ஓரிறையின் நற்பெயரால்.,
சமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,
=====================================
இத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,
=====================================
. . .
டெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,
இப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத
உங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக..!! என்ற இஸ்லாமிய முகமனை திரித்து
// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். //
- என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.
2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
இப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்) விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,
(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)
ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்
On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.)
என்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,
ஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்
தனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,
புரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...
நன்றி.!
தமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)
(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)
1. சகோதரி அஸ்மா:
http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
2. சகோதரர் குலாம்:
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
3. சகோதரர் Faaique:
http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
4. சகோதரர் முஹம்மது ஆஷிக்:
http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
5. சகோதரர் அப்துல் பாசித்:
http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
6. சகோதரர் ஹைதர் அலி:
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
7. சகோதரி ஆமீனா:
http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
8. சகோதரர் ஜமால்:
http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
9. சகோதரர் ரஜின்:
http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
10. சகோதரர் இளம் தூயவன்:
http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்):
http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
12. சகோதரர் கார்பன் கூட்டாளி:
http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
13. சகோதரி ஜலீலா கமால்:
http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:
http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
15. சகோதரர் ஹாஜா மைதீன்:
http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
16. சகோதரர் HajasreeN:
http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
17. சகோதரர் அரபுத்தமிழன்:
18. சகோதரர் அப்துல் ஹகீம்:
http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html
இறை நாடினால் இனியும் தொடரும்....