"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, December 02, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

                                                ஓரிறையின் நற்பெயரால்

           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை கடவுள் நமக்கு வழங்க வேண்டும் ..
   நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"


  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.
                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29

     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?

     அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

    இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல.
 
     ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?

      இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான்.
 
        அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?

ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது


எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115

    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்.,

     ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கவுமே எல்லாம் இறை நாட்டம் எனும் விதி அங்கு அவசியமாகிறது.,

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23

    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை., ஏனெனில்


    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

11 comments:

  1. // ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செய்லாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்த தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை//

    நல்லா சொன்னீங்க. விதியே நெனச்சு புலம்பி பயனில்லை....

    தொடர்ந்து நல்ல பயனுள்ள கட்டுரை வழங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரி ஆமினா அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி., எனினும் விதிக்குறித்து தனது தவறான புரிதலினால் இஸ்லாத்தை கூறைக்கூறுவோரைக்காணும் போது அவர்கள் மேல் கோபத்திற்கு பதிலாக வருத்தம் தான் அதிகரிக்கிறது சகோதரி...

    சகோதர் NKS.ஹாஜா மைதீன் தங்கள் வருகைக்கு நன்றி . துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்கு...

    ReplyDelete
  3. Nalla pathivu sagodharar gulaam

    ReplyDelete
  4. நன்றி சகோதரர்., துஆ செய்யுங்கள்

    ReplyDelete
  5. 5/12/10......அஸ்ஸலாமு
    அழைக்கும் ..........
    மார்க்க பிரசாரத்தில்
    ஈடு படும் பொழுது
    பல எடையுர்களை
    சாதிக்க வேண்டிய
    நிலை ஏற்படும் ஏன்
    என்றால்....
    நபிமார்கள்
    இஸ்லாமிய பிரசாரம் சையும்
    பொழுது பல
    துன்பகளை சந்திதுல்லாகள்.... எங்கல்லாம் சத்தியம் சொல்லப்படுகிறதோ அங்கல்லாம்
    அசாத்தியம் எதிர்க்க தான் செயும்........நபி(ஸல்) அவர்கள்
    முதன் முதலில் பிரசாரம் சையும் போது ,நபி(ஸல்)அவர்கள்
    மீது அதிகம் பாசம் வைத்து இருந்த அபுலஹெப் எதிர்த்தான்.........
    நபி(ஸல்)அவர்கள் முதல் எதிப்பு
    எங்கிருந்து சந்திகிராகள் என்றால் அவர்களுடைய
    குடுபதிளிருந்து தான் சந்திகிறார்கள்......
    (((((((((((((((உங்களுடைய இந்த
    மாக்க பிரசாரத்தை
    அல்லாஹ் மேல்லும் சிறப்பாகுவானாகே!))))))))
    gulaaam

    ReplyDelete
  6. நன்றி சகோதரர்., துஆ செய்யுங்கள்

    ReplyDelete
  7. வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி



    மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி
    மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரி தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  9. இறை அடிமைDecember 12, 2010 at 10:51 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    ஒரு சின்ன சந்தேகம். தாங்கள் ஒரு இந்துவாக பிறந்திருந்தால் இஸ்லாத்தை இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்திருப்பீர்களா? இஸ்லாத்திற்கு மதம் மாறியிருப்பீர்களா?

    ReplyDelete
  10. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
    சகோதரர் இறை அடிமை அவர்களுக்கு., ஒருவேளை நான் வேறு மதத்தில் பிறந்திருந்திருந்தால் மட்டுமல்ல கடவுளே கிடையாது என்ற நிலையில இருந்திருந்தாலும் இறைவன் நாடியிருந்தால் கண்டிப்பாக என் பிறவி மார்க்கத்தை தழுவியிருப்பேன் ஏனெனில் நான் கடவுள் குறித்து அறிந்த விதம் என்னை கண்டிப்பாக இஸ்லாத்தில் இணைத்திருக்கும்., (அதுக்குறித்த விளக்கங்கள் தான் இங்கு ஏனைய பதிவுகள்) மேலும் விரிவுவேண்டினால் எனக்கு மெயிலிடவும். இன்ஷா அல்லாஹ் தகவல் தருகிறேன்

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்