"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, January 18, 2013

கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?

                                      ஓரிறையின் நற்பெயரால்


முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும். 

எந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 

 கடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,
1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது
2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது

இதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும். 

ஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.

கடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.

ஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று!

அடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம். 
கடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங்களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை!

இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை! " இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்.. 


சில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்., 
 இவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது
 அவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை
 உலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்
 அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது
போன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட., 

ஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும்? ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை! 

ஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்

சரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா..? அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா? அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா...? அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள்? என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா?

ஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.

அறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்

ஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்., 

அதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...   

                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்

10 comments:

  1. மாஷா அல்லாஹ் .. சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      வருகைக்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  2. Ilatha onuku epdi vilakam koduka mudium? Epdi varaiyarai paduthamudium? Kadavul marupu ariviyal adipadaiyil pakurathu ila. Arivu adipadaiyil pakurathu

    ReplyDelete
    Replies
    1. சரி, அறிவியல் ரீதியாக நீங்கள் கடவுளை மறுக்கவில்லை

      அறிவு ரீதியாக மறுக்க என்ன காரணங்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா அனானி..?

      இருக்கும் ஊருக்கு வழி சொல்லுங்களேன்

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    வருகைக்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  4. VERY NICE ARTICLE THANKS BROTHER

    SALAM,

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    ReplyDelete
  5. இந்த கட்டுரைக்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது ஆர்வமுள்ளவர்கள் காண்க.

    http://nallurmuzhakkam.wordpress.com/2013/01/28/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/

    ReplyDelete
  6. அண்ணன் செங்கொடி தம் இருப்பை இணையத்தில் தக்க வைத்துக்கொள்ள அவ்வபோது அறிவியல் விளிம்பில் நின்றுக்கொண்டு (?) கடவுளுக்கு எதிராக கட்டுரைகள் புனைவது வழக்கம். அந்த அடிப்படையில் மீண்டும் ஒரு அளப்பரிய ஆதாரங்களோடு மேற்கண்ட கட்டுரைக்கு மறுப்பை வெளியிட்டுள்ளார்.

    அவரது மறுப்பை அலசும் முன்...
    ஆயிரம் இடுகைகள் அவரது தளத்தில் இட்டாலும் அதற்கு நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இங்கே தொடரும் விவாதங்கள் நேர்மையற்றவை என நடையே கட்டிய அண்ணன் செங்கொடி, நான் முஸ்லிம் ஆக்கத்திற்கு மறுப்பு எனும் பெயரில் கட்டுரை இட்டதால் பதில் தரும் பொறுப்பு நமக்கு அவசியமாக்கி விட்டார்

    தொடர்வோம்.

    அண்ணன் செங்கொடி அவர்கள் வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக, அறிவியல் ரீதியாக கடவுளை மறுப்பதாக சொல்லி வைத்த ஆதாரங்கள் எல்லாம் தொலை நோக்கு பார்வைக்கொண்ட அனுமானங்களில் அமைந்த ஊகங்கள் மட்டுமே. கடவுளை மறுக்க தெளிவான, ஒரு ஆதார சான்றை கூட இந்த நிமிடம் வரை வைக்க வில்லை.

    நான் முன்னரே தெரிவித்ததுப்போன்று பதியப்படும் இஸ்லாம் / அதன் ஊடான செய்திகளை எதிர் நிலையில் மட்டுமே அணுகி கடவுளை இருப்பை இல்லாதது போன்ற பிரமையை ஏற்படுத்தி வந்தார் -வருகிறார். ஆனால் இனி இஸ்லாம் தொட்டு கேள்விகள் தொடராமல் அறிவியல் ரீதியாக அணுகி எனக்கு கடவுள் மறுப்பை உறுதிப்படுத்துங்கள் என்ற போது... விவாதத்திற்கு வம்படியாக முடிவுரை எழுதப்பட்டது.

    கைர், பிரச்சனையில்லை.. இனி அவரது கட்டுரையை பார்ப்போம்.

    ReplyDelete
  7. தொடக்கம் முதலே விமர்சனத்தை என் பக்கம் திருப்பி.. வழக்கம்போல் கொசுவர்த்தி சுருள் புலம்பல்கள்.. (அவரது தளம் என்பதால் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது)
    கடவுள் என்பவர் அல்லது என்பது, எண்ணிக்கையில் பரந்து விரிந்து இருக்குமானால் உங்களுக்கு முன்னரே நான் கடவுளை மறுக்க தொடங்கி இருப்பேன். அறிவுக்கும் , தர்க்கத்திற்கும் பதில் வைத்திருக்கும் வகையில் எது நமக்கு தெளிவாக தம் இருப்பை உணர்ந்த வல்லதோ அதையை கடவுளாக கொள்ள வேண்டும். அதுவும் அது ஒன்றாக இருக்க வேண்டும்... இந்த தெளிவான பதிலை இஸ்லாம் தவிர வேறு எந்த மார்க்கமும் வைத்திருக்கவில்லையென்பதால்.. ஓரிறை குறித்து இயம்பப்படும் போதெல்லாம் உங்களையும் சேர்த்து இந்த சமூகத்திற்கு இஸ்லாமிய கடவுள் மட்டுமே நினைவில் கொள்ளப்படுகிறார்.

    ஆக ஓரிறையின் கொள்கையே விளக்க தொடக்கம் முதல் இஸ்லாம் மட்டுமே தெளிவான சான்றுகள் வைத்திருப்பதால் உங்களைப்போன்றவர்களுக்கு கடவுளர்கள் என்ற நிலையும், கடவுள் என்ற நிலையும் இரண்டாய் தெரியலாம்.
    இங்கே ஒரே கடவுளா அல்லது பல கடவுளர்களா என்பது நம் மத்தியில் நிலவும் மையக்கருத்து அல்ல. ஆக இங்கே இரண்டில் நான் ஏற்கும் கடவுள் என்ற ஓரிறை குறித்தே நான் விளக்குதல் போதுமானது. கடவுளர்கள் என்ற நிலை தாண்டி கடவுள் என்ற சொல்லாடல்களுக்கு இஸ்லாத்தை மட்டுமே நான் மூலதாரமாக்க முடியும். தெளிவாக உரைக்க அதுவால் மட்டுமே முடியும்.

    இங்கே கடவுளின் அறிமுகம் மனித மூலத்தின் தொடக்கத்தில் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை இஸ்லாம் சொல்லியதை தெளிவாக கூறியிக்கிறேன். ஆனால் பாருங்கள் உங்களின் முன்முடிவுகளால் ஒன்றை அணுகும் போது தெளிவான முடிவை காண முடியாது என்பதை தான் உங்களின் சுய நல புரிதல்கள் பதிலாக வருகிறது. கடவுளை ஏற்பதாக இருந்தால் அது குறித்த மூலத்தை உள்வாங்கினால் மட்டுமே அதனை ஏற்க முடியும் எனும்போது, மீண்டும் மீண்டும் உங்கள் பிடிவாத புரிதலை கடவுள் ஏற்புக்கு எதிராக களமிறக்கினால்... உங்களின் வாத முறைமையின் அறிவை என்னவென்பது?

    இன்று ஓரிறையை ஏற்பதற்கு நம்மிடம் உள்ள இரு சான்றுகள் இறை வேதங்கள் என அறியப்பட்டதும், ஆரம்பம் முதல் இந்த உலகம் வலம் வந்த இறைத்தூதர்கள் வாழ்வுமே. இந்த இரண்டிலும் காலம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக இவற்றை உண்மைப்படுத்த வேண்டுமானால் நாம் ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்டதையும், அந்தந்த இறைத்தூதர் வாழ்ந்த காலத்திற்கும் சென்றிருக்க வேண்டும். இது நடவாத காரியம். சம காலத்தில் இருந்தால் மட்டுமே ஒன்றை மறுக்கவோ, விமர்சிக்கவோ நம்மால் தெளிவாக முடியும். ஆனால் இன்று இறுதியாக நமக்கு சமீபமாக இருக்கும் திருக்குர்-ஆன், நபிகளாரின் வாழ்வு மட்டுமே ஓரிறைய ஏற்க ஒப்பு நோக்கும் ஒரே வழிமுறை.

    இவை இரண்டின் நிலைப்பாட்டையும் பொய்யாக்கினால் மட்டுமே கடவுள் இருப்பை பூஜ்யமாக்குவதோடு கடந்த கால கட்ட நிகழ்வுகள் அனைத்தும் ஒரு கற்பனை எண்ணங்களின் விளைவு என்பதை உண்மைப்படுத்த முடியும்.

    ReplyDelete
  8. இதற்கு தான் நான் அப்போதே கேட்டேன். ஆதிமனிதன் கடவுளை வணங்கவில்லையென்பதற்கு வரலாற்று ரீதியான ஆதார சான்றுகள் எங்கே என்று..?

    ம்ஹூம்.. குகை ஓவியங்கள் என்ற ஒற்றை குறிப்பை மட்டும் தான். காலத்திற்கும் -கடவுளுக்கும் இடைவெளி விட பார்க்கிறீர்கள். இங்கே நான் கேட்டது தொல்லியல், ஆதார, ஆவண, படிமங்கள் குறித்த சான்றுகளை..


    அடுத்து வர்த்தக ரீதியாக பிளவுப்பட்டிருக்கும் சமூகத்தின் நிலை பார்த்து தான் கடவுள் இருப்பை மறுக்க வாய்ப்பை தேடுகிறீர்கள். சகோ செங்கொடி... மேற்சொன்ன புள்ளிகளெல்லாம் எப்படி கடவுளை மறுக்க உதவும்.. வழக்கம்போல் குர்-ஆனை படிக்க தவறிய அனேகர் எழுப்பும் கேள்விகள் இவையும்...
    //மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.// இது தான் உங்களின் கடவுள் மறுப்புக்கு சமூகரீதியான அழுத்தமான காரணங்கள் என்றால் மனித அறவாழ்வு அகல காரணம் கடவுள் தொடர்போடு மனிதன் ஏற்படுத்திக்கொண்ட இடைவெளி தான் தவிர, கடவுளின் இருப்பை இந்த புள்ளியில் எப்படி இல்லாமல் ஆக்க முடியும்..?

    அடுத்து, அறிவியல்..

    உஷ்.... செங்கொடி அறிவியல் குறித்து நீங்களே ஒரு தெளிவான பொதுவான கருத்துக்கொள்ள வில்லை.
    அறிவியலில் உரசப்படாத எதும் அறிவில் கொள்வதற்கில்லையென்றால்... என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்

    அறிவியல் முழுமைப்பெற்ற தொகுப்பா..? அல்லது
    தொடரும் பயணமா?

    இதற்கு தெளிவான பதில் தரப்படாதவரை கடவுளின் மறுப்பை அல்ல, எதிர்ப்பை கூட உங்களால் தெளிவாக தொடர முடியாது.
    எனக்கும் அதிகம் விவாதிக்க விருப்பமில்லை அதுவும் நேர்மையற்ற குற்றச்சாட்டை பதிந்த பின்னரும்.,
    கடவுளை மறுக்கும் புள்ளிகள் உங்களிடம் தெளிவாக ஆதார குறியீடுகளாக இல்லாத காரணத்தால் தான், எவ்வளவு உதாரணங்கள், எவ்வளவு ஊகங்கள்..
    நான் கேட்பது ஒன்றே சகோ கடவுளின் தலையீடுக்கு எதிராக அறிவியல் குறித்து நான் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதில்களென அவை கண்டறியப்பட்ட விதத்தை மட்டுமே பதில் தரப்படுகிறதே தவிர, அதற்கு முந்தைய நிலை குறித்த கேள்விகளுக்கெல்லாம். இன்னும் பதில் தெளிவாக கண்டறியப்படவில்லை.

    மீண்டும் சொல்கிறேன் அனைத்திற்கும் பதில் தம் விரல் நுனியில் நாத்திகம் வைத்திருந்தால் மட்டுமே கடவுளின் மறுப்பை அறிவியல் நிருபித்து விட்டது என எல்லோரும் ஏற்றுக்கொள்ளலாம்

    அதுவரை... இன்னும் ஓராயிரம் ஆக்கங்கள் கடவுளுக்கு எதிராக உங்கள் தளத்தில் இட்டு மகிழ்ந்துக்கொள்ளுங்கள்.

    உங்கள் சகோதரன்.
    குலாம்

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்