பாக இஸ்லாமியர்களின் செயல்கள் இருக்கின்றன...கேடுகெட்ட எண்ணங்கள் மற்றும் செயல்களிலிருந்து விலகி படைத்தவனுக்கே முற்றிலும் பணிந்து சைத்தானுக்கு மாறு செய்யும் மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக
பின் குறிப்பு: மேலுள்ள புகைப்படத்திற்கும் இப்லிஸூக்கும் (சைத்தான்) எந்தவித சம்பந்தமுமில்லை
அல்லாஹ் மிக்க அறிந்தவன்