"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, September 21, 2010

இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)

  அஸ்ஸலாமு அலைக்கும்அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையோன் அல்லாஹுவின் பெயரால் ஆரம்பம் செய்து ...
 சாட் பண்ணுவதை பற்றி கொஞ்சம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரையை அமைக்கின்றேன்..


   இது சரியா பிழையா என விவாதம் பண்ண போனால் விளைவுகள் பாதகமாகவே அமையும் ஆயினும் உண்மை என்னவென்றால் இது தவிர்க்க படவேண்டிய ஒன்று...சாட் பண்ணுவது நேர்முகமாக அல்லாமல் மறைமுகமாக ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பதை போன்றதே..எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷெய்த்தான் வந்துவிடுகிறான்.((நபி மொழி)) 


  
நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் எண்ணங்களில் ஊடுருவியுள்ள ஷெய்த்தான் நல்லவன் இல்லையே! நம்மை வழி தவற செய்வதுதான் அவன் தலையாய நோக்கம்..


       நாம் மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் தான் பகிர்ந்து கொள்கிறோம் என சொல்லி கொள்பவர்களும் இருக்கின்றனர்.எனினும் எவரின் நம்பகத்தன்மையும் யாரும் அறியமுடியாது.அப்படியிருக்க ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்பிருக்கிறது. மேலும் ஒருவர் மற்ற நபர்களுடன் பொதுபடையாக பழக வேண்டிருப்பதால் முடிந்த அளவிற்கு தன்னை நல்லவனாகவே தான் காட்டிக்கொள்வார். 


   ஆக இணையத்தில் இருப்பவர்கள் ஒன்று நல்லவராக இருக்கலாம்.அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவன் அல்லாஹு ஒருவன்தான்.எப்படித்தான் சகோதரங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகித்தாலும் உண்மையான சகோதரங்கள் ஆகிவிடாது..மார்க்கத்தில் உடன் பிறவா சகோதரங்கள் என்று ஒன்று இல்லை... 


  வீணான பேச்சுக்கள் தேவையில்லாத விடயங்கள் தவிர்க்க பட வேண்டும்.ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் நம்மால்முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மைகளை பெற்று கொடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர பாவங்களுக்கு நாம் காரணமாக அமைந்து விட கூடாது.சாட் பண்ணுவது வழி தவறுதல்களுக்கு அழைத்து செல்லுமே தவிர அவற்றால் நன்மைகள் விளைவது மிகவும் குறைவு
  • அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர்பாலினத்துடன் சாட் பண்ணுவதை தவிர்ப்பது சிறந்தது 
  • இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாட் பண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்
என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!


''நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33;32)'


         நபியின் மனைவிமார்களுக்கே இந்த கட்டளை என்றால் நாம் எல்லாம் எங்கே ?
தயவு செய்து நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுங்கள். நண்பன்தானே என்ற நோக்கில் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொள்வது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது. தொலைபேசியில் பேசுவது..இவை எல்லாம் நம் மார்க்கம் கற்றுத்தந்த வழிமுறைகள் அல்ல.என்னதான் நண்பன் , சகோதரன் என்றாலும் அல்லாஹு ஹராம் ஆக்கியது ஹராம் தான் அதை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.


அன்புக்குரிய சகோதரர்களே! பெண்களை பாவம் செய்வதற்கு காரணமாக நீங்கள் இருப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .அவர்களின் பேச்சுகளில் பிழைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கள் அவர்கள் தவறிழைக்கும் வேலையில் கண்டியுங்கள் மாறாக சுதந்திரம்,சம உரிமை எனும் பெயரில் தட்டி கொடுக்காதீர்கள்,ஊக்கபடுத்தாதீர்கள் 


 நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் நாளை நம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.அல்லாஹுவின் முன் நாளை நிற்க போவதை எண்ணி அஞ்சி கொள்வோம்.நம் இறைவனிடம் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் எத்தனையோ சகோதரிகளின் அனுபவமும் அவல நிலையுமே வெளிப்பட்டு இவ்வுண்மைக்கு சாட்சியாக இருக்கின்றது. நாளை மறுமையை அஞ்சி கொள்வோமாக!


சுவனம் எனும் எம் இலட்சிய பயணத்தில் விளையும் இடையூறுகளை இறைவனுக்காக களைவோமாக !
அல்லாஹு நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக !!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....!!!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.  (24:21)
                        
                                                          - ருக்கையா அப்துல்லாஹ்
                                                               S R I   L A N G A


8 comments:

  1. நல்ல பதிவு.. //அல்லாஹு நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக !!
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....!!!//

    ReplyDelete
  2. i'm realy worrying about our sisters and brothers in islam ..they r behaving very badly when they are using net.. so please consider this message and share with others may ALLAH bless us and guide us in his holy path aameen..!!

    jazakallahu khairan for your giveups...

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ,
    உண்மையை தெளிவாக
    எழுதி இருக்கிறீர்கள்.
    பெண்களுக்கு தேவையான
    பதிவு. அல்லாஹ் நம்
    அனைவரையும் நேரான
    வழியில் செலுத்துவானாக!
    ஆமீன்.!

    ReplyDelete
  4. வலைக்கும் சலாம் சகோதரி ஆயிஷா
    ஜசகல்லஹு ஹைர்
    aameen aameen yarabbal aalameen..!!!

    ReplyDelete
  5. அருமையான அதே நேரம் மிக மிக தேவையான பதிவு, எல்லா சகோதரிகளுக்கும்!! ஜஸாகல்லாஹு ஹைர்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. wa iyyakum ANNU , thnx brother NADEEM..may ALLAH protect us and grand us to janna..aameen!!

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்