"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, August 28, 2011

மாதங்களின் முன்மாதிரி..!


அன்புடையோனின் அருளோடு
அழகிய ஆரோக்கியத்தையும்
அகிலத்தார்க்கு
அள்ளி தரும்
அறிவார்ந்த மாதம்..!


உண்டு பருக ஓராயிரம் வகை
உணவிருந்தும்... 
மறையோனின் சொல் கேட்டு
இறையச்ச உணர்வை மட்டுமே -
நன்றாய் பருக வழிவகுக்கும் 
சங்கை மிகு மாதம்..!


இறுதித்தூதர் -தூய
இறைவனை
இனங்கண்ட..
இரட்சகன் -தன்
இறுதித்தூதரை
ஈருலகிற்கும்
இனங்காட்ட...

இயற்கை வேதம்
இறங்க தொடங்கிய
இறை நெறி மாதம்..!


நின்று வணங்கும் போதெல்லாம்
நன்று வணங்கும்
நல்லெண்ணத்தை என்றும் உண்டாக்கும்
புண்ணிய மாதம்!


பசித்திருக்க.
தாகித்திருக்க..
விழித்திருக்க...
அனைத்திற்கும் மத்தியில்
இறைவனை பயந்திருக்க
எப்போதும் இதை
நினைத்திருக்க...
வருடத்திற்கு ஒரு முறை
மட்டுமே வருகை தந்து
வாழ்நாள் முழுவதையும்
வசந்தமாக்கும்
விசித்திர விருந்தாளி..!


பசி வந்தால் பத்தும் பறக்கும்
பழமொழியை பொய்யாக்கி
அதிக பசி இருப்பதை அறிந்தும் 
அருகே வந்தவருக்கு
ஏராளமான உணவும் -அதை விட 
தாரளமான இடமும் கொடுக்கச்செய்யும் 
மனித நேய மாதம்..!

கெட்டதை
பார்க்காதே..!
தீயதை
பேசாதே..!!
தேவையற்றதை
எண்ணாதே..!!!
அறிந்திருந்தும் மறந்த
ஆறறிவு மனிதனுக்கு
அறிவார்ந்த பாடம் புகட்டும்
அஃறிணை
ஆசான்.!


இரவெல்லாம் பகலாக்கி
நிலைத்திருந்து
பகலெல்லாம் இரவாக
நினைத்திருந்து
இறை தொழ...
பருவ நிலை மாற்றத்தை
மனநிலை ஏற்றத்தோடு
பக்குவமாய் பொருத்தும் 
பயன்மிக்க மாதம்


ஏனைய நாட்களில்
எப்படி வாழ வேண்டுமென்பதை
ஏற்றத்துடன்
மனித சமுகங்களுக்கு
எடுத்துக்காட்டும்
மாதங்களின்
அழகிய முன்மாதிரி


ரமலான் -
இறைவன் ஈந்த 
பரிசு.,
பெருநாள்- 
ரமலான் ஈன்ற
பரிசு...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
   கண்ணியமானவர்களுக்கு., " நோன்பு பெருநாள் வாழ்த்துகள் ”
பேரறிவாளன் அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட எல்லாஅமல்களையும் பொருந்திக்கொள்வானாக..!
உங்களுக்கும் எனக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் குடும்பத்தார்க்கும் இருக்கும் காலமெல்லாம் இனிதே வாழ அருள் புரிவானாக..!!





5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்..

    //வருடத்திற்கு ஒரு முறை
    மட்டுமே வருகை தந்து
    வாழ்நாள் முழுவதையும்
    வசந்தமாக்கும்
    விசித்திர விருந்தாளி..!//

    மாஷா அல்லாஹ் அருமை

    ம்ம் கவிஞர் குலாம் அவர்களே
    தொடர்ந்து எழுதுங்கள் கவிதைகளை
    பெருநாள் வாழ்த்துக்களை
    நாங்கள் கற்றுக் கொள்வதற்காக

    ReplyDelete
  2. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    @ SADAMFIVE

    ஜஸாகல்லாஹ் கைரன்
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்