"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, July 27, 2010

குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!

ஓரிறையின் நற்பெயரால்..
பொதுவாக வேறு எந்த ஒரு வேத நூலுக்கும் இல்லா சிறப்பு குர்-ஆனுக்கு மட்டும் வழங்கப்பட்டது யாதெனில் அந்நூலின் "பிரத்தியேக பாதுகாப்பு".இங்கு குர்-ஆனின் பாதுகாப்பை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டு சொல்லும்போது, இக்கூற்றை எதிர்க்க விரும்புவோர்.,ஆரம்பமாக வைக்கும் வாதம் தாம்
1.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
2.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது போல் அதற்கு முந்தைய வேதங்களை ஏன் இறைவன் பாதுக்காக்கவில்லை?அஃது இறைவனால் ஏன் பாதுக்காக்க முடியவில்லை?
இந்த இரண்டும் இரு வேறு கேள்விகளாக இருந்தாலும் இரண்டும் ஒரே பதிலைதான் அடிப்படையாக கொண்டிருக்கிறது எப்படி?.. காண்போம்.,
குர்-ஆனின் பாதுக்காப்பு:
Qur'anic_Manuscript
அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும்.,
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(15:9)
இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்., ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)
மேற்கூறப்பட்ட வசனத்தில் "கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம். நம்மில் பலருக்கு பள்ளிக்காலங்களில் படித்த பாடங்களில் சில வரிகள் இன்றளவும் நம் மனதில் ஞாபகம் இருக்க காண்கிறோம். குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயிலும் பள்ளிப்பாடங்களே இன்றும் மனதின் ஓரத்தில் ஒட்டிருக்கும்பொழுது தினம் ஐவேளை தொழுகையில் குர்-ஆனிய வசனங்கள் அதுவும் பார்க்காமல் திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டும் எனும்போது அத்தகைய இறை வசனங்கள் மனதிலேயே பதிய செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்!ஏனெனில் தொழுகையானது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வு.உளத்தூய்மைக்காக இது பின்பற்றப்பட்டாலும் இயற்கையாகவே மனித மனங்கள் மனனம் செய்வதற்கு இறைவன் உருவாக்கிய மிக சிறப்பான,அழகான ஏற்பாடாகும்.
இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி அனைவருக்கும் எழலாம் (சிலருக்கு ஏற்படாமல் இருக்கலாம்-அவர்களுக்கும் சேர்த்தே இங்கு விளக்கம் -ஏனெனில் தன்னிலை விளக்கமளிப்பதே குர்-ஆனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு)
சஹாபாக்கள் முதல் அவர்களை தொடர்ந்து இன்றுமுள்ளவர்கள் வரை குர்-ஆன் மனதளவில் மனனம் செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டது சரிதான்.ஆனால் குர்-ஆன் அக்கால மக்கள் அனைவருக்கும் கேட்றியும் பொருட்டு பொதுவாக அருளப்படவில்லை.நபிகளாருக்கு அவர்கள் மட்டும் தனியாகவே அறிந்துக் கொள்ளும் பொருட்டும் பிரத்தியேகமாக அருளப்பட்டது.எனவே வான்வழி வந்த இறைச்செய்தியை வாய்வழி அறிவிக்கும் பொழுது நபிகளார் மிக சரியாக கருத்து சிதைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லிருப்பார்களா., ஏனெனில் அவர்கள் எழத,படிக்க தெரியாதவராயிற்றே என அவர்களது ஞாபக சக்தியின் மேல் யாரும் சந்தேகம் கொள்ளவாராயின் அக்கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக இறைவன் குர்-ஆனை மக்களிடத்தில் சேர்ப்பிக்க நபிகளார் மேற்கொள்ளும் செயல்களுக்கும் தாமே பொறுப்பு என்கிறான்.
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள் (75:16)
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19) சுப்ஹானல்லாஹ்! எத்தகையதொரு தெளிவானதொரு விளக்கம்.

எனவே குர்-ஆனின் பாதுகாப்பு எழுத்துவடிவில் இருப்பதாக சொல்வதைவிட ஒலி வடிவில் மனதில் இருப்பதாக கொள்வது நல்லது.இதன் காரணமாக குர்-ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படவில்லையென யாரும் (வேண்டுமென்ற) பொருள் கொண்டு அதன் எழுத்து வடிவிலான நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினார்களால் அஃது ஏற்பட்ட மாற்றம் குறித்து வரலாற்று சான்றுகள் தர வேண்டும்.ஏனெனில் உஸ்மான் (ரலி)அவர்களால் தொகுக்கப்பட்ட குர்-ஆன் அதன் மூல மொழியி(அரபி)லேயே துருக்கியிலும்,ரஸ்யாவிலும் மக்களின் பார்வை மத்தியில் இன்றளவும் இருக்கிறது.
குர்-ஆன் பற்றிய எதிர்மறை கருத்துக்களுக்கு சரியான விளக்கம் குறித்த அனைத்துவிதமான ஆய்வுகளும் அந்தந்த கால கட்டங்களிலேயே அறிஞர்ப் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்டு மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனை கீழ்காணும் சுட்டிகள் வாயிலாக காணலாம்


அருளப்பட்ட வரலாறு
http://www.tamililquran.com/revelation.asp?file=history.html
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/arulappatta-varalaru/

குர்-ஆன் குறித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கான விளக்கங்களுக்கு
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html
http://abumuhai.blogspot.com/2008/09/7.html
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_14.html

இரண்டாவது கேள்விக்குறித்த குற்றச்சாட்டை க்காண்போம்.
ஏனைய கிரந்தங்களை இறைவன் ஏன் பாதுகாக்கவில்லை என்ற கூற்றுக்கு குர்-ஆனை மட்டும் பாதுக்காத்த காரணம் அறிந்தாலே போதுமானது. நூஹ்,ஸாத்,லூத் போன்ற ஏனைய சமுகங்கள் குர்-ஆன் முன்மொழிந்திருப்பினும் முஹம்மது நபிக்கு முன்பாக வந்த இரு சமுகங்கள் மற்றும் அவற்றிற்கு கொணர்ந்த வேதங்கள் குறித்த பார்வை இங்கே.நபி மூஸா(மோசஸ்) அவர்களுக்கும் நபி ஈஸா(ஜீஸஸ்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தவ்ராவும்,இஞ்ஜிலும் அந்தந்த சமுக மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன அதாவது அப்போதைக்கு இருந்த (வாழ்ந்த) யூத,கிறித்துவ சமுகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வணக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைக்கு தேவையான சட்டங்கள் (விதிமுறைகள்-விதி விலக்குகள், அனுமதிக்கப்பட்டவைகள், விலக்கப்பட்டைவைகள் போன்றவை) குறித்து தெளிவுறுத்தப்பட்டது.எனவே ஒரு குறிப்பிட்ட சமுகம் சார்ந்த மக்களுக்காகவே அருளப்பட்ட வேதங்கள் எனும்போது எல்லா மனிதர்களுக்கும் அஃது அது பொதுவான விதிகள் குறித்த மூலங்கள் வரையறுக்கப்பட்ட வேதமாக அணுகமுடியாது.ஏனெனில் அவ்வேதங்கள் அனைத்து மக்களின் அதாவது,யுக முடிவு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும்படியான கருத்துக்கள் வகுக்கப்படவில்லை.அந்த காலகட்டத்தில் உள்ள மக்களின் செயல்பாடுகளுக்கு தகுந்தாற்போல் இறைவேதங்கள் அருளப்பட்டன.(எனினும் அவைகள் குறைப்பாடுடைய வேதங்கள் அல்ல., அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படி) எனவே எல்லோருக்கும் பொதுவானதாக கருத்துக்களை அடங்கிய வேதமாக அல்லாஹ் முஹம்மது நபிகளின் மூலமாக இவ்வுலகத்திற்கு வழங்கினான்.அரபு மொழி பேசும் சமுக மத்தியில் இவ்வேதம் வழங்கப்பட்டாலும்,உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிப்பொருட்டு மேற்கொள்ளப்படும் ஏவல்களும்-விலக்கல்களும், முழுமைப்பெற்ற வாழ்வியல் சட்டத்திட்டங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு நம் முன் இறுதி வேதமாக காட்சி தருகிறது

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (06:90)
மேலும் பார்க்க:(2:2,17:9,82,18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44, 50:45, 80:11)

கீழ்காணும் வசனங்களும் முன்னர் வருகை புரிந்த இறைத்தூதர்களையும், அவர்கள் கொணர்ந்த வேதங்களையும் உண்மைப்படுத்துவதாக கூறுகிறது
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.(41:43)
மேலும் பார்க்க ( 2:91,4:47, 5:48, 6:92,29:47, 43:45)
மேலும் எதுக்குறித்து தூதுவர்கள் இறைப்புறத்திலிருந்து அனுப்பப் பட்டார்களோ அந்த தூதுத்துவப்பணியின் நோக்கமும் முஹம்மது நபிகளாரோடு முடியுற்றது -அதாவது மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டிய- சேர்க்க வேண்டிய அனைத்து செயல்பாடுகளையும் இறுதித்தூதின் மூலமாக இறைவன் முழுமைப்படுத்திவிட்டான்.
...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (05:03 சுருக்கம்)
அல்லாஹ்வே இஸ்லாத்தை முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாக தேர்ந்தெடுத்தால் உலக இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்!

மனிதன் என்ற முறையில் இவ்வாக்கத்தில் எங்கேனும் தவறிருப்பின் அதற்குநானே பொறுப்பு
ஆதாரத்துடன் சொன்னால் -திருத்தலாம்

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

2 comments:

  1. Allahmdullah wonderful message brother .mymoonsait

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய செய்தி தான் இது. சகோதரி ஏதேனும் இவ்வாக்கத்தில் தவறு இருப்பின் சுட்டி காட்டவும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்