"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label விமர்சனம்.. Show all posts
Showing posts with label விமர்சனம்.. Show all posts

Tuesday, December 27, 2011

கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?


                                                        ஓரிறையின் நற்பெயரால்

கடவுள்!
மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.
ஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.

 கடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.

அதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை "நாத்திகவாதியாக" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.

ஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.

ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக  சொல்கின்றனர் நாத்திகர்கள்.

உண்மைதான். ஆய்ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.

அதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.

அறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம்.  ஆம்!  ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.

இப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள் 

சரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,

காரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விளைவு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது. 


ஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.

அதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்?

பேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

ஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.

இலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை!

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?"

Wednesday, September 01, 2010

ஏன் இஸ்லாம்...?

                                                 ஓரிறையின் நற்பெயரால்


"இஸ்லாம் " என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதம் சார்ந்த/ சாரா கொள்கையுடையவர்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏன் ?

 இஸ்லாம் இந்த மனித சமுகத்திற்கு அளித்தது என்ன? மனித சமுகத்திலிருந்து அழித்தது என்ன? என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 முதலில் யாவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்., இஸ்லாம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய பாலையில் முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட மதமல்ல.,

    மாறாக முஹம்மது நபி அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமே இஸ்லாம்.ஏனெனில் மனித மூலத்தின் ஆதி பிதா மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாம் மனித மனங்களில் உலாவர துவங்கிய மார்க்கம்.
 
 இத்தெரிவை ஆயிரம் முறை உலகுக்கு அறிவுறுத்தியும் ஆயிரத்தொருமுறை இவ்வுலகு அதனை தவறாக புரிந்துக்கொண்டது அல்லது இவ்வுலகிற்கு தவறாக புரிய வைக்கப்பட்டது., எனவே தான் இஸ்லாம் குறித்து "மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்" என பெர்னார்ட் ஷா கூறினார்.

     ஏனைய மதங்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை ஒரு வரையறுத்தலின்றியே வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் இஸ்லாம் மட்டுமே மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்னமே அதன் கொள்கை கோட்பாடுகளை முன்மொழிந்து அது எக்காலத்திற்கும் எதற்காகவும் யாருக்காகவும் நெகிழ்வடையாது என உரக்கக்கூறிய மார்க்கம்.

    ஆனால் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாத்திற்கு எதிராக நடுநிலை சிந்தனை தவிர்த்த ஏனையோரால் அநாகரிகத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி விமர்சனம் என்ற பெயரில் தன்னின் மட்டரக எண்ணங்களுக்கு நாகரிக ஆடை கட்டி நாடெங்கிலும் நடமாட விட்டு மகிழ்கின்றனர்.அதிலும் இணையத்தில் விமர்சிப்போர்  தங்கள் வார்த்தை வாகனத்தில் வன்முறை எழுத்துக்களையே வறுத்தமின்றி சுமந்து வருகின்றனர்.

    இஸ்லாமிய (?) பயங்கரவாதத்தை வேரறுக்கிறோம் என கூறி எழுத்து பயங்கரவாதத்தை அமோகமாக இணையத்தில் அறுவடை செய்கிறார்கள்.அவர்களிடம் நாம் கேட்டு கொள்வது எல்லாம் ஒன்று தான் "இஸ்லாம் முன் மொழியும் எந்த ஒரு நடைமுறை சட்டம் இன்று மனித சமுகத்திற்கு பொருந்தாது? என்பதை குறித்து விமர்சனம் செய்யுங்கள்
  
    இவ்வாறு கேட்ட மாத்திரத்தில் "உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? என்பதே ஏனையோரின் எதிர்கேள்வியாக இருக்கும். உங்களோடு சேர்ந்து நாங்களும் கேட்கிறோம்...உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? இஸ்லாமும் அது கூறும் வழி முறைகளுமா...? அல்லது இஸ்லாமிய பெயரில் அறியாமையால் செய்யும் தனிமனித அல்லது சுயநலம் விரும்பும் சமுக குழுக்களா...?

    எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல! ஏனெனில் எந்த காரணமுமின்றி ஒருவனை கொலை செய்தவன் சமுகம் முழுவதையும் கொலை செய்தவன் போலாவான் என்ற நபிவழியில் வார்ர்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள்.

       ஆப்கானிய தாலிபான்களையும், எங்கோ இருக்கும் அல் கொய்தாவையும் விடுங்கள் (அவர்கள் செய்வதை நானறியேன்)  உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்து வெட்ட வந்திருக்கிறார்கள்? தாங்கள் இல்லாத பொழுது எத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...?
 
     அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள் குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...? சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள்    இஸ்லாமல்லாத இணைய சகோதர்களே மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி.,

    உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.

   இஸ்லாமின் ஏனைய ஆக்கங்கள் குறித்து விமர்சனம் எழுதுவதை விட பர்தா குறித்து எழுவதே அதிகம்,அனைத்திற்கும் பதில் அளித்தாலும் மீண்டு(ம்) அவர்களிடம் முளைக்கும் கேள்வி ஏன் கட்டாய படுத்துகிறீர்கள்? இக்கேள்விக்கு முன் இம்மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை என்பதன் அர்த்தம் அறிவார்களா குர்-ஆனை கரைத்து குடித்த இந்த அரைகுறை அறிவு ஜீவிகள்,.

   இஸ்லாம் முன் மொழியும் பர்தா (அது பெண்களுக்கு மட்டுமானது அல்ல பார்க்க :அல்குர்ஆன்-24:30)  இந்த சமுக பெண்களுக்கு எத்தகைய கேடுகளை விளைவித்தது? பர்தா அணிந்த பெண்களை நெருப்பில் விழுந்த விட்டில்களாக வர்ணிக்க முற்படுவோர் இஸ்லாம் ஏன் பெண்களுக்கு அவ்வாறு கூறுகிறது என்ற உண்மையே அறிந்துக்கொண்டே மறுக்காதீர்கள்.(பர்தா குறித்து மேலும் அறிய)

    அதுப்போலவே பலதார மணமும்.,
   பலதார மணத்தை எதிர்ப்போர் வாழும் நாட்டில் தான் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறை அணியுங்கள் என விபச்சாரத்தின் வாசலுக்கு  விளம்பர விலாசம் தரப்படுகிறது.

   மேலும் சீன்ன வீடு என்றும் வைப்பாட்டிகள் என்றும் பெண்களுக்கு உயர் அந்தஸ்து(?) வழங்கவதை பலதார மணம் முற்றாக தவிர்க்கிறதே அதற்காகவா இஸ்லாத்தின் மீது கோபம்? இதை எதிர்ப்போர் முதலில் "இன்று உலகில் நடைபெறும் விபச்சாரம் முழுவதையும் சின்ன வீட்டு பிரச்சனைகளையும் முற்றாக ஒழியுங்கள்

  பின்பு நாமும் ஒத்துக்கொள்கிறோம் பலதார மணம் வேண்டாம் என்று. இங்கு தடுப்பது ஒரு விசயமல்ல ஒழிப்பது தான் முக்கியம்.அதை தான் இஸ்லாம் சொன்னது, செய்யவும் சொன்னது. இஸ்லாமியனாக பிறக்கும் எல்லா முஸ்லிம்களும் நான்கு மனைவிகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கம் வலியுறுத்தும் கட்டாய கடமையல்ல...அது ஒரு சலுகை மட்டுமே...அதற்கு உங்கள் வீடுகளுக்கு அருகாமையில் வாழும் முஸ்லிம்களே சாட்சி!

   இணைய சகோதரர்களே தாங்கள் தாராளமாக இஸ்லாத்தின் மீது ஆதாரத்தோடு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.உங்களுக்காக பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம். இன்று இஸ்லாமியர்களை விட அஃதில்லாதோர் தான் இஸ்லாத்தில் குறை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாமிய நூல்களை அதிகமாக பார்வையிடுகிறார்கள்

   அல்ஹம்துலில்லாஹ்! தனக்கு அறவே பிடிக்காது என்று சொல்வனவற்றோடு தான் தங்கள் அன்றாட வாழ்வை கழிக்கிறார்கள்.இது தான் இஸ்லாம் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம்.நீங்கள் இஸ்லாத்தை நேசிக்க வேண்டாம் உங்கள் எண்ணங்கள் உண்மையே சுவாசிக்கட்டும் ஏனெனில் இஸ்லாம் பற்றி அறிய அதுவே முதற்படி

 ஏன் இஸ்லாம் என இஸ்லாத்தில் குறை காண புறப்பட்டவர்களின் தேடுதல் நடுநிலையோடு இருந்ததனால் தான் மால்கம்X ,பிலால் பிலிப்ஸ் போன்றோர்கள் முதல் இன்று பெரியார்தாசன் வரை சொல்லிக்கொள்கிறார்கள் "என் இஸ்லாம்"

குறிப்பு:இன்று நீங்களோ, நானோ இஸ்லாத்திற்கு வருவதாலோ, வெளியேருவதாலோ இஸ்லாத்திற்கு எந்த உயர்வும், தாழ்வும் இல்லை மாறாக நன்மையும் தீமையும் நமக்கே!   
    
   எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (இறுதி வேதம் 2:146)

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "ஏன் இஸ்லாம்...?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்