"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, April 12, 2013

உடையும் பகுத்தறிவு..!


                                      ஓரிறையின் நற்பெயரால்

பகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் (?) எந்த விதத்தில் உடன்படுகிறது என்பதை கொஞ்சம் அலசுவோம்

பகுத்தறிவு எனப்படுவது  நிகழ்வுகளின் அல்லது கருத்துக்களின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான நிருபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைப்பது ஆகும். சுருக்கமாக கூறினால் பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.  

பகுத்தறிவு மற்றும் நாத்திகம் இவை இரண்டிற்கும் விக்கி பீடியா கொடுக்கும் வரைவிலக்கணம் இவை. ஆனால் மேற்கண்ட இரண்டு செயல்முறைகளும் முற்றிலும் தொடர்பற்றவை. அப்படியிருக்க இன்று பகுத்தறிவாதிகள் என சமூகத்தில் நாத்திகர்கள் அடையாளப்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம்..?

தொடர்வோம்.

நாத்திகர்களின் பிரதான கொள்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரே கொள்கை "கடவுள் மறுப்பு" ஒன்றே. கடவுளை மறுக்க ஆரம்பத்தில் அவர்கள் கையாண்ட வழிமுறைகள் * கடவுளின் பெயரால் சமூகத்தில் வர்த்தகரீதியான பிளவு, * கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்கள், * அறிவுக்கு ஒத்து வராத மூட பழக்க வழக்கங்கள்.

இவற்றை நன்கு கவனித்தால் ஒரு குறிப்பிட மதம் கொண்ட கொள்கைக்கு எதிர்ப்பாக மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஏனெனில் உலக அளவில் பெரும்பாலானோர் பின்பற்றும் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தால் அந்த கொள்கைகள் கூறும் அனைத்து விசயங்களையும் எதிர்க்க தன்னிடம் ஆணித்தரமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வரையறைகளை தன்னிடம் தெளிவாக வைத்திருக்காத மதங்கள் கூற்றை எதிர்த்தே தன்னை இந்த மண்ணில் நாத்திகம்  நிலை  நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

 ஆனால் இஸ்லாம் தனது கோட்பாடுகளை முன்வைத்து, கடவுள் குறித்த அனுமானங்கள், கடவுளின் பெயரால் மூட பழக்க வழக்கங்கள், கடவுளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை கூடாது என தெளிவாக பிரகடனப்படுத்திய பிறகு நாத்திகம் தனது எதிர்ப்பை இஸ்லாத்திலும் நுழைக்க, மேற்கண்ட பட்டியலோடு தற்காலத்தில் அறிவியலையும் கடவுளை மறுக்க துணைக்கு அழைக்கிறது.

ஆகவே தான் நாத்திகம் எங்கே தனது உரையாடலை தொடங்கினாலும் கடவுள் மறுப்பு, கடவுள் இருப்பு என்ற வட்டத்தில் மட்டுமே நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் எதிரில் இஸ்லாம் இருந்தால் உடனே இஸ்லாமிய சட்டத்துக்குள்ளும் தம் கிளை கேள்விகளை தொடர்கிறது. இதை தான் இன்று வரையிலும் நேரடியாகவும், இணைத்திலும் கண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் தம் கொள்கைகளை விவரித்து, அவை மட்டுமே இந்த சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு உயர்ந்த வழியென்றும், சிறந்த வழியென்றும் எங்கேயும், எப்போதும் எடுத்து கூறி மக்களை தம் பால் அழைப்பதில்லை. மாறாக கடவுள் மறுப்பை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அதையை இச்சமூகத்தில் ஒரு பிரதான ஆயுதமாக்கி தம் இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கிறது.


   தனக்கென பிரத்தியேகமான கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு என்ற ஒற்றை அணுகுமுறையை வைத்திருக்கும் ஒன்றை எப்படி அறிவார்ந்த பேரியக்கம் என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்...? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வியும் நாத்திகர்களிடையே உண்டு.

விமர்சனம் ஒன்றின் மீது பதிவு செய்யப்படுவதாக இருந்தால் அதை விமர்சிக்க முற்படும் அளவிற்கு அதன் கொள்கை- கோட்பாடுகள் வெளிப்படையாக நமக்கு முன்மொழியப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இஸ்லாத்தின் கோட்பாடுகள் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதுப் போல நாத்திகம் தனது கொள்கை கோட்பாடுகளை இந்த உலகத்திற்கு தெளிவாக முன் மொழிந்து இருக்கிறதா...? 

இன்னும் சொல்ல போனால் கடவுள் மறுப்பு என்பது தனிமனித வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு நிலைப்பாடு அவ்வளவே... மாறாக, அதுக்கொள்கையல்ல... ஒருவர் தன்னை நாத்திகராக இந்த உலகில் நிலை நிறுத்திக்கொள்ள, தம் வாழ்வை தொடர எத்தகைய வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? அதற்கு நாத்திகம் பதில் சொல்லுமா...?

மனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று ஒரு கொள்கையை விமர்சித்து அதை பொதுப்படுத்தினால் அதை விட மேலான ஒரு கொள்கையை இவ்வுலகிற்கு அதுவும் எல்லா காலத்திலும், எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படி எங்காவது நாத்திகம் தம் கொள்கையை பிரகடனப்படுத்தி இருக்கிறதா...? 

தனக்கென கொள்கையையும் தெளிவான பின்பற்றலும் இல்லாத ஒன்றின் மீது எப்படி விமர்சனங்களை பதிவு செய்ய முடியும்..? அதனால் தான் அதிகமாக நாத்திகத்தின் மீதான விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அது மட்டுமில்லை இன்று சமூகத்தில் நாத்திகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென்று எந்த பிரத்தியேக வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. இணையத்தில் கூட அஃறிணை பெயர்களோடு தான் உலா வருகிறார்கள். மதம் சார்ந்த குறியீடுகள் தம் மீது விழாமல் இருப்பதற்காக... ஆனால்

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.

உள்ளூர் முதல் உலக வர்த்த மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா..? தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் (?) மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..?

தம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் "லாவக போக்கு". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...

தனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

தொடர்புடைய ஆக்கம் :
நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "உடையும் பகுத்தறிவு..! "

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்