ஓரிறையின் நற்பெயரால்
கடவுளின் இருப்பே தெரியவில்லை. இதில் அவர் கூறும் சொர்க்கம், நரகம் எனும் மறு உலகக் கோட்பாடு இருப்பது உண்மைதானா....?
அடிப்படை மற்றும் ஆரம்பமாக இன்று வரை நாத்திகர்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான்... உண்மையாகவே இவை சிந்தனை ரீதியாக உயர்ந்த கேள்விகள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை., கவனிக்க., இவை கேள்விதான் ஒழியே வரையறுக்கப்பட்ட முடிவுகளல்ல
(ஏற்கனவே கடவுள் குறித்த ஆக்கங்கள் இத்தளத்தில் காணக்கிடைப்பதால் மறுமைக்குறித்து இங்கு காண்போம்)
இப்பிரபஞ்சத்தில் செயல்படும் எந்த ஒரு மூலத்தின் செயல்பாடுகளும் இருப்பெரும் தலைப்பின் கீழ் தான் வந்தாக வேண்டும்,
1.கருத்தியல் கோட்பாடு (Ideological theory)
2.இயங்கியல் கோட்பாடு (Dialectical theory)
இவற்றின் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்கும் ஒரு செய்கை கருத்தாகவோ அல்லது பொருளாகவோ இவற்றில் ஒரு வாதத்தை மையப்படுத்தி இருக்கவேண்டும். இதைத்தாண்டி மூன்றாம் நிலையில் ஒன்று இருந்தால் அது நம்பிக்கைச்சார்ந்த -விளக்கமுடியாத வெற்று ஊகங்களில் அமைந்ததாக அறிவியல் உலகம் கொள்ளும்.
இவ்விதிகளே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அளவுகோல்., ஆக, இவற்றை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றின் மூலத்தின் நம்பக தன்மையும் அறிய அதற்குரிய இலக்கணத்தோடு நிருபணமான ஆய்வு முடிவுகளை ஒப்பு நோக்க வேண்டும். அதன் வடிவிலக்கணம் ஒப்பிடும் அல்லது சோதிக்கும் அவ்வாய்வோடு நேர்கோணத்தில் அமைய பெற்றால் அந்த மூலம் நம்பக தன்மை வாய்ந்தது. அப்படி இல்லாது அவ்வாய்விற்கு நேர் எதிராக முரண்பட்டால் அச்செய்கை பிழையானது அல்லது பொய்யானது என முடிவு செய்யலாம்.
. . .
சரி இப்போது பதிவிற்கு செல்வோம்.,
ஒரு செய்கைக்குறித்து இரு வேறுக்கருத்துக்கள் நிலவினால் அதன் உண்மை நிலையறிய அச்செய்கையின் வரைவிலக்கணத்தோடு மாறுபடும் அக்கருத்துக்களை ஒப்பு நோக்கவேண்டும். பின்பு எந்த கருத்துக்களோடு வரையறை செய்யப்பட்ட அதன் மூலம் பொருந்தி வருகிறதோ அக்கருத்து முன்மொழிவதே உண்மை.
உதாரணத்திற்கு ஒரு திட அல்லது திரவ பொருளின் இருப்புக்குறித்து இருக்கருத்துக்கள் நிலவினால் இல்லையென்பதை விட இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தவே அதிக நிரூபணம் வேண்டும். இல்லையென வாதிடுவோர் அப்பொருளை தம் கண்ணால் காணவில்லையென்று பதில் தருவாரானால் அப்பொருள் அவர் முன் அல்லது அவரது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே போதுமான சான்று. ஆக கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரு சதவீகித வாதமே அவரது உண்மை நிலைக்கு போதுமானதாகும்., மாறாக கண்ணுக்கு தெரியாத ஆனால் கண்ணுக்கு புலப்படக்கூடிய அத்திட, திரவப்பொருள் உண்டென்று வாதிடும் ஒருவர் அதை நிருபிக்க 99 சதவீகித சான்று தர வேண்டும் .
ஏனெனில் நாம் எல்லோருக்கும் நன்றாய் தெரியும் எந்த ஒரு திட திரவ பொருளும் கண்களால் பார்த்து அறியக்கூடியதே மேலும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளுக்கான இலக்கணமும் மிக சரியாக தெளிவாக நம்மிடம் இருக்கிறது. ஆக எந்த ஒன்றை ஏற்பதையும் மறுப்பதையும் விஞ்ஞானரீதியில் உண்மைப்படுத்தலாம்.,
இச்சோதனை முறையோடு மறுமைக்கோட்பாட்டை ஒப்பு நோக்குவோம்
ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலால் மட்டுமே நூறு சதவீகித உண்மையாகும் மறுமைக்குறித்த கேள்விக்கு மிக சரியாக இரண்டுக்கும் 50 சதவீகித வாய்ப்பு இருக்கிறது. ஆக மறுமை உண்டென்பதை நிருபிக்க இருக்கும் 50 சதவீகிதம் போலவே இல்லையென்பதை நிருபிக்கவும் 50 சதவீகிதம் வாய்ப்பிருக்கிறது.,
ஆனால் பொதுவாக சாத்தியக்கூறுகள் விதிப்படி இல்லை என்பதை விட இருக்கிறது என்பதை நிருபிக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்பதை மேற்கண்ட உதாரணம் வாயிலாக அறிந்தோம். ஆனால் மறுமைக் கோட்பாட்டின் மூலம் (Origin) அறிவியல் வரையறுத்த பண்பில் அடங்கும் பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தால் நிருபிக்க வழியின்றி இச்சோதனையில் மறுமைக்கோட்பாடு முரணான பதிலை தான் தரும்.,அதை மறுக்கும் நாத்திகம் நூறு சதவீகித வெற்றி காணும்.
ஆனால் அறிவியலோடு ஒப்பு நோக்கி அதை தவறு என்று பொய்பிக்க முதலில் மறுமைக்கோட்பாடின் இலக்கணம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்
மறுமை எனும் கோட்பாட்டை குறித்து இங்கு நீங்களும் நானும் பேசுகிறோம் என்றால் அதற்கான மூலம் குர்-ஆனிலிருந்தே பெறப்படுகிறது. மாறாக இதுவல்லாத வேறு ஒன்றின் வழியாக அறியப்படவில்லை.
ஆக மறுமையெனும் மூலத்தின் வரையறையை குர்-ஆன் கூற்றை அடிப்படையாக வைத்தே எதனுடனும் ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் குர்-ஆனோ மறுமையென்பது இப்பேரண்ட விதிகளை தாண்டி உருவாக்ககப்பட்டதாக கூறும் போது இருப்பெரும் (கருத்து அல்லது பொருள் எனும்) பிரிவுகள் கீழ் நிறுத்தி மறுமைக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியாக எப்படி பொய்பிக்க முடியும்?
மேலும் எந்த வழிகளிலும் அறிவியல் வரையறுக்கும் வடிவிலக்கணங்களில் மறுமையை சுட்ட முடியாது என்பதை மிக தெளிவாக விவரிக்கும் போது மனித உருவாக்க சாதனங்களால் மறுமைக்கோட்பாட்டை சோதித்து அறிய முடியும்? அல்லது சோதித்தல் என்பது எப்படி பொருந்தும்?
ஆக அறிவியல் ரீதியாக இப்பிரபஞ்ச விதிகளுக்குள் வரையறை செய்யப்படாத மறுமையை உணடு என வாதிடுவோர் அறிவியல் ரீதியாக நிருபிக்க ஒரு சதவீகிதம் கூட நிருபணம் தர தேவையில்லை.ஆனால் அறிவியல் வரையறுக்கும் பண்புகளில் பொருந்தாத ஒன்றை விஞ்ஞான ரீதியில் இல்லையென்று நிரூபிப்பதாக இருந்தால் நூறு சதவீகித மேற்கண்ட இரு பிரிவுகளை தாண்டி மூன்றாம் நிலை காரணத்தை தேட வேண்டும்.
ஆக இங்கு மறுமை உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிருபிக்க அவசியமில்லை. என்பதை விட மறுமை என்ற ஒன்று இல்லை என்பதை நிருபிக்க அறிவியலுக்கு வழியே இல்லை.
சரி, தர்க்கரீதியாக மறுமையை மறுப்பதால் நாத்திகத்திற்கு பயனுண்டா... என்றால் வழக்கம்ப்போல் அதுவும் இல்லை...
இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டை ஏற்பதால் தனி மனித ஒழுக்கமும் பிறர் நலன் பேணுதலுமே இச்சமுகத்திற்கு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காரணம் இறப்பிற்கு பின்னுண்டான வாழ்வில் தமது செய்கை குறித்து வினவப்படுவோம் என்ற இறையச்ச உணர்வே பாவமாக காரியங்களில் ஈடுபடும் எண்ணத்தை குறைக்கும்.
மாறாக தன் மன இச்சைகளை பின்பற்றி தான் எடுக்கும் முடிவுகளின் படி வாழ்வை மேற்கொள்வதால் எல்லா தருணங்களிலும் நூறு சதவீகித நன்மையான மற்றும் பிறருக்கு தீங்கு தராத முடிவுகளை நாம் மேற்கொள்ள முடியாது.,-
சரி இப்போது முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு சோதனைக்கு தயாராவோம்..!
இவ்வுலகில் இறப்பிற்கு பிறகு ஒரு மறுமை வாழ்வு என்றொன்று இல்லை., நாம் அனைவரும் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடுவோம் என வைத்துக்கொள்வோம்.
இதனால் கடவுளை ஏற்றவர்- நிராகரித்தவர் அடையும் பயன்பாடு என்ன என்பதையும் காண்போம்.
சராசரியாக மனிதர்களின் ஆயூட்காலம் அறுபது என வைத்து இரு தரப்பினரின் வாழ்வியல் நிலைக்குறித்த கணக்கீட்டை காண்போம்
கடவுள் இல்லையென்று எண்ணத்துடன் வாழ்ந்து கடவுளுக்கு செய்யவேண்டிய செயல்ரீதியான வழிப்பாடு பணிகளையும் செய்யாமல் தம் வாழ்வின் எல்லா தருணங்களையும் கழித்து கடவுளுக்காக எப்பணிகளையும் மேற்கொள்ளாமல் சிரமமின்றி வாழ்ந்ததால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை.,
அறுபது வருட வாழ்வு முழுவதும் இலாபம்
- ஆக அவர் வாழ்வின் பெற்ற இழப்பு = 0 %
- மாறாக பெற்ற வாழ்வியல் பயன்பாடு = 100 %
மாறாக கடவுள் உண்டு என நம்பி அவனுக்காக வணங்குதல் மற்றும் இதர கடமைகளை மேற்கொண்டவரின் வாழ்வியல் பயன் மற்றும் இழப்பை கணக்கிட்டால்.,
பொதுவாக இஸ்லாம் எல்லா தருணங்களிலும் இறையை நினைக்க சொன்னாலும் அஃது இது உணர்வுரீதியான கணக்கீட்டில் வருமே தவிர செயல்ரீதியான கணக்கீட்டில் சேராது ஆக செயல்ரீதியாக தொழுகை, நோன்பு , ஹஜ் போன்றவற்றிற்காக ஒரு இறை ஏற்பாளன் அடைந்த இழப்பை காண்போம்
முதலில் தொழுகை
ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஐந்து நேர தொழுகைக்காக சராசரியாக பதினைந்து நிமிடங்களை ஒருவர் எடுத்துக்கொள்கிறார் எனில் அவர் ஒரு நாளைக்கு எழுபத்தைந்து நிமிடங்களை இறைவனுக்காக செலவழிக்கிறார். அதாவது
5 x 15 = 75
ஒரு நாளைய எழுபந்தைந்து நிமிடத்தை ஆண்டிற்கான எண்ணிக்கைக்கு உட்படுத்தினால்
0.000142694 ஒரு ஆண்டிற்கு வரும்
இதை அவரது ஆயுள் சராசரியோடு சமன்படுத்தினால்
0.000142694 X 60
ஆக வாழ் நாள் முழுவதும் அவர் தொழுகைக்காக செலவழித்த ஆண்டுகள்
0.00856164 வருடம்
ஆயுளில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தையை ஒரு சராசரி இறை ஏற்பாளன் தொழுகைக்காக பயன்படுத்துகிறார்.எனினும் குறைந்தபட்சமாக ஆண்டு கணக்கீட்டில் ஒரு வருடமாக எடுத்துக்கொள்வோம்.
ஆக தொழுகைக்காக தம் வாழ் நாளில் ஒரு வருடம் செலவழிக்கிறார்
அடுத்து நோன்பு
ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரமலான் மாதம் முழுவதும் கண்டிப்பாக நோன்பு நேற்பது கடமையாக பணிப்பதால் வருடத்திற்கு ஒரு மாதத்தை நோன்பிற்காக செலவழிக்கிறார். ஆக அவரது ஆயூளின் சராசரியோடு அவர் நோன்பிற்காக செலவழித்த மாத்த்தை கணக்கிட்டால்
1 X 60 = 60 ÷ 12 = 5
ஆக நோன்பிற்காக தம் வாழ் நாளில் ஐந்து வருடம் செலவழிக்கிறார்
இறுதியாக ஹஜ்
மற்ற இரண்டைப்போல கட்டாய கடமையல்லாமல் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இக்கடமை பணிக்கப்பட்டதாக இருப்பதால் இதற்கான ஒருவர் செலவழிக்கும் காலத்தை அறுதிட்டு கூற முடியாது.காரணம் எல்லோரும் ஹஜ் செய்வதில்லை அதேப்போல ஒருசிலர் ஒன்றிற்கு மேற்பட்டும் ஹஜ் செய்கிறார்கள்.ஆக தோரயமாக எல்லா இறை ஏற்பாளர்களும் வாழ் நாளில் ஒரு முறை ஹஜ் செய்வதாக கொள்வோம்.,
ஆக இந்த கடமைக்காக ஒருவர் மேற்கொள்ளும் பயணத்திற்காகவும், திரட்டும் நிதிக்காகவும் உடலியல் உழைப்புக்காகவும் சராசரியாக இரண்டு வருடங்களை செலவழிக்கிறார் என கொள்வோம்
ஆக வாழ் நாளில் ஹஜ் எனும் கடமைக்காக இரண்டு வருடங்கள் செலவழிக்கிறார்.
இதுவே முக்கியமாக மற்றும் முதன்மையாக ஒரு இறை ஏற்பாளன் வாழ் நாளில் செயல்ரீதியாக இறைவனுக்கு செலவிடும் காலங்கள் ஆகும். மேலும் சுன்னதான தொழுகை, நோன்பு மற்றும் இதர உபரியான வணக்கங்களுக்கு மேலும் ஒரு வருடத்தை செலவழிப்பாக வைத்துக்கொள்வோம்
ஆக உபரியான வணங்களுக்காக ஒரு வருடம் செலவழிக்கிறார்.
- தொழுகைக்காக = ஒரு வருடம்
- நோன்பிற்காக = 5 வருடங்கள்
- ஹஜ்ஜூக்காக = 2 வருடங்கள்
- உபரி வணக்கத்திற்காக = ஒரு வருடம்
இது தவிர்த்த ஏனைய வாழ்வியல் நடத்தைகளில் உண்ணுதல், உறங்குல், குடும்பம், அரசியல் மேலும் பல பொதுவான செய்கைகளில் இறை மறுப்பாளர்களைப்போலவே காலத்தை கழிக்கிறார்
ஆக வாழ் நாளில் இறைவனை வழிப்படுவதற்காக செயல்ரீதியான சிரமத்தின் அடிப்படையில் சராசரியாக ஒன்பது ஆண்டுகளை செலவழிக்கிறார்
60 : 9
எனில் இதை
100 % வாழ்வாக கொள்ளும் போது
100 / 60 X 9 = 15
ஆக ஒரு இறை நிராகரிப்பாளரை விட இறை ஏற்பாளர் இறைப்பணிக்காக தமது மொத்த வாழ்வில் 15 % இழக்கிறார். (ஆக 100-15 = 85 % வாழ்வியல் இலாபம்)
மறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையென்றால்
- இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = 100 %
- இறை ஏற்பாளர் அடையும் பயன் = 85 %
. . .
சரி., இப்போது மறுமை வாழ்வு உண்மையென்ற கோணத்தில் அணுகுவோம்.
இறை உண்டென நம்பி அவனை வணங்குவதில் தம் வாழ் நாளில் செயல்ரீதியாக ஓரு பகுதியை கழித்தால் அதற்கு பகரமாக சொர்க்கம் பெறுவார்.
ஆக இறை ஏற்பாளர் அடையும் வாழ்வியல் பயன்பாடு = 100 %
மாறாக வாழும் காலம் முழுவதும் இறை வழிக்காடுதலின் படி அவனது வழிமுறைகளை பின்பற்றாது இறை நிராகரிப்பாளர் வாழ்ந்ததால் அவருக்கு சொர்க்கம் இல்லை. சொர்க்கம் மட்டும் இல்லையென்பதோடு மட்டும் வரையறை செய்யப்பட்டிருந்தால்
அவர் வாழ்வியல் பயன்பாடு = 0 சதவீகிதமாக மட்டும் இருக்கும். ஆனால் இறையை வணங்காது வாழ்ந்ததால் நரகம் கிடைக்கும் என்கிறது. ( + >> 0 >> - )
ஆக அவரது வாழ்வியல் பயன்பாடு = -100%
மறுமை வாழ்வு உண்டென்றால்
- இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = -100 %
- இறை ஏற்பாளர் அடையும் பயன் = 100 %
இவ்விரு நிலைகளின் படி இரு சாராரும் அடைந்த பயன்கள்
மறுமை இல்லை
இறை நிராகரிப்பாளர் = 100 %
இறை ஏற்பாளர் = 85 %
மறுமை உண்டு
இறை நிராகரிப்பாளர் = - 100 %
இறை ஏற்பாளர் = 100 %
ஆக மறுமை என்ற ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருசாரார் அடையும் பயன்பாடு
இறை மறுப்பாளர்:
100 + (-100)
------------------ = 0 %
2
இறை ஏற்பாளர்
85 + 100
-------------- = 92.50 %
2
அல்ஹம்துலில்லாஹ்! அறிவியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மறுமைக்கோட்பாடு இறை நம்பிக்கையாளர்களுக்கே சாதகமான நிலையில் அமைந்திருக்கிறது ஆக,
\
- அதீத கற்பனையால் ,
- தவறான புரிந்துணர்வால்,
- முரண்பாடான அறிவியல் அணுகுமுறையால்,
- தான் தோன்றித்தனமான விளக்கத்தால்,
- வீம்பான (பிடி)வாதத்தால்,
- பொறுப்பற்ற வெறுப்புணர்ச்சியால்
இறைக்குறித்து விமர்சிக்கும் நாத்திக
"வாழ்வை பூஜ்யமாக்கும் மறுமைக்கோட்பாடு"
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.,
குறிப்பு
மேற்கண்ட விளக்கமெல்லாம் இரண்டாம் (நிலைக்)காரணம் தான்.
மறைவான வற்றின் மீதும் நம்பிக்கை வைத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளின் கீழ் தான் மறுமையை நம்புவது வருகிறது.ஆக மறுமையே ஏற்பதற்கு இதுவே இறை நம்பிக்கையாளர்களுக்கு முதன்மைக்காரணம்.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்