சாதாரண மனிதனாக வாழ்ந்து மரித்தவனை சில பொழுதுகளிலே இவ்வுலகம் மறப்பதும் உண்டு, தலைவராக இருந்து இறந்தவருக்கு வருடந்தோறும் பிறந்த நாள் காணும் 'பகுத்தறிவு'க்கு ஒவ்வாத செயலையும் கண்டு வியப்பதும் உண்டு.
முரண்பட்ட இரு மரண பின்புலங்களையும் இந்த மனித வர்க்கம் இன்னும் சரிக்கண்டு தான் கொண்டிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டு இதிலும் தம் பார்வையை வித்தியாசப்படுத்தி காட்டியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
உயிருடன் இருக்கும் எவருக்காகவும் எழுந்து நின்று தன் சுய மரியாதையே இழக்ககூடாதென பிரகடனப்படுத்தி முதன்முறையாக மனிதம் என்பதற்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம். அதை செயல்படுத்தி காட்டியது இறுதித்தூது.
"ஏகத்துவ கொள்கையில்" எந்த சமூகத்துடன் எந்த சமரசமும் செய்திடாத ஏந்தல் நபியவர்கள், எந்த தலைவனாலும் ,எச்சபையானாலும் பிறருக்காக எழவும் இல்லை- தனக்காக எழ சொல்லவும் இல்லை. கொண்ட கொள்கையில் நின்ற பிடிப்பைக்கண்டு சாயம் போன சரித்திர பக்கங்கள் தம் முகத்தில் வர்ண புன்னகை பூசிக்கொண்ட காலம் அது..!
மரியாதை என்பதன் பொதுவிதியை இவ்வுலகிற்கு மீண்டுமொருமுறை மாற்றியமைத்தார்கள். உயிர் வாழும் காலத்தே எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் அவனுக்கான துதிப்பாடலை முற்றிலும் தவிர்க்க சொன்ன நபி (ஸல்) மரித்த உயிர் சாமானியனுடையதாக இருந்தாலும் அதற்கு மதிப்பு உண்டென்றார்கள். அதற்கு ஒரு ஆதார நிகழ்வை பாருங்கள்.
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா' என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 1311, 1313
அல்லாஹ்வை வணங்காதவர்களுக்கு ஈடேற்றம் இல்லையென மொழிந்து மாற்று சமயத்தவரின் கொள்கைக்கு நூறு சதவீகிதம் மாறுக்கொண்டாலும் அவர்களது மரணித்த உடல் தம்மை கடக்கும் போது அதற்காக எழ சொல்கிறார்கள்- எழுந்தும் நிற்கிறார்கள். ஒரே ஊரில் அருகருகே வசிப்போருக்கு கூட இரட்டை டம்ளர் முறையிலிருந்து இப்போ இரட்டை சுடுகாடு வரைக்கும் ஏற்படுத்தியாச்சி.. இதுல பிரேதம் வரும் போது எழுந்து நிற்பதென்பது .....
வாழ்ந்த பின் மனிதனை இழக்கிறோம் நாம் - ஆனால் அந்த மாமனிதரோ வாழ்ந்த பின்னும் மனிதத்தை காக்க சொல்கிறார்கள். ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் மட்டும் அமைந்திட்ட நிகழ்வு அல்ல அது.
"உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நில்லுங்கள்"
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)’ நூல்: புகாரி 1308
என திண்ணமாக , இந்த மானுட சமூகத்தின் இறுதி மனிதர் இருக்கும் வரை / இறக்கும் வரை அதை செயல்படுத்த பிரகடனமும் படுத்துக்கிறார்கள்...
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!