"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Friday, January 18, 2013

கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?

                                      ஓரிறையின் நற்பெயரால்


முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும். 

எந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 

 கடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,
1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது
2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது

இதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும். 

ஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.

கடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.

ஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று!

அடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம். 
கடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங்களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை!

இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை! " இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்.. 


சில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்., 
 இவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது
 அவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை
 உலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்
 அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது
போன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட., 

ஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும்? ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை! 

ஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்

சரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா..? அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா? அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா...? அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள்? என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா?

ஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.

அறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்

ஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்., 

அதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...   

                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?"

Tuesday, June 28, 2011

அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு


                                         ஓரிறையின் நற்பெயரால்

        இப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்., 

      குர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல்!, ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்.,
      ஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,
இப்போது பதிவிற்கு வருவோம்.,

அல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்
 அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.


  இது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக "கால் நடை" என்று வருகிறது .,

      ஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே "ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,

   மேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,
மேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,

  • திடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..?
  • அதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.?  
         -ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.

  "அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்"      இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,    

         ஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து.,  ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,


   அஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும் போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம்.
     சென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு "Medical Miracle" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே!

    ஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..! 
பேசும் மொழி..? 
 ஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
       உண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை..? எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..    
   அஃதில்லாமல் மேலும்,
மொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? 
என்று கூறினால்.,
           இன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சார்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..? 


    ஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.,
   அஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..?

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

                                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு"

Saturday, July 10, 2010

குர்-ஆனும் விஞ்ஞானமும்

           ஓரிறையின் நற்பெயரால்...

        திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி வேத வெளிபாடு.
     ...இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (6:90 சுருக்கம்)
      இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)
        ஆக,தன்னை மக்களுக்கான ஒரு தூய வழிக்காட்டியாகவே பிரகனப்படுத்துகிறது. மேலும் இது இறைவனின் வேதம் என்பதை மக்களுக்கு பறைச்சாற்றும் முகமாக இதில் எந்த ஒரு வசனமும், பிறிதொரு வசனத்திற்கும் முரண்படாமல் இருக்கிறது எனவும் உரைக்கிறது.
    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)
மேலும் பார்க்க: 18:1, 39:23,28
        இது இறைவேதம் என்பதில் எவரேனும் சந்தேகம் கொண்டால் குர்-ஆனிலுள்ளதை போன்று ஒரெயொரு வசனத்தையாவது கொண்டு வர சொல்லுகிறது
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)
மேலும் பார்க்க: 10:38, 11:13,17:88
            14 நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் விடப்பட்ட சவால் இன்னும் முறியடிக்கவும் படவில்லை.உலக அழிவு நாள் வரையிலும் இதற்கு பதில் தர வாய்ப்பும் இல்லை.கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறுபாடற்றது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது,பொய்யோ தேவையற்ற எந்த ஒரு செய்தியோ குர்-ஆனில் இடம் பெறவில்லை.
      அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (41:42)
       சுருங்கக்கூறின்,குர்-ஆன் தனிமனித வாழ்க்கைக்கு ஏதுவாக அனைத்து நடைமுறை செயல்களிலும் ஒருவன் தன் சுய சிந்தனை அடிப்படையில் செயல் பட நன்மைகளையும், தீமைகளையும் பிரித்தறிவிக்கும் இறைவனால் அவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு தூய வாழ்வு நெறி என்பதை அறியலாம்.
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.(39:41)
மேலும் பார்க்க:2:2, 17:9,82, 18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44,50:45,80:11)
          குர்-ஆன் தன் நிலை,செயல்பாடுகளை விரிவாக விளக்கி அதனை நிராகரிப்போருக்கு ஓர் அறைகூவலையும் முன்வைக்கிறது.எனவே குர்-ஆனை எதிர்த்து கூப்பாடு போடுவோர் முதலில் அது கூறும் சவால்களை ஏற்க முன் வரவேண்டும். இதை தொடாமல் விஞ்ஞான பிழை குர்-ஆனில் விளைந்துள்ளது என கூறுவோர் கிழ்காணும் பதிவையும் பார்வையிடவும்

                   மேற்கூறிய விளக்கங்களால் குர்-ஆன் அருளப்பெற்ற காரணம் தெளிவாக விளங்கும். இஃதில்லாமல் குர்-ஆன் ஒரு விஞ்ஞான நூலாகவோ, மருத்துவ,வரலாற்று நூலாகவோ எங்கேணும் தன்னை பெருமை ப்படுத்தி கூறவில்லை.அவ்வாறு மனித சமுகத்திற்கு தேவையான உபதேசங்களை வழங்கும் வழியில் மனிதர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு முன்சென்ற சமுகங்களின் வரலாறுகளையும், சிந்தனையை தூண்டும் பொருட்டு அறிவியல் மேற்கோள்களும் குர்-ஆன் முழுவதும் இரைந்து கிடக்கிறது.அறிவியல் உண்மைகளை உலகுக்கு முன்னிறுத்தி தான் தன்னை இறை வேதம் என பறைச்சாற்றி கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை.அதன் தெளிவான எழுத்து நடை, உயர்ந்த சிந்தனை கருத்தோட்டம் ,முரண்பாடின்மை, எக்காலத்திற்கும், எத்தகையை மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள்,எதை சொல்ல விழைந்ததோ அதை குறித்த தெளிவான பார்வை விரிவான விளக்கம்- குற்றவாளிகளை குறைக்க சட்டம் இயற்றாமல்,குற்றங்களை குறைக்க சட்டம் இயற்றிய முறையான இறையாணை- இதுவே போதுமானது திருக்குர்-ஆன் இறைவேதம் என எற்க!
      எனினும் திருக்குர்-ஆனில் விஞ்ஞான உவமைகளும், உண்மைகளும் மெல்லிய ஊடாக வலம் வருவதற்கு
1.இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுறுத்துவதற்காகவும்,
2.மனிதர்களிடத்தில் தம் அத்தாட்சியை நிறுவுவதற்காகவும்,
3.தமது வல்லமையே மனிதர்கள் மத்தியில் தெளிவுறுத்துவதற்காகவும்  விஞ்ஞான விவரிப்புகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
    இதனை இந்த இறை வசனம் மூலம் எளிமையாக உறுதிப்படுத்தலாம்.
சூரா அந்நம்ல்(27) வசனம் 18 மற்றும் 19
    இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
   அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.
    *இவ்வசனத்தில் இரு சம்பவங்கள் கூறப்படுகின்றன, எறும்புகள் சுலைமான் நபி குறித்தும் அவர்கள் படை குறித்தும் சக எறும்புகளிடம் அறிவிக்கிறது.
*அது கேட்டு நபி சுலைமான் அவர்கள் சிரித்தார்கள்.
     இவ்விரு வாக்கியங்களில் எறும்புகள் பேசியது என்ற நிகழ்வு முன்னிலைப்படுத்த பாடாமல், அவை பேசும் மொழியை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நபியவர்களுக்கு (இறைவன் புறத்திலிருந்து) அருட்கொடையாக வழங்கப்பட்டதே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது,குர்-ஆனை பொருத்தவரை இங்கு சுலைமான் நபியவர்களின் படையின் தன்மை குறித்தே விவரிக்கிறது.
    எனினும் இங்கு எறும்பு பேசிய விஞ்ஞானம் இலைமறை காயாக உணர்த்தப்படுகிறது. இன்றைய அறிவியலும் இது குறித்து முரண்பாடான தகவல்கள் தந்தால் குர்-ஆனிய வார்த்தைகள் பொய்யென ஆகும்.மாறாக எறும்புகளுக்கும் பேசுமொழி உண்டு,அவை தன்னின தொடர்புக்கு கமிஞ்சை வடிவிலான உரையாடலை மேற்கொள்கிறது மேலும் அவைகளுக்கிடையே கட்டளைகளும், பின்பற்றுதலும் சீராக பரிமாற படுகின்றன என்று இவ்வசனத்திற்கு வலுச்சேர்க்க மேலதிக விபரத்தையும் இன்றைய விஞ்ஞானம் தருகிறது.
   ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. ((taken from wikipida))
 உதாரணத்திற்காக தான் இங்கு ஒன்று
     இதுபோலவே குர்-ஆன் கூறும் ஏனைய விஞ்ஞான கூற்றுக்களும்.,
 இன்று விஞ்ஞான விளிம்பில் இருக்கும் எண்ணற்ற நிருப்பிக்கப்பட்ட உண்மைகளும்,நிருப்பிக்கப்பட இருக்கும் ஏனைய நிகழ்வுகளும் குர்-ஆனின் ஒரு அறிவியல் சார்ந்த எந்த கருத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக நிதர்சனமாக நிருபணமாகும் உண்மைகளுக்கு செவி சாய்க்கவே செய்கிறது.எனினும் குர்-ஆன் அறிவியலோடு முரண்படுவதாக கூக்கூரலிடுவோர் எந்த வசனம் அறிவியல் முரண்பாட்டை ஆமோதிக்கிறது என்பதை தெளிவுறுத்தட்டும்.அஃதில்லாமல் ஏனைய குர்-ஆனின் விஞ்ஞான நிலை அறிவியல் விளக்க உண்மைகளுக்கு கீழ் காணும் சுட்டியை பார்வையிடுக., இவை யாவும் இஸ்லாமிய இணையங்களில் தொகுக்கப்பட்டவையே தவிர,இஸ்லாமியர் தொகுத்தவையல்ல மாறாக மேற்கத்திய துறைச்சார் வல்லுனர்களால் நம்பகதகுந்த அடிப்படையில் திரட்டப்பட்ட அறிவியல் பதிப்புக்கள்.

கருவியல் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/KARU.HTM

மலைகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/malai.htm

உலகத் தோற்றம் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/world.htm

மனித மூளை குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/brain.htm

ஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/sea.htm

ஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/ulalai.htm

மேகங்கள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/eraimaililscience.htm

மனித வளர்ச்சியின் படிநிலை குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_creation_human.htm

கரு வளர்ச்சி குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_embryology.htm

சிசுவின் உள்/வெளித்தோற்றம் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_in_out.htm

வலி உணரும் நரம்புகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_skin.htm

வானவியல் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_astronomy.htm

ஒட்டக படைப்பைக்குறித்து
http://www.tamilislam.com/science/camel_science.htm  

மேலும்
*விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
*பாலின் உற்பத்தி குறித்து
*அனைத்து படைப்பினங்களிலும் ஜோடி
*பெருவெடிப்பு கொள்கை
*சூரியனும் இதர கோள்களும்
*ஓரங்களில் குறைந்து வரும் பூமி
*தேனின் மருத்துவ குணம் -ஆகியவைப் பற்றி அறிய
http://www.tamililquran.com/quranscience.asp

 துறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/scientist.htm

    அநேக இணைய பக்கங்களில் இதைப் போன்ற ஆயிரமாயிரம் அறிவியல் உண்மைகள் குர்-ஆனின் வசனங்களோடு கைக்கோர்த்து அணியணியாய் நிற்கின்றன. வேண்டுவோர் இப்பக்கங்களை சந்திக்கட்டும்,பின் சிந்திக்கட்டும்.,
       பொதுவாக எந்த ஒரு மத சிந்தாந்தாமோ, சமயம் சாரா கொள்கை கோட்பாடுகளோ, ஏனைய சமுகம் சார்ந்த சட்ட திட்டங்களோ தான் கூறும் கருத்துகளை ஏற்று மக்களை அதன்படி நடக்கவே பணிக்கும், மாறாக அத்தகையை அறவுரைகளை பேணுவதோடு நின்று விடாமல் அது கூறும் எந்த ஒரு செயல்பாடுகளையும் சிந்தித்து பின்பற்றுவதற்கு தகுந்ததா...என மனித அறிவை செயல்படுத்த தூண்டும் தனித்தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்பதை குர்-ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது பாருங்கள்
  மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)
 இவ்வாறு தனிமனித சிந்தையே தட்டி எழுப்பும் ஓர் உயர் வேதம் மொத்த உலக அறிவியலை முரண்பாடென்னும் பாலுட்டி உறங்க செய்திடுமா..?
   
                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "குர்-ஆனும் விஞ்ஞானமும்"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்