"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, March 13, 2012

தீவிரவாதமும், முஸ்லிம்களும்!

                                                  ஓரிறையின் நற்பெயரால்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

- என்று கூறுகின்றன.

மேற்கத்திய ஊடகங்களால் மக்கள் மத்தியில் 
திரும்ப திரும்ப பரப்படுகின்ற ஒரு விஷமப்பிரச்சாரம் இது. 
உலகில் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை மாத்திரம் ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மன்பான்மைக்கு என்ன காரணம்..?
தீவிரவாதம் முஸ்லிம்களுக்கு குலச்சொத்தா என்ன ...?  

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!

பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...

1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். 
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?

1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். 

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

  • 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.
  • 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.
  • 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
  • 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A  அமைப்பு

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு 

உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு

                      

இது மட்டுமா நம் இந்தியாவில் கூட 

பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

திரிபுராவில் A T T F  மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.


# ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது. .

      மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

 சிவசேனா...  சொல்லவே தேவையில்லை.,


பால் தாக்கரேயின் முழக்கம் (?) பற்றி ஏஷியா டைம்ஸ் இப்படி அறிவித்தது:
"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.
சங்பரிவார்கள் அமைப்பு இன்னும் ஒரு படி மேல போயி ஒரு Hindu Unity எனும் தளம் உருவாக்கி கொல்லப்பட வேண்டியவர்கள் குறித்த ஒரு block list ஐ தயாரித்து வைத்து இருக்கிறது.,

நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 
2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்)

எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.


இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக

60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்
இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்
தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...  
யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, 
I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, 
மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, 
உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, 
பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, 
L T T E  ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, 
ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ, 
A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..? 

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. 

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


Our sincere thanks to :
Dr.ZAHIR NAIK &
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)

REFERENCE :
  
                   

90 comments:

  1. தமிழில் தீவிரவாதி என்பது ஒரு விடயத்தில் தீவிரமாக இருப்பவனை குறிக்கும். நீங்கள் கட்டுரையில் பயங்கரவாதி என குறிப்பிடுவதே சரி... அடுத்து நீங்கள்
    இறுதியாக LTTE அமைப்பை மிக பெரிய தீவரவாத அமைபென கூறினீர்கள்.. அது சரி ஆனால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல.. தமது உரிமைக்காக நாட்டுக்காக ... உயிர் துறந்த மாமனிதர்கள் அவர்களுக்கு நீங்கள் ஆங்கில பதமான terroristஐ பயன்படுத்தினால் வன்மையாக கண்டிக்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அனானி,

      உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

      உங்களின் ஆதங்கத்தின் பொருள் புரியவில்லை. தீவிரவாதம், பயங்கரவாதம் என்று எல்லாவற்றிற்கும் ஆங்கிலத்தில் ஒரே வார்த்தைதான், terrorism. புலிகளின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விக்கிபீடியா பட்டியல் இட்டுள்ளது. பார்க்க.. http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

      பாருங்கள், புலிகளை ஏன் பயங்கரவாத இயக்கம் என்று கூறக்கூடாது என்பதற்கு உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் சொல்லுங்கள்.

      நன்றி...

      Delete
    2. அன்பு சகோ அனானி...
      தீவிரவாதி என்பது ஒரு விடயத்தில் தீவிரமாக இருப்பவனை குறிக்கும்.
      சரிதான்... அந்த விசயம் எது என்பதை பொருத்தே அவன் மீதான குறியீடு நியாயப்படுத்தப்படும். இன்று பொதுவாக தீவிரவாதி என்ற பதம் நீங்கள் சொன்ன நிலையில் வைத்து பார்க்கப்படுவதில்லை. மாறாக பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவோரை நோக்கியே சுட்ட பயன்படுத்தப்படுகிறது.

      சரி விசயத்திற்கு வருவோம்.
      என்ன L T T E பயங்கரவாத அமைப்பு இல்லையா... ?
      இந்தியா, மலேசியா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சுமார் 31 நாடுகளுக்கும் மேலாகல் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

      ஏன் அவர்கள் அங்கேல்லாம் செயல்பட தடை விதிக்கப்பட்டார்கள் காரணம் என்ன அனானி சொல்வீர்களா...?

      கீழே சகோ ஆஷிக் கொடுத்த சுட்டியும், வாஞ்சூர் அப்பாவின் பட்டியலும் உங்களுக்கு உதவலாம் என நினைக்கிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.,

      Delete
  2. ஸலாம் சகோ.குலாம்,

    உங்களின் இவ்வளவு பெரிய பயங்கரவாத இயக்கங்கள் பற்றின உலகளாவிய அலசலில்...

    நம் நாட்டில்,
    நம்மைச்சுற்றி,
    நம் கண் முன்னே நடந்த...
    அப்பாவி மக்கள் மீதான (இரண்டை தவிர) மீதி அத்தனை குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களையும் இந்திய ராணுவத்தினர் உதவியோடு நிகழ்த்திவிட்டு, ஆதாரங்கள் சாட்சிகள் என்று அப்பட்டமாக அவர்கள் கைது செய்யபட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுத்து, தண்டனைக்காக காத்துக்கொண்டு இருக்கும் இந்த நிலையிலும்... இன்னும் "ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம்" என்று இந்திய மீடியாவால் அழைக்கப்படும் தடை செய்யப்பட வேண்டிய "RSS - சங் பரிவார பயங்கரவாதிகளை" இப்பதிவில் எங்குமே குறிப்பிடாது இப்படி அம்போவென அனாதையாக விட்டுவிட்டீர்களே சகோ.குலாம்..!


    ஒருவார்த்தை கூட அவர்க்ளைப்பற்றியோ அவர்களின் பயங்கரவாதங்கள் பற்றியோ காணோமே சகோ.குலாம்..!

    ஆர்.எஸ்.எஸ். பற்றி இது இந்த பதிவில் இல்லாதது... ஏதோ தலையே இல்லாத உடம்பு போல உள்ளது சகோ.குலாம்..!

    ஐயம் வெரி வெரி ஸாரி டு சே திஸ் ப்ரோ..!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      அன்பு சகோ சிட்டிசன்.,

      இந்த ஆர்டிகலுக்காக சுமார் நான்கு மணி நேரம் எடுக்கப்பட்ட ரெப்ரன்ஸ் ரொம்ப அதிகம். ஆனால் ஆக்கத்தின் நீளம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் இரு பகுதிகளாக பிரித்திடலாம் என நினைத்தேன்.

      இரண்டாம் பகுதியில் 9/11 சம்பவம், சபர்மதி ரயில் எரிப்பு தொடர்பாக குஜராத் இனப்படுகொலை போன்றவற்றை உள்ளடக்கி பதிவிட நினைத்தேன். அதில் தான் தெளிவா சங்பரிவார்கள் கூட்டங்கள் குறித்து போதுமான அளவு விளக்க வாய்ப்பிருக்கும்.

      எனினும் அதற்கு வாய்ப்பு கிடைக்குமோ என்பது நிச்சயமில்லை. மேலும் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை யாரும் மேற்கோள் காட்டவும் வாய்ப்பிருக்கிறது. ஆக இதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்றவைகளை குறிப்பிட்டு இருக்கிறேன்.வாஞ்சூர் அப்பாவும் அதிக தகவல் தந்திருக்கிறார்கள்

      இன்ஷா அல்லாஹ் இன்னும் நேரமிருப்பின் அதைக்குறித்து மேலதிக தகவல் தர விளைகிறேன்.

      // ஏதோ தலையே இல்லாத உடம்பு போல உள்ளது சகோ.குலாம்..! //
      இப்போது தலைக்கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

      வருகைக்கும் 'காட்டமான' கருத்திற்கும் நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
    2. ///இப்போது தலைக்கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்///

      ---மிகத்தெளிவாக எழுதி பெரிய தலை யாக சேர்த்துவிட்டீர்கள் சகோ.குலாம்..!

      //'காட்டமான'//

      ---இந்த அதிபயங்கர பாடுபாவி இயக்கங்கள் பற்றி ஏதும் இல்லையே இப்படியான ஒரு சிறந்த பதிவில்... என்ற எனது ஆதங்கம், கோபம்... இதெல்லாம் அவசரப்பட்டு இப்படி காட்டமாக சொல்ல வைத்து விட்டது சகோ.குலாம்.

      தவறு எனில் என்னை தயவு செய்து எனது மறுமை நலனுக்காக மன்னியுங்கள் சகோ.குலாம்..!

      தற்போது இது முழுமையான மிகவும் சிறப்பான ஒரு பதிவு..! தங்களுக்கும், அதிக தகவல் தந்திருக்கிற சகோ.வாஞ்சூர் அவர்களுக்கும் மிக்க நன்றி..!

      ஜசாக்கல்லாஹு க்ஹைர்..!

      Delete
    3. //தவறு எனில் என்னை தயவு செய்து எனது மறுமை நலனுக்காக மன்னியுங்கள் சகோ.குலாம்..!//

      மன்னிக்க ???
      நீங்கள் சொன்னது தவறே இல்லை சகோ.

      இதுக்கும் தீவிரவாதம் மூலாம் பூசப்போறாங்க சகோ...
      ஹி ஹி ...

      Delete
  3. ஜஸாகல்லாஹ் கைரன்

    by

    Kabeer

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  4. //மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்//

    அட, என்ன நீங்க? அவர் ‘மனந்திருந்திய மைந்தன்’ ஆகியிருப்பாராயிருக்கும்!! அதைப் போய் குற்றம் சொல்றீங்களே? :-))))))

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      சகோ ஹூஸைனம்மா..

      //அட, என்ன நீங்க? அவர் ‘மனந்திருந்திய மைந்தன்’ ஆகியிருப்பாராயிருக்கும்!! அதைப் போய் குற்றம் சொல்றீங்களே? :-))))))//

      இப்படி சத்தமா சொல்லாதீங்க பல பேருக்கு நோபல் பரிசுக்கொடுக்க வேண்டி வரும்..

      வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  5. சலாம் சகோ குலாம்!

    அருமையான ஆக்கம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      // புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.//
      பல பின்னூட்டங்களை பார்த்தால் இன்னும் புரிந்தது போல் தெரியவில்லையே சகோ
      அதான் வருத்தம்!

      Delete
  6. Side effect of islamic fundamentalism is terrorism. You like it or not, thats how world looks at you. You cant change it unless you condemn the terrorists from your heart. You have to prove yourself that you are against terrorism.

    You have'nt done that (condemning terrorism). hence, common man is forced to look at all Muslims with suspicion.

    Yes, you can raise all cries. That is not going to help. When you cant live in harmony with majority Hindus, you have to face this. Surprising posters I see when I enter a Muslim area. That shows how much you hate me. So give me a reason why I should not hate you?

    When you cannot write even a blog post without basing on Islam, you alienate yourself from the rest of the world. You chose how you want to be treated, and now you are lamenting.

    Are you still going to label me as a RSS theeviravaathi or paarpanan or paarpana adivarudi? (the most common escapism route you have). I hate paarpanan more than you do. Muslim's mentality is akin to paarpaneeyam. Periyar has told to use the stick against paarpanan first and the snake next. You come in the same category, for playing a one-up-man-ship.

    (Sure you will publish this?)

    ReplyDelete
    Replies
    1. Brother Common man,

      May peace and blessings of Almighty be upon you.

      //Side effect of islamic fundamentalism is terrorism//

      No. that can't be true. becos, those who know the fundamentals of Islam will not behave in this way. Just to give u an example, prophet (pbuh) refused to pray for those who committed suicide. So if somebody understands this basic tenet of Islam, will not commit suicide for whatsoever reason. but what happens with these is exact opposite of what Islam teaches. Hence the side effect of fundamentalism can't be terrorism.

      //You have to prove yourself that you are against terrorism. You have'nt done that (condemning terrorism). hence, common man is forced to look at all Muslims with suspicion.//

      Come on brother. I could not understand what this mean. we condemn terrorism in whatever form it is in. This post too reflects that. And take our previous posts, we strongly condemn terrorism. There are good number of organisations and clerics issue fatwas against terrorism. Just google it, u will find.

      //Yes, you can raise all cries. That is not going to help.//

      No. It does helps. We are able to tackle this effectively. All praise to Almighty. Nowadays this image slowly but surely vanishing. Insha Allah posts like this will vanish the wrong assumptions entirely in future.

      //That shows how much you hate me//

      Please brother. Speak with proofs. What kind of posters have u seen? what is the message in that? where have u seen? just send me the details (aashiq.ahamed.14@gmail.com). If what they have done is opposite to Islam we will insha allah take actions against them and teach true Islam to them.

      //When you cannot write even a blog post without basing on Islam, you alienate yourself from the rest of the world.//

      Thats a wrong mirror that we have set for urself. Islam is everything for us. Without it we are nothing. Hence Islam reflects on our day-to-day activities. If u didn't like this, we are not going to bother. After all, satisfying u or this world is not important to us.

      //Are you still going to label me as a RSS theeviravaathi or paarpanan or paarpana adivarudi?//

      NO. I won't. Everybody has their thoughts. I just saw ur comments and try to answer them. thats it.

      Thanks..

      Your brother,
      Aashiq Ahamed A

      Delete
    2. அன்பு சகோ காமன் மேன்
      உங்கள் பின்னூட்டத்தை பார்த்தால் பெயரில் மட்டுமே 'காமன்' இருப்பதாக தெரிகிறது

      சகோ அஷிக்கின் பதில் போதுமென நினைக்கிறேன்.
      உங்கள் வார்த்தைகளை தமிழ் படுத்தினால் இன்னும் தெளிவாக உரையாடலாம் இன்ஷா அல்லாஹ்

      Delete
  7. ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும்

    பேசுவதைத் தடைசெய்பவனும்

    தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும்

    இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது

    2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு

    அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .

    சொடுக்கி >>>>>>>
    புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1
    <<<<<<< படியுங்கள்



    சொடுக்கி >>>>>
    புலி பயங்கரவாதம்..புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
    <<<<<<, படியுங்கள்



    சொடுக்கி >>>>>>
    புலி பயங்கரவாதம்..புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
    <<<<<<<< படியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
      அன்பின் அப்பா.,

      அழகிய
      ஆழமான மேற்கோள்களுக்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  8. Assalamu alikum bro!
    Naam ennathan katu katthu kattinalum oru silar kathu erunthum shevidargalaga erukinranar :(
    ungalathu pani thodaratum jazhkallahu kair!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்
      உண்மை தான் சகோ இன்ஷா அல்லாஹ் அந்த நிலை மாற

      பிரார்த்திப்போம் -முயற்சிப்போம்.

      கருத்திற்கு நன்றி சகோ

      Delete
  9. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்.

    இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.

    அதன் உச்சகட்டம் தான் பிரிவினையின் போது வடக்கு, வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள்.

    இந்தப் படுகொலைகளில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் ஈடுபட்டிருந்தார்கள். இந்த வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது.

    ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.

    முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படுகொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

    அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

    எனவே விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

    ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார்.

    ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான்.

    அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன. (கோட்சே காந்திஜியை சுடும்பொழுது கையில் "இஸ்மாயில்" என ஒரு முஸ்லீம் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டு ஒரு மூஸ்லீம் போல் "சுன்னத" தும் செய்திருந்தான்.)

    அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம்,

    இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.

    மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம் ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும், அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும், தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.

    SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1909:2010-01-08-15-10-30&catid=969:09&Itemid=223


    சொடுக்கி >>>>> இந்து பயங்கரவாதம். விடியோ காணுங்கள். > <<<<< கேளுங்க‌ள்

    சொடுக்கி >>>>>
    இந்தியாவின் உண்மையான பயங்கரவாதிகள் ஒரு பார்வை.
    <<<<<< கேளுங்க‌ள்

    சொடுக்கி >>>>> பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி . குமுதம் "ரிப்போர்ட்டர்" - <<<<< படியுங்கள்


    சொடுக்கி >>>>>ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை .அம்பலமாகும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே" <<<<< படியுங்கள்


    சொடுக்கி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானாந்தாவின் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்தின் நிரூபணங்கள் .
    ஆதாரம்!!
    <<<<< படியுங்கள்


    சொடுக்கி >>>>> இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர் ? <<<<< படியுங்கள்.

    .

    ReplyDelete
  10. சுப்பிரமணியன் சாமியின் சுப்ரபாதம்!

    இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்துப் பாரம்பரியத்துக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இசுலாமியர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துச் சமூகத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத இசுலாமியர்க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது.

    இந்தியாவில் எழும் தீவிரவாதத்திற்கு ஒரே மருந்து, ஒரு இந்து வீரதீர இந்துவாக மாறுவதே, இந்த மன நிலையை ஒவ்வொரு இந்துவிடமும் உருவாக்க வேண்டும்.

    அ. காசிவிசுவநாதர் கோவிலில் இருக்கும் மசூதியை அப்புறப்படுத்து; இந்து நகரங்களில் இப்படியாக உள்ள 300 மசூதிகளை அகற்று.

    ஆ. அரசியல் சாசனத்தின் பிரிவு 370அய் அகற்றுக. காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு பனுன் காஷ்மீரை உருவாக்கு.

    இ. சிவில் பொதுச் சட்டத்தை நடை முறைப்படுத்துக; சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வகை செய்க;

    வந்தேமாதரம் பாடலைக் கட்டாயமாக்குக.

    இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என அறிவிக்க, இந்த ராஜ்ஜியத்தில் இந்துக்கள் பெருமைமிக்க முன்னோடிகள் என அறிவித்துக் கொள்வர்.

    ஈ. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுதலை தடை செய்க:

    இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுதலைத் தடுக்கக் கூடாது.

    உ. இந்து மனோபாவத்தை வளர்க்க முயலல்.


    சனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் தன் தேவ வாக்காகக் கொட்டியுள்ள இக்கருத்துகளை யாரோ ஒரு தனி மனிதனின் உளறல் என்று ஏற்றுக் கொள்ளலாமா?

    விஷம் கக்கும் இப்பாசிச சொற்கள் வெறும் உளறலா? இதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?

    சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத்துகளுக்கு நம்மூர் கட்சிகள் எதுவும் வெளிப்படையாக எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.

    நம் பத்திரிகைகள் நம் வர்ண தர்மத்தைக் காக்கும் வகையில் மவுனிக்கின்றன.

    மிகப் பெரிய அளவில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சிகள் ஏன் வாயைத் திறக்கவில்லை எனத் தெரியவில்லை.

    இந்தத் தேசிய மவுனம் விளைவிக்கும் ஆபத்தை ஏன் எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை?

    ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணியம் சுவாமி உதிர்த்த எந்த விஷயமும் புதியனவல்ல; இந்துத்துவா என்ற கோட்பாட்டை உருவாக்கிய வீரச வார்க்கரின் அனைத்து வார்த்தைகளின் மறுமதிப்பே இவை.

    தொடர்ந்து கோல்வாக்கரின் Bunch of Thought என்ற நூலின் சாரமே சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அலசல்கள். கோல்வாக்கரின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன என்ற ஆவணமும் இங்கே சுப்ரமணியன் சுவாமிக்குப் பயன்பட்டிருக்கிறது.

    இந்நாட்டில் வாழும் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும். இந்துத் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்; இல்லையெனில், இவர்கள் இந்தியாவில் வாழலாம்; எப்படி? எந்தச் சலுகையும் பெறாமல், ஏன் குடியுரிமைகூட இல்லாமல் வாழலாம். கோல்வாக்கரின் இந்துராஷ்டிராவின் ஒரு பகுதி இது.

    மக்கள் முன் கையேந்தி வாக்கு கேட்கும் ஒரு கட்சியின் தலைவர், இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்ததே எப்படி?

    அத்வானிகளும், சுஷ்மாக்களும், இக்கருத்தை நம்புபவர்கள் எனினும், உளமார ஏற்றுக் கொண்டவர்களே எனினும் வெளிப்படையாக சுப்பிரமணியன்சுவாமி கூறுமளவிற்கு இவருக்கு தைரியம் அளித்தது யார்?

    பல்சமய நாட்டின் பன்முகத்தன்மை மறுத்து மத அடிப்படையிலான பெரும்பான்மையை உருவாக்கி ஓராட்சி உருவாக வேண்டும் என்பதை எந்தவித தயக்கமுமின்றி சுப்ரமணியன் பேசுகிறார்.

    மதவாத அடிப்படையில் உருவாகும் அரசு பன்மையை மறுப்பது; ஒரு சிலரை ஒதுக்குவது; சமயச் சார்பின்மையும் சன நாயகமும் கேலிப் பொருளாவது; இவ்வாறான பாரதூர விவாதங்களை உருவாக்கும் இக்கருத்தை சமூகத்துள் புகவிடலாமா?

    சட்டத்தின் ஆட்சி இதனை ஏற்கலாமா? கருத்துச் சுதந்திரம் பொது ஒழுங்கிற்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இவ்வகையான விமர்சனங்களை அரசு தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?

    அய்தராபாத் மசூதி குண்டு வெடிப்பிலும், மராட்டியத்தின் மாலேகனிலும், நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டன என்பதும்,
    காஷ்மீர் தீவிரவாதமும், இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிப்பதே என்று நாளும் இந்து மதத் தீவிரவாத அமைப்புகள் அம்பலப்பட்டு வருகையில்,
    இந்துக்களை ஒருங்கிணைக்க ஏற்கெனவே இந்து தீவிரவாதிகள் சொன்ன கருத்துகளை தன் கருத்தாக பேசி வரும் சுப்ரமணியன் சாமிகளை என்ன செய்வது? - தேவா (ஆதாரம்: சுப்ரமணியன் சாமியின் கட்டுரை
    How to Wipe out Islamic Terror: Daily News and Analysis, Mumbai Edition) நாள்: 16.7.2011)

    நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி

    ReplyDelete
  11. முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி


    பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில்,

    இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல.

    தாமரையின் சக்தி. (தாமரை பாரதீய ஜனதா கட்சி B.J.P. யின் சின்னம்)




    இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட.

    ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

    அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான்.

    அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி.

    அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

    CLICK முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி TO SEE VIDEO.


    .

    ReplyDelete
  12. மற்றவர்கள் எல்லாம் செய்றாங்க...அதை எல்லாம் பெருசா எடுத்துக்க மாட்றீங்க...இஸ்லாமியர்கள் செய்தால் மட்டும் ஊதி பெருசு படுத்துறீங்கன்னு சொல்ல வர்றீங்க..முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துட்டீங்களா இல்லை வசதிக்காக சொல்லாம விட்டீங்களான்னு தெரியல.

    வேற்று சமயத்துக்காரன் இப்படிப்பட்ட கொடூரங்கள் செய்வதற்கு நிலத்தகராறோ, பணம் சம்பந்தப்பட்ட விஷயமோ அல்லது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ தான் இருந்திருக்கு. ஆனால், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், தங்களின் கடவுள் கட்டளைப்படித் தான் செய்வதாக தீர்க்கமாக சொல்றாங்க. அதுவும் ஒருத்தர் விடாமல் அப்படியே சொல்றாங்க. அது தான் இஸ்லாமிய சமூகத்தின் மீது அப்படி ஒரு தீவிரவாத முத்திரை விழ முக்கிய காரணம். இதைப் பற்றி கேட்டால், அவர்கள் சமயத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறது ஒரு தரப்பு. அதற்கு மாற்றாக, அரபியான ஒசாமா இஸ்லாமை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வது ஏற்கத் தக்கதா ? என்று தெரியவில்லை. அப்படியெனில், இஸ்லாமை சரியாக புரிந்து கொள்ள நீங்கள் தானே முயற்சிக்க வேண்டும். இது தான் இந்தக் கட்டுரையோட மையக் கருத்தாக இருந்திருக்க வேண்டும்.

    நீங்கள் சொல்லி இருக்கிற அனைத்து படுகொலைகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் உள்ள வேறுபாடு விளங்குகிறதா ?

    ReplyDelete
    Replies
    1. பிரிட்டீஷ் ஏகாதியபத்திய கொடுங்கோலன் ரெஜினால்ட் டையரினால் ஏப்ரல் 13, 1919 -ல் நிகழ்த்திய "ஜாலியன் வாலாபாக் படுகொலை", பாவம் உங்களுக்கு சாதாரண நிழத்தகராறு.

      அந்த ஜெனரல் டயரின் வாக்குமூலம் "நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை"

      "அச்சு நாடுகள், நேச நாடுகள்" என்று, நாடுகள் பிரிந்து உலகத்தையே ரணகலப்படுத்தியது, பாவம் உங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி.

      ஹிட்லரின் படுகொலைகள், மோடியின் படுகொலைகள், இராஜபக்ஷேவின் படுகொலைகள், etc... இவைகளைனைத்தும்

      இனத்தைக் குறிவைக்காத தாகுதல்கள்??!!!.

      :(((

      //இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், தங்களின் கடவுள் கட்டளைப்படித் தான் செய்வதாக தீர்க்கமாக சொல்றாங்க//

      யார் எதுவேண்டுமென்றாலும் கூறலாம், அவையெல்லாம் அவர்களின் செயல்களுக்கு ஆதரமாகிவிடுமா என்ன?. முகங்களை வெளிக்காட்டமல் துப்பாக்கிகளைப் பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் கோழைகளிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும். பாலஸ்தீனத்தில் நடக்கும் (உங்கள் பாஷையில் கூறுவதாக இருந்தால்) நிழத்தகராரை கொச்சைப்படுத்துவதற்க்காக மேற்கத்திய பயங்கரவாத சக்திகளால் உருவாக்கப்படும் பிம்பங்கள்தான் இந்த தீவிரவாதிகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

      //அதற்கு மாற்றாக, அரபியான ஒசாமா இஸ்லாமை சரியாக புரிந்து கொள்ளவில்லை //

      இந்த ஒசாமவை தீனி போட்டு வளர்த்தது யார்?. ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவிற்கு எதிராக கொம்பு சீவியவர்கள் யார்?

      குவைத்தைக் காப்பாதற்க்காக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து வந்து ஈராக்கைச் சின்னா பின்னப் படுத்தி பல தீவிரவாதிகளை உருவாக்கியது யார்?.
      இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம், ஆனால் அனைத்துமே விழலுக்கு இரைத்த நீர்தான்.

      Delete
    2. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க..ஒசாமா இஸ்லாமை சரியாக புரிந்து வைத்திருந்தாரா இல்லையா ? உலகில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் இஸ்லாமை சரியாக புரிந்து கொள்ளாத இயக்கங்களா ?

      Delete
    3. ஓஹோ! நீங்க பதிவை முழுவதுமாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன், பதிவின் முதல் பாராவிலேயே சகோதரர் குலாம் பின்வருமாறு கூறியே பதிவைத் துவங்குகிறார்..

      //இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.//

      ஒசாமாவோ அல்லது தீவிரவாத இயக்கங்களோ ஒன்றும் தேவதூதனும் இல்லை அல்லது தேவதூத சபைகளும் இல்லை.

      Delete
    4. அன்பு சகோ கபிலன்

      //ஒசாமா இஸ்லாமை சரியாக புரிந்து வைத்திருந்தாரா இல்லையா ? உலகில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் இஸ்லாமை சரியாக புரிந்து கொள்ளாத இயக்கங்களா ?//

      தெளிவான முரண்பாடு, இதுதான் ஆக்கத்தின் தொடக்கத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாமை நூறு சதவீகிதம் தவறாக புரிந்து கொண்டதன் விளைவே முஸ்லிம்கள் பெயரில் தீவிரவாத செயல்கள் நடைபெற காரணம்

      இங்கேயும் பாருங்கள் மேற்கோள் காட்டிய பத்திகள் குறித்து ஏதும் கருத்துக்கூறாமல் ஒசாமாவை தீவிரவாதியாக காட்டி அதை இஸ்லாமிய பயங்கரவாதமாக முடிச்சிட பார்க்கிறீர்கள்.

      சொல்லுங்கள் இப்போது நீங்கள் எதை சார்ந்து பேசுகிறீர்கள். எவர் எப்படியும் இருக்கலாம்... ஆனால் முஸ்லிம்கள் பெயரில் இருந்தால் அதை பெரிதுப்படுத்தி காட்டவேண்டும் அப்படி தானே...

      ஓசாமா என் நண்பனோ பகைவனோ அல்ல. அவரைக்குறித்து எனக்கு தெளிவாய் தெரிய... அதற்காக மேற்கத்திய ஊடகங்களான BBC யும் CNN னும் கொடுக்கும் செய்திகளை வைத்து நான் அவரை குற்றவாளியென்றோ நிரபராதியென்றோ முடிவெடுக்க முடியாது.

      இன்று வரையிலும் அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பு சம்பவத்திற்கு நிருபனமாக ஆவணச்சான்று ஒன்றும் இல்லை. ஒருவாதத்திற்கு ஓசாமா செய்ததாக கூறப்படும் 9/11 தாக்குதல் உண்மையென்ற வைத்துக்கொண்டாலும்.

      அதற்காக பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை அப்கானிலும், ஈராக்கிலும் இன்றுவரையிலும் பாலஸ்தீனத்திலும் தொடர்ந்து கொன்று வருகிறதே அமெரிக்கா இதற்கு என்ன சொல்வீர்கள்...?

      எவ்வளவு கற்பழிப்புகள்
      எவ்வளவு சிறுகுழந்தைகள் மரணம்

      அந்த நிகழ்வை ஒப்பிடும்போது 9/11 பெரிய சம்பவமே அல்ல... எனினும் அதை நான் நியாயப்படுத்த வில்லை. ஆவணங்களும் சாட்சியங்களும் உண்மையென்றால் பயங்கரவாத செயல்களுக்கு தண்டனை கொடுங்கள்.. அஃதில்லாமல் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதங்களின் அடையாளமாக்காதீர்கள் என்பதே எம் நோக்கம்.

      ஏனைய கேள்விகளுக்கு சகோ Syed IbramshaMar பதில்களே போதுமென நினைக்கிறேன்.

      மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
    5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
      அன்பு சகோ Syed Ibramsha
      தேவையான் இடத்தில் தெளிவான பதில்கள்...

      அவசரமான நேரத்தில் அவசியம் உணர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

      Delete
    6. @Syed IbramshaMar
      "ஒசாமாவோ அல்லது தீவிரவாத இயக்கங்களோ ஒன்றும் தேவதூதனும் இல்லை அல்லது தேவதூத சபைகளும் இல்லை."


      அழுத்தம் திருத்தமான தெளிவான பதில். நன்று !

      Delete
    7. "இங்கேயும் பாருங்கள் மேற்கோள் காட்டிய பத்திகள் குறித்து ஏதும் கருத்துக்கூறாமல் ஒசாமாவை தீவிரவாதியாக காட்டி அதை இஸ்லாமிய பயங்கரவாதமாக முடிச்சிட பார்க்கிறீர்கள். "

      தவறாக புரிந்து கொள்கிறீர்கள். எங்கள் சமூகத்தினர் செய்யும் தவறுகளை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என்ற கேள்வி உங்கள் பதிவில் தெளிவாகத் தெரிகிறது. அந்தத் தவறுகள் எந்தக் காரணத்தால் பெரிதாகிறது என்பதை உணர்த்தவே விவாதத்திற்காக எடுத்தது.

      "ஓசாமா என் நண்பனோ பகைவனோ அல்ல. அவரைக்குறித்து எனக்கு தெளிவாய் தெரிய... அதற்காக மேற்கத்திய ஊடகங்களான BBC யும் CNN னும் கொடுக்கும் செய்திகளை வைத்து நான் அவரை குற்றவாளியென்றோ நிரபராதியென்றோ முடிவெடுக்க முடியாது."

      பெரும்பாலும் நடுநிலைமையாக பேசிட்டு, கடைசியில ஜாகிர் நாயக் மாதிரி காமெடி பேச ஆரம்பிச்சிட்டீங்க.....
      சரி..பிபிசி, சி.என்.என் போல 100 மீடியாக்கள் கூறியவையை நம்ப மறுக்கும் நீங்கள், மோடி பற்றி டெஹல்கா கூறுவதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் ? ரொம்ப முரண்பாடா இருக்குங்களே குலாம் !

      "அந்த நிகழ்வை ஒப்பிடும்போது 9/11 பெரிய சம்பவமே அல்ல... எனினும் அதை நான் நியாயப்படுத்த வில்லை."

      மனதில் தோன்றியவையை சொல்லி இருக்கீங்க. தவறான முறையில் சொல்லி இருக்கீங்க. இது போன்ற கருத்துக்கள், தங்களை அந்நியப்படுத்திக் காட்டும்.

      கருத்துக்களுடனான மோதலே தவிர, சமயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு நான் விவாதிக்கவில்லை.
      அப்படி தோன்றியிருந்தால், மன்னிக்கவும்.
      கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ குலாம் !

      Delete
    8. ////சரி..பிபிசி, சி.என்.என் போல 100 மீடியாக்கள் கூறியவையை நம்ப மறுக்கும் நீங்கள், மோடி பற்றி டெஹல்கா கூறுவதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் ? ரொம்ப முரண்பாடா இருக்குங்களே குலாம் !////


      முரண்பாட்டின் மொத்த வெளிப்பாடே இதுதானே சகோ.கபிலன்..!!!

      இரட்டைகோபுர இடிப்பே ஓர் உள்நாட்டு யூத - அமெரிக்க சதி என்று அப்பட்டமாக வீடியோவுடன் loose change என்று பாகம் பாகமாக வெளியாகிவிட்டதே..!

      எவரேனும் அதை மறுக்க முடிந்ததா..?

      இப்படித்தானே,
      'இராக்கில் WMD ஆயுதங்கள் உள்ளன' என்று கூட்டமாக நேட்டோக்காரர்கள் போருக்கு போனார்கள். லட்சம் லட்சமாக civilians- i கொன்றார்கள். கடைசியில் ஒத்துக்கொண்டார்களே..? WMD ஆயுதமும் இல்லை... ஒன்னும் இல்லை. சும்மா ஒரு காரணம் அது... என்று..! அதை ஹாலிவுட் படமாக வேறு காட்டி விட்டார்கள். green zone என்று.

      ஒசாமா பின் லேடனை இரட்டைகோபுர தகர்ப்போடு இணைக்க ஒரு 'ஆதாரம்' நின்றதா..? நான் ஒசாமாவுக்கு ஆதரவு கொடுப்பவன் இல்லை. ஒசாமாவை நல்லவன் என்பவனும் இல்லை. ஆனால், ஒசாமாவுக்கும் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று மட்டும் தெளிவாக புரிகிறதே..! அது எப்படி..?

      எங்கே..? உங்களுக்கு ஒரு சவால்..! இதேபோல தெஹல்காவின் வீடியோ ஆதாரத்தை மறுத்து அது பொய் என்று எவரேனும் நிரூபிக்க முனைந்த ஒரே ஒரு ஆதாரத்தை யாவது எடுத்து வீசுங்களேன் இங்கே..! பார்ப்போம்..! அவை... அப்பட்டமான வீடியோ ஆதாரங்கள். செய்த பயங்கரவாத குற்றத்தை பெருமையாக வேர் சொல்கின்றனர் படு பாதக சண்டாள பாவி காவி பயங்கரவாதிகள். அவர்களின் தலைவன் முதலமைச்சர். முரண்பாட்டின் மொத்த உருவமே..!

      சகோ.கபிலனே...! ஹிந்துத்துவா-மோடி-இவற்றுக்கும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று ஆதாரமே இல்லாமல் கூட உங்களால் நேசி நிமிர்த்தி சொல்ல முடியுமா உங்களால்..? ஏகப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்..? பதில் சொல்லுங்களேன்..!

      ஆர் எஸ் எஸ் - சங் பரிவார பயங்கரவாதங்களுக்கும் ஹிந்துதுவாவுக்கும் தொடர்பே இல்லையா..? அவர்கள் கொலைக்கு பயன்படுத்தும் ஆயுதமே... சாமிகளின் கைகளில் உள்ள ஆயுதங்களதானே... வீச்சரிவாள், . வெட்டுக்கத்தி, சூலாயுதம், வேலாயுதம்.. முதலில், ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இனிமேல் சாமி கைகளில் உள்ள ஆயுதங்களை தொட அனுமதிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்..! அதற்கு என்னோடு சேர்ந்து குரல் கொடுப்பீர்களா சகோ.கபிலன்..? இதற்கு கொஞ்ச நஞ்ச நேர்மையாவது உண்டா..?

      இனிமேல் ஒப்புமை என்று ..... படுத்தினால்... ஆதாரத்துக்கும் ஆதாரத்துக்கும் ஒப்புமை படுத்துங்க.... !

      Delete
    9. அன்பு சகோ கபிலன்.,

      சிட்டிசனின் பதில் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்..
      இருந்தாலும்..

      //"ஓசாமா என் நண்பனோ பகைவனோ அல்ல. அவரைக்குறித்து எனக்கு தெளிவாய் தெரிய... அதற்காக மேற்கத்திய ஊடகங்களான BBC யும் CNN னும் கொடுக்கும் செய்திகளை வைத்து நான் அவரை குற்றவாளியென்றோ நிரபராதியென்றோ முடிவெடுக்க//

      இப்போதும் இது தான் என் நிலைப்பாடு. இதில் எந்த முரண்பாடும் இல்லை சகோ
      இது என் நிலைப்பாடு என கூறக்காரணம் இன்று வரையிலும் 9/11 தாக்குதலை நிருபிக்கும் ஆவணங்கள் என எதுவும் சமர்பிக்கப்பட வில்லை மாறாக அது உள்ளரங்க சதி என்றே அறியப்படுகிறது.இன்று வரையிலும் பெரும்பாலும் ஊகங்கள் அடிப்படையில் மட்டுமே குற்றமாக்கப்படுகிறது.

      முஸ்லிமோ முஸ்லிமல்லாதவரோ எவர் பயங்கரவாதம் செய்தாலும் அது தண்டிக்கத்தக்கதே.. இதைத்தான் ஆக்கத்தின் முதல் பத்தியில் சொல்லவும் பட்டிருக்கிறது. ஆனால் இன்று எங்கு குண்டு வெடித்தாலும் மூன்றே வினாடிகளில் முஸ்லிம்கள் தான் முன்னிருத்தபடுகிறார்கள். அது தான் தவறேன்கிறேன். வரலாற்றில் இப்படியான வெளியான பொய் செய்திகள் ஏராளம்.

      ஆனால் மேற்குறிப்பிட்ட ஆதாரப்பூர்வமான செய்திகள் குறித்து நம்மில் எத்தனைப் பேர்கள் அறிந்துவைத்திருக்கிறோம். இன்னும் பாருங்கள் எந்த ஒரு முஸ்லிமல்லாத பின்னூட்டம் மேற்சொன்ன செய்திகள் பொய் என்றோ அல்லது அவைகள் கண்டனத்திற்குரியது என சொல்லவே இல்லை.

      மாறாக முஸ்லிம்களும் தான் பயங்கரவாதங்களை நிகழ்த்துகிறார்கள் என்றே பெரும்பாலான பின்னூட்டங்கள் ...

      இதெல்லாம் எதைக் காட்டுகிற்து...? என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்.

      வருகைக்கு நன்றி.,
      மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற

      Delete
    10. //அழுத்தம் திருத்தமான தெளிவான பதில். நன்று !//

      மிக்க நன்றி சகோ. கபிலன், இதுதான் இஸ்லாம் உலகிற்கு கூறும் கருத்து.

      இங்கு இன்னொரு விஷயத்தைத் தெளிவாக்கிக் கொள்வதும் நல்லது, ஏனெனில் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் மிக முக்கிய குற்றச்சாட்டான..

      "இஸ்லாம் காபிர்களைக் கொல்லச்சொல்லுதே" என்பது

      இந்த வாதம் மட்டும் எத்தனைமுறை விளக்கினாலும் திரும்பத் திரும்ப, இஸ்லாமிய சமூகத்தைச் சுட்டி வைக்கப்படும், ஏனெனில் வகுப்புவாத/மேற்கத்திய மீடீயாக்கள் பிழைப்பு நடத்துவதற்கு இதைவிட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை, இதன் பாதிப்பு இப்பொழுது எங்கும் ஒலிக்கிறது.

      இஸ்லாம் எவ்வாறு "ஜகாத்" என்னும் கட்டாய வரியை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு விதிக்கிறதோ அதேபோல் "ஜிஸ்யா வரி" என்ற ஒன்றையே இஸ்லாத்தை ஏற்காதோருக்கு, இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வாழும் பொழுது நிர்ணயிக்கிறது, அதுவல்லாது மரணத்தை அல்ல.

      முன்பு "வாளால் வளர்ந்தது இஸ்லாம்" என்றார்கள் அது சிறிது சிறிதாக மாறி இன்று வெடிகுண்டு அவ்வளவுதான், பொருட்கள்தான் மாறுகிறதேயொழிய குற்றச்சாட்டு மட்டும் மாறுவது கிடையாது. இதன் விளைவு இன்று எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் மற்றும் எத்தனையோ பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களையும், சகோதர சகோதரிகளையும், உறவினர்களையும், இந்த வகுப்புவாத அநியாயச் சக்திகளின் வெடிகுண்டுகளினால் இழந்திருப்பர். அவர்களின் மனக்கண் முன் தோன்றுவது தொப்பியும் தாடியும் வைத்த முஸ்லிமகள் அல்லவா?,
      முஸ்லிம் அல்லாத யார் நடத்தினாலும் பழி முஸ்லிம்கள் மீது இது எந்தவகையில் நியாயம்?.
      இவற்றுக்குக் காரணம் மீடியாக்களின் விஷமப் பிரச்சாரம்.
      எவனோ எங்கோ ஒளிந்து கொண்டு செய்யும் ஈனச் செயல்களுக்கு ஒன்றுமே செய்யாத, ஏன்? அதுபோன்ற ஈனச் செயல்களைக்
      கண்டிக்கின்ற முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பழிகடா ஆக்குவது எதனால்?.

      நீங்களே கூறுங்கள் சகோ. இது தவறான அணுகுமுறையா இல்லையா?.


      மேலும் மக்காவில் இருந்து கிட்டத்தட்ட 500 கிமி தொலைவில் உள்ள மதீனா என்ற (இங்குதான் இறைவனின் தூதர் மக்காவில் வாழ வழியின்றி தஞ்சமடைந்த) இடத்திற்கு இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாகவும், முகமதை தங்களின் தூதராகவும் ஏற்றுக் கொண்டவர்களை இல்லாதொழிக்க 1000க்கும் அதிகமான பேர் கொண்ட படையை திரட்டிக் கொண்டுக் கொண்டு வருகிறார்கள். இப்பொழுது என்ன செய்ய முடியும் அவர்களின் படைகளுக்கு பலியாவதா? அல்லது எதிர்த்துப் போரிடுவதா?, அன்று போரிட்டு இருக்கவில்லையென்றால் இன்று இஸ்லாம் என்ற ஒன்று இருந்திருக்காது, அன்று இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நானூறுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது, அழிக்க வந்தவர்களை எதிர்த்தே இஸ்லாத்தின் முதல் போர் துவங்குகிறது.

      மேலும் வாளால் போர் செய்வது என்பது கடந்த நூற்றாண்டுவரை இருந்த நடமுறை, 1000 பேர் கொண்ட யானைப்படையை வெற்றி கொண்ட அரசனைப் புகழ்ந்து புலவர்களால் பாடப்படும் பாடல் "பரணி", இதுபோல் வெற்றி கொண்ட மன்னன்களைக் குறித்து தமிழ் இலக்கியங்களில் காணக் கிடக்கும் பாடல்களை வைத்தே போர் என்பது இரு நாட்டு மன்னர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வு என்பது நமக்கு எளிதில் விளங்கும்.

      குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என்பதெல்லாம் அறிவியலின் அதீத வளர்ச்சி கொண்டு அழித்தொழிக்கப்பட்டு, உலக நாடுகளின் மத்தியில் வெடிகுண்டு கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது, தன் சக இனத்தை அழிக்கும் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத நாடு என்று ஏதெனும் உண்டா?. தற்க்காப்புக்காக என்ற பெயரிலேனும் நாடுகளில் ஆயுதங்கள் குவிக்கப்படுகின்றன.

      மேலும் போர் செய்யும் முறை முற்றிலும் மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில், இஸ்லாம் இந்த முறையில் போர் செய்யத்தூண்டவும் இல்லை, இதைச் செய்வோரை ஆதரிக்கவும் இல்லை.

      மேலும் இது போல் போர் செய்யக்கூடாது என்றே வலியுறுத்துகிறது. "போரில், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள், வயதானோர்" சிறிதும் பாதிக்கப்படக்கூடாது என்று போருக்குச் செல்லும் முன் கட்டளையிட்டு தன் பணியை இஸ்லாம் நன்றாகவே செய்கிறது.

      வெடிக்கும் வெடிகுண்டுகளுக்கு இது போன்ற வரைமுறை உண்டா?, சிறியோர், பெண்கள், முதியோர் என்று பாகுபாடு பார்க்கும் ஆற்றல் வான் வழியாகவும் தறைவழியாகவும் வீசப்படும் குண்டுகளுக்கு உண்டா?.

      Delete
  13. காவிப் பித்துத் தலைக்கேறிய வருண்காந்தி(?)

    உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் வருண் காந்தி , கடந்த 6.3.2009 இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,

    "இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி.

    இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

    "இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்".

    "ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்"

    என்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார்.

    யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்!

    "இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" என்றால்,

    முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸ்ஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால்,

    2.5% பார்ப்பனர்களைத் தவிர

    "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என

    அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும்.

    பாகிஸ்தான் தாங்குமா?

    பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா?"


    என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    "தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்" என்றும்

    "இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" எனவும்

    இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே?.

    இது சட்ட விரோதம் இல்லையா?.

    இவர் மீது சட்டம் பாயாதா?

    என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.

    ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உண்மையான கருத்திற்கும் நன்றி
      உண்மைகள்!

      Delete
  14. please see this link 1st comment anonymous in my village 1990-aug-12 ltte was attack

    http://lankamuslim.org/2012/03/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/

    ReplyDelete
  15. சலாம் சகோ குலாம்,

    மாஷா அல்லாஹ். புள்ளி விவரங்களுடன் அழகாக உள்ளது. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      //நான் பின்னூட்டவாதி முஹம்மது ஆசிக்கின் கருத்தை வழி மொழிகிறேன். முடிந்தால் அந்த கயவர்கள் பற்றியும் சேர்த்துவிடுங்கள் சகோ.//

      இப்போது விடுப்பட்ட அந்த புள்ளியும் சேர்ந்திருக்குமென நினைக்கிறேன்...

      வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  16. /* ஆர்.எஸ்.எஸ். பற்றி இது இந்த பதிவில் இல்லாதது... ஏதோ தலையே இல்லாத உடம்பு போல உள்ளது சகோ.குலாம்..! */

    நான் பின்னூட்டவாதி முஹம்மது ஆசிக்கின் கருத்தை வழி மொழிகிறேன். முடிந்தால் அந்த கயவர்கள் பற்றியும் சேர்த்துவிடுங்கள் சகோ.

    ReplyDelete
  17. assalamu alaikkum , Dr.Zahir nayak speech is ur article, good.keep it up.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்
      வருகைக்கு நன்றி.,

      Delete
  18. சிசுக்களின் கோரப் படுகொலை. PART ONE.

    ”சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்” என்று சனல் 4 வினால் காட்டப்பட்டு இருக்கின்ற பயங்கரவாதியின் மகன் 12 வயதுச் சிறுவன் விடயத்தில் அக்கறை கொள்ளும் மேற்கு சாதாரண பிஞ்சுகள் கொல்லப்பட்டதை பெரிதாக கருதியது கிடையாது .

    எத்தனை குழந்தைகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

    எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

    புலிப்பயங்கரவாதிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .


    இதில் மிக வேதனைக்குறிய விடையம்

    முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான் .

    கிழக்கே ஆகஸ்ட் 1990 இரண்டு காத்தான்குடி பள்ளிவாசல்களுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்.

    அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யபட்டனர்.

    ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றார்கள்

    எந்த மேற்கு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை

    SOURCE: >>>>> CLICK சிசுக்களின் கோரப் படுகொலை <<<<TO READ

    ReplyDelete
  19. சலாம்....
    நெத்தியடி....சரியான வாதங்கள்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      //நெத்தியடி....சரியான வாதங்கள்...நன்றி //

      இவை சரியாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதே நம் எண்ணம் சகோ

      வருகைக்கு நன்றி சகோ

      Delete
  20. //மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..! //

    அப்படியே முஸ்லிம் தீவிரவாதிகள் மூலம் நடந்த தாக்குதல்கள் பட்டியல் இடுங்கள்.. அப்போது தான் யாரோட தாக்குதல்கள் அதிகம் என்று தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. சரி., முஸ்லிம்களின் (?) தாக்குதல் பட்டியல் தரலாம்.,

      மேலுள்ள பட்டியல் குறித்து என்ன சொல்கிறீர்கள் சகோ அனானி?

      Delete
  21. thanks "vanjoor appa" antha linla iruntha newsa appatie inga pathivettathatku ltte inal muslimkalukku eatpatta ilappai arinthu kolla yarawathu wirumpnal "lankamuslim.org" entra webbai payanpaduthalm

    iven
    eravuran

    ReplyDelete
  22. //Thats a wrong mirror that we have set for urself. Islam is everything for us. Without it we are nothing. Hence Islam reflects on our day-to-day activities. If u didn't like this, we are not going to bother. After all, satisfying u or this world is not important to us. //

    Then you cannot control how the world thinks of you. We are social animals and we need to be bothered about others. What I am trying to say is you sow what you reap. Period.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ அனானி.,

      கொஞ்சம் நாகரிமாக சொன்னால் கருத்தை வெளியிடலாம்...

      Delete
  25. IMA(indian muslim asso.)March 14, 2012 at 5:54 PM

    ungaluku pidikalaina pogavendiyathu thane pakistan, afghanistan, saudi-nu ., India-la ella mathamum sammatham than, oru kudumbathil annan muslim sister hindu paiyanai marriage pannierupan ellam India-la mattum than, manasu niraiva anba vaalum nadu than engal kudumbam (india), thappuna thappu sarina sari. engaluku osama terrorista than therinchan aanal ungaluku muslim endra mathamagathan paarthirkal. avanal ethanai muslim kudumbam paathika pattu erukum, unaku ennapa un kudumbam (muslim) mattum nalla erunthal pothum appadi thani.A

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      எங்களுக்கு என்ன பிடிக்கவில்லை

      இந்தியாவா...?

      இந்த ஆக்கத்தில் எங்கே சொல்லி இருக்கிறேன் இந்தியா பிடிக்கவில்லையென்று.,
      உங்கள் புரிதலில் தவறா..

      நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.,

      உங்கள் கருத்துக்களை இன்னும் எளிதாக சொன்னால்.. பதில் தர இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

      Delete
  26. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  27. தீவிரவாதிகள் என்றாலே முஹமதியர்கள் மட்டுமே. இப்போது மதத்தின் பெயரில் குண்டு வைப்பது முஹமதியர்கள் மட்டுமே. ஒசாமா பின் லேடன், மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து எத்தனை முஹமதியர்கள் பதிவுகள் எழுதினார்கள்? சும்மா ஒப்புக்கு குண்டு வைப்பவன் முஹமதியர் இல்லை என்றுதானே எழுதுகின்றீர்கள்.

    பதிவுலகில் உலவும்.... இது போன்று எழுதும்...அனைத்து முஹமதியரும் தீவிரவாதிகளே. அரேபியாவால் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகள். ஆனால் சவுதி அராபியா அமெரிக்காவிற்கு அடிமை.

    இப்படிக்கு
    ராவணன்

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ ராவணன்...

      //பதிவுலகில் உலவும்.... இது போன்று எழுதும்...அனைத்து முஹமதியரும் தீவிரவாதிகளே.//

      சும்மா காமெடி பண்ணாமே கொஞ்சம் சீரியஸா எழுத ட்ரை பண்ணுங்க

      அப்புறம் // ராவணன் // ....? இந்த பெயர் உண்மையா தெரிஞ்சி தான் வச்சீங்களா...?

      Delete
  28. சலாம். நடு நிலையோடு பார்பவர்களுக்கு தெளிவை வழங்கும் கருத்துகள். அருமை சகோதரா!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      //தெளிவை வழங்கும் கருத்துகள். அருமை சகோதரா! //

      வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சகோ
      ஜஸாக்ல்லாஹ் கைரன்

      Delete
  29. http://indiatoday.intoday.in/story/saffron-brigades-terror-plots-exposed/1/105546.html

    ReplyDelete
  30. தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளை கொல்லும்படி போதிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.
    இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது.

    ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

    ReplyDelete
  31. ஜன-30 மீண்டும் மீண்டும் நினைக்கப்பட வேண்டிய நாள். மகாத்மா காந்தியின் நினைவு நாள் என்று சொல்லப்படுவதை விட, மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் என்பதை நினைத்துப் பார்ப்பதே சரியானது. பழி உணர்ச்சியுடன் அல்ல, மீண்டும் கொடூரங்கள் நடந்து விடாமல் இருக்க. மகாத்மாவை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கொலை செய்வதற்கு காரணமாக இருந்தது. அவர் கடைப்பிடித்த, பிரச்சாரம் செய்த “மதச்சார்பின்மை” கொள்கை ஆகும்.

    மதச்சார்பின்மை என்ற வார்த்தை மதவெறி அமைப்புகளுக்கு எட்டிக்காயை விட கசப்பானதாக இன்றைக்கும் இருக்கிறது. “நம்முடைய கோழைத்தனத்தாலும், பயத்தாலும்தான் நாம் பிறரோடு மோதுகிறோம். நாம் நம்முடைய நிழலைக் கண்டு அஞ்சம் நிலைக்குத் தாழ்ந்து விட்டோமா? நம்முடைய மதத்தில் உண்மையான நம்பிக்கை வைத்திருந்தால் மற்ற மதத் தினர் நம் மதத்தை அழித்து விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை!” என்று காந்தியடிகள் இந்து மதத்தின் சார்பில் கலவரத்தை தூண்டி யவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

    நான் நாதுராம் விநாயக் கோட்ஸே பேசுகிறேன்” என்ற நாடகத்தின் மூலம், காந்தியைக் கொன்றது நியாயமானதே, என்ற பிரச்சாரத்தை 1993, நவ-15 கோட்ஸேயின் நினைவு நாளில், திட்டமிட்டு செய்தனர். குஜராத் மாநில பாடப்புத்தகத்தில் காந்தி இந்து மதத்திற்கு எதிராக இருந்ததால், கோட்ஸே கொன்றார் என எழுதி வைத்துள்ளனர். கோபால் கோட்ஸே 1995ம் ஆண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நாது ராம் கோட்ஸே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவன், ஆர்.எஸ்.எஸ். இயக் கத்தினால் திட்டமிட்டு தான் காந்தி கொலை செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.


    கோட்ஸேக்கும் எங்களுக்கும், சம்பந்தமில்லை என்று பசப்பு வார்த்தைகள் பேசி வந்த ஆர்.எஸ்.எஸ் திடீரென்று 1990க்குப்பின் திட்டமிட்டு காந்தியின் கொலையை நியாயப்படுத்துவது எதனால்? காரணம் காந்தி கொல்லப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அப்போது தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று “ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார இயக்கம்” என்று நீதி மன்றமே சொல்கிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்ற்கும், அதன் அமைப்பு களுக்கும் ஒப்புக்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. காந்தியைக் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கிய இடத்தில், காவிப்பல் காட்டி நீதி வழங்கும் நீதிபதிகளும் வந்து விட்டனர்.

    Thanks to "rootsredindia.blogspot.com"

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்திற்கு நன்றி சகோ

      Delete
  32. Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்
      வருகைக்கும் தேவையான இணைப்பிற்கும் நன்றி சகோ

      Delete
  33. உலகத்திலே 54 முஸ்லிம் நாடுகள் உள்ளனன. அனால் பாலஸ்தீன பிரச்சனைக்கு இன்றுவரை உங்களால் தீர்க்க முடியவில்லை. உலக எண்ணெய் வளம் பாதி உங்களிடமே உள்ளது ஆனால் அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்காவின் காலை நக்கி கொன்றுதான் இருக்கிறது. பாலஸ்தீனத்தை விடுவிக்காவிட்டால் எண்ணெய் தர முடியாது என்று சொல்லவும் துப்பு இல்லை. ஏன் என்றால் சோனவனுக்கு ஒற்றுமை இல்லை. இதில் வேற ஒருவர் இலங்கை முஸ்லிம்கள் எதோ அப்பாவிகள் அவர்களை தமிழர்கள் அழிகிறார்கள் என்று எல்லாம் எழுதிகிறார். பாதிக்கப்பட்டவன் நான் சொல்லுறேன் 83 இல் தமிழர் உடைமைகள் எல்லாம் சிங்களவர் செயதமகிவிடுபோக உள்ளே புகுந்து கொள்ளை அடித்தது பூராகவும் முஸ்லிம்களே அதில் இன்று பலர் கொழும்பில் பெரிய முதலாளிகள் வேறு இதில் ஹகியர் வேடம் வேறு. பல இடங்களில் சிங்களவரோடு முஸ்லிம்களும் செயர்த்தே இந்த கொடுமையை செய்தார்கள். இதை மறுக்க முடியுமா இவரால். கிழக்கு மாகாணத்தில் இருந்த பல தமிழ் கிராமங்கள் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பால் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றது எப்படி என்று கூறுவார. முஸ்லிம் துணை படைகள் தமிழருக்கு செய்தகொடுமைகளை சொல்வாரா. அவர்கள் செய்த களுதருபுகள் காடீகொடுபுகள் எத்தனை. அத்தாவுல்ல, ஹிச்ச்புள்ள போன்ற அரசாங்கத்தோடு செயர்த்து கொண்டு அமைச்சர்கள் செய்த அடாவடித்தனம் எத்தனை முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் தமிழருக்கு செய்த கொடுமைகள் தெரியுமா அவருக்கு. இதைவிட சமாதான பேச்சு வார்த்தையில் தனி அழகு கேட்டு இவர்கள் போட்ட முட்டுக்கட்டை தான் என்ன. எழுதினால் ஏழுதி கொண்டேபோகலாம் இவற்றுக்கு அவரின் பதில் என்ன

    ReplyDelete
  34. assalamu alaikum brother pls give ur mail id i want to send some documentary about srilankan muslim ethnic-cleansing

    eravuran

    ReplyDelete
    Replies
    1. wa alaikum salam warh

      gulamdhasthakir@gmail.com

      Delete
  35. //Anonymous said...

    இதில் வேற ஒருவர் இலங்கை முஸ்லிம்கள் எதோ அப்பாவிகள் அவர்களை தமிழர்கள் அழிகிறார்கள் என்று எல்லாம் எழுதிகிறார் //

    ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

    ReplyDelete
    Replies
    1. அவர் மண்ணிப்பாவது கோரினர் ஆனால் உங்கள் ரவுப் ஹக்கீம் வன்னி சென்று ஒப்பந்த செய்து விட்டு கொழும்பு வந்ததும் தொப்பியை பிரடினரே. பெயர்சுவர்த்தை காலத்தில் ரவுப் ஹக்கீம், பேரியல் அஸ்ருப்ப் என்று ஆளுக்கு ஒருவராக நின்றுகொண்டு செய்த அக்கபோரு என்ன. எதை விட வேடிக்கை அஸ்ருப்ப் மரணத்துக்கு காரணமான சந்திரிகா வோடு பேரியல் அஸ்ருப்ப் குஉட்டனி வைத்து கொண்டு இருந்தது.

      Delete
  36. mohamed ribnas shared a post from Lankamuslim.org

    சிகப்பு ஆகஸ்து
    by lankamuslim
    சிகப்பு ஆகஸ்து கிழக்கில் முஸ்லிம்களுக்கு என்ன நடைபெற்றது என்பதைக்காட்டும் சில உதாரணங்கள் சிகப்பு ஆகஸ்து கிழக்கு முஸ்லிம் இனசுத்திகரிப்பு 2006 ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம் 1990 ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாய்கள் படுகொலை ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை ஆகஸ்ட்- 12 ஏறாவூர் [...]

    Read more of this post
    http://lankamuslim.org/video-album/

    ReplyDelete
  37. assalamu alaikum bro

    my name is mohamed ribnas from srilanka & eastern province i share some information ltte's ethnic-cleansing against srilankan Muslim pls publish it. because some tamilnadu muslim & many tamil peoples are believe ltte is good but they are unknown about ltte fully


    -http://lankamuslim.org/video-album/
    -http://lankamuslim.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/
    -http://lankamuslim.org/kattankudy-muslims/

    ReplyDelete
  38. //@anonmous இதில் வேற ஒருவர் இலங்கை முஸ்லிம்கள் எதோ அப்பாவிகள் அவர்களை தமிழர்கள் அழிகிறார்கள் என்று எல்லாம் எழுதிகிறார்//

    do u watch previous link? what u tell about it?

    //உள்ளே புகுந்து கொள்ளை அடித்தது பூராகவும் முஸ்லிம்களே அதில் இன்று பலர் கொழும்பில் பெரிய முதலாளிகள் வேறு இதில் ஹகியர் வேடம் வேறு. பல இடங்களில் சிங்களவரோடு முஸ்லிம்களும் செயர்த்தே இந்த கொடுமையை செய்தார்கள். இதை மறுக்க முடியுமா இவரால். கிழக்கு மாகாணத்தில் இருந்த பல தமிழ் கிராமங்கள் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பால் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றது எப்படி என்று கூறுவார. முஸ்லிம் துணை படைகள் தமிழருக்கு செய்தகொடுமைகளை சொல்வாரா. அவர்கள் செய்த களுதருபுகள் காடீகொடுபுகள் எத்தனை. அத்தாவுல்ல, ஹிச்ச்புள்ள போன்ற அரசாங்கத்தோடு செயர்த்து கொண்டு அமைச்சர்கள் செய்த அடாவடித்தனம் எத்தனை முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் தமிழருக்கு செய்த கொடுமைகள் தெரியுமா//

    do u have evidence?? can u submit?? don't create bad sympathetic about SL muslim

    eravuran

    ReplyDelete
    Replies
    1. .
      .
      தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழர்களின் அறியாமையைப் பயன்படுத்தி புலிப் பயங்கரவாதிகளை போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சித்தரித்து அப்பாவி தமழக மக்களை நம்பச் செய்துள்ளனர். உண்மை அவ்வாறல்ல.

      CLICK HERE >>>>> தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< . TO READ , TO SEE PHOTOS , VIDEOS.
      .
      .

      Delete
    2. ஆதாரம் நானே விட்டால் 83 கே ஆதாரம் கேட்பே போல் இருகிறதே. நானும் கேட்ட்கிறேன் நீங்கள் சொன்ன வற்றை எல்லாம் புலிகள் தான் செய்தார்கள் என்ன்பதட்கு என்ன அதரம். பேமென்ட் டில் அபின் விற்றுக்கொண்டு இருந்த சோனவன் எல்லாம் எப்படி முதலாளி அனான் என்னபது கொழும்பில் உள்ள ஓவருதனுகும் தெரியும். ஏன் கிழக்கில் உங்கள் ஆட்கள் செய்த கொடுமைகள் உமக்கு தெரியாத அல்லது தெரியாது போல் நடிகிரிர. ஏன் தனி அலகு இப்போது சிங்களவனிடம் கேட்ட்கவேண்டியது தானே. நீங்கள் சிங்களம் என்னும் வெறி நாயோடு கூட்டு வைதுளீர்கள் என்ன்றோ ஒரு நாள் அது உங்களையும் கடிக்காமல் விடாது

      Delete
  39. //@anonmous இதில் வேற ஒருவர் இலங்கை முஸ்லிம்கள் எதோ அப்பாவிகள் அவர்களை தமிழர்கள் அழிகிறார்கள் என்று எல்லாம் எழுதிகிறார்//

    extra 1

    http://www.onlinerys.tk/2011/11/blog-post_24.html

    eravuran

    ReplyDelete
  40. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ LTTE

      உங்களது பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியாது. கீழ்த்தரமான வசைப்பாடலுக்கு இங்கே வேலையே இல்லையே... அனைத்தும் ஆதார ரீதியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். அவை குறித்து கருத்து கூறாமல் என் பிறப்பை குறித்து வசைப்பாடினால்... உங்கள் அறியாமையை கண்டு வருத்தமடைகிறேன்.

      உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தால் உங்களையும் உங்கள் அபிமான இயக்கத்தையும் குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்... இதிலிருந்தே தெரியவில்லையா.. யோசித்துக்கொள்ளுங்கள்

      நான் முஸ்லிம் - மரியாதையாகவே இதுவரை எங்கேயும் என் கருத்தை பதிந்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் இனியும் பதிவேன். அப்படித்தான் எனக்கு பேச கற்றுக்கொடுத்து இருக்கிறது என் மார்க்கம்.

      உங்கள் இயக்கம் என்ன கற்றுக்கொடுத்தது என்பதை மீண்டுமொரு நீங்களே உங்கள் பின்னூட்டத்தை படித்து புரிந்துக் கொள்ளுங்கள்.

      Delete
  41. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    இதுவரை நேர்மறை / எதிர்மறை கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

    உலக அளவில் தீவிரவாதத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்பதை விளக்கவே இப்படி ஒரு ஆய்வுக்கட்டுரை...

    தீவிரவாதம் எந்த ஒரு மதத்திற்கும் / இனத்திற்கும் உரித்தான உடமை அல்ல.. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும் அது முஸ்லிம்கள் பெயரில் இருந்தால் அவை முதற்பக்க செய்திகளாக்கப்பட்டு மீடியாக்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

    கடந்த கால வரலாற்றில் பயங்கரவாத செயல்கள் அனைத்தும் முஸ்லிம்கள் அல்லாதவர்களாலே நிகழ்த்தப்பட்டது என்பதை ஆதாரரீதியாக விளக்கப்பட்டுள்ளது.

    ஒரு நிலைக்குறித்து எதிர்மறையாக விவரிக்கும் போது அதுக்குறித்து விவாதம் எழுவது இயல்பே
    விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். என்பதை தான் நானும் விரும்புகிறேன்.

    ஆக்கம் தொடர்பாக நேர் /எதிர் என எந்த கருத்தாக இருந்தாலும் கண்ணியமான பதியுங்கள்.

    இன்ஷா அல்லாஹ் வெளியிடுகிறேன்

    உங்கள் சகோதரன்.
    குலாம்.

    ReplyDelete
  42. வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  43. //ஆதாரம் நானே விட்டால் 83 கே ஆதாரம் கேட்பே போல் இருகிறதே. நானும் கேட்ட்கிறேன் நீங்கள் சொன்ன வற்றை எல்லாம் புலிகள் தான் செய்தார்கள் என்ன்பதட்கு என்ன அதரம். பேமென்ட் டில் அபின் விற்றுக்கொண்டு இருந்த சோனவன் எல்லாம் எப்படி முதலாளி அனான் என்னபது கொழும்பில் உள்ள ஓவருதனுகும் தெரியும். ஏன் கிழக்கில் உங்கள் ஆட்கள் செய்த கொடுமைகள் உமக்கு தெரியாத அல்லது தெரியாது போல் நடிகிரிர. ஏன் தனி அலகு இப்போது சிங்களவனிடம் கேட்ட்கவேண்டியது தானே. நீங்கள் சிங்களம் என்னும் வெறி நாயோடு கூட்டு வைதுளீர்கள் என்ன்றோ ஒரு நாள் அது உங்களையும் கடிக்காமல் விடாது//

    naangal ondrum 83 sampawaththai marukka willai appoluthu singala kadaiyarkalal umathu inam arasa uthaweyodu akkiramangaluku ullanathu nan thanth linkil athai engau mmarukkka willaye muslimkal aneyaym seithar enkereery ean ippate poi solkereer athatkana aatharathaithane keten umathu inathai sernthawarkal emaku seitha aneyayathitkana aatharathai thanthullen ean enathu inathitku ippate aniyaym seitheakal???? antha pinchu kulanthaikal enna pawam seitharkal??? naangal anaithu samoohathotum otrumaiyaiutan thane wala werumpuherom nan thantha link i ungalal maruka muteuma??? naangal intha naatil warthaha samoohamathan wanthom ippoluthum walhirom yaritamum pichai kekawenteya awasiyamo,matrawanutaiya soththai apakarikera puththiyo emakkillai, enathu inathai serntha oru silar thawaraha nadanthirukalam athatkaha moththa inathaium kutram sumathuwathu sariya???(( sorry enaku tamil type theriya mutinthal tamil fontuku maatri pathiwitawum))

    eravuran

    ReplyDelete
  44. வியாழன், 15 மார்ச் 2012

    குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் இப்பொழுது தான் நடக்கிறதா? இதற்கு முன்பும் நடந்துள்ளதே என்று, அம் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கூறியுள்ளதன் மூலம், இவர் ஆட்சியில் மதக் கலவரங்கள் நடந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.


    என்னதான் சாமர்த்தியம் காட்டினாலும் சிறு மழை பெய்தால்கூட சாயம் வெளுத்துப் போய் விடுமே!

    பெரிய பெரிய அதிகாரிகளே காவல்துறை குஜராத்தில் நடந்தது என்ன என்பதை செதிர் காயாக உடைத்துக் காட்டி விட்டனரே!

    உண்மையைக் கூறியதற்காக காவல்துறை அதிகாரி சஞ்சய்பட் மோடி ஆட்சியிலே சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

    மாநிலக் காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஒரு கான்ஸ்டேபிளிடம் புகார் மனு வாங்கி அம்மாநில அதிகாரியைச் சிறையில் தள்ளும் அளவுக்குக் கீழ்த்தரமான இந்த மோடிக்கு மூடிபோட்டுக் காட்டி மோகனராகம் பாடும் சோ ராமசாமி அய்யர்கள் தமிழ்நாட்டில் உண்டு.

    இன்னொரு தகவல்: கோத்ரா நிகழ்வுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பானுமியான் சி.பி.அய். அதிகாரி ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் தெரிவித்த தகவல் நெற்றிப் பொட்டில் குண்டு பாய்ச்சுவது போன்றதே!

    வெறியாட்டத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட என் பேத்தி ஒரு மாற்றுத் திறனாளி! அவரிடம் நான் என்ன சொல்லக்கூடும்!

    தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் திட்டமிட்டு, கூட்டுக் கும்பலாகத் திட்டமிட்ட வகையில் செயல்பட்ட கும்பல் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த எங்களை, எங்கள் சொந்த நிலங்களிலிருந்து பறித்து வெளியேற்றினார்கள்.

    அப்படிப்பட்டவர்கள் சுதந்திர மனிதர்களாக மகிழ்ச்சியோடு நடமாடிக் கொண்டுள்ளனரே - அவர்களைப் பற்றியா மாற்றுத் திறனாளியான என் பேத்தியிடம் சொல்ல முடியும்? என்ற அந்த வார்த்தைகளில்தான் எத்துணை எத்துணை கொந்தளிப்புகளும் துயரங்களும்! ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனவே!

    இதற்கெல்லாம் சூத்திரதாரியான தாமோதர தாஸ் நரேந்திர மோடி. இந்தியாவுக்கே பிரதமர் ஆக வேண்டுமாம். ஆமாம், இந்தியா சுடு காடாக வேண்டும் என்ற அளப்பரிய ஆசை இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!

    - - மயிலாடன்

    http://www.viduthalai.in/e-paper/29969.html

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ M. GEORGE VINCENT

      காமெடி பண்ணாதீங்க பாஸ்... ஆக்கம் தொடர்பாக சீரியஸா ஏதாவது சொல்ல பாருங்க.,

      Delete
  46. இலங்கையில் தனி நாடு தமிழ்நாடு கேட்டு போராடிய புலிகளும் மிக அதிகமான போர்க் குற்றங்களை முஸ்லிம்களுக்கு எதிராக செய்துள்ளனர். அசல் பயங்கரவாத அமைப்பான அவர்களின் போர்க் குற்றங்களை சனல் 4 உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

    பயங்கரவாத அமைப்பான புலிகள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

    இங்கு கிளிக்செய்து பார்வையிடவும்

    http://www.jaffnamuslim.com/2012/03/blog-post_3678.html

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      பொருத்தமான சுட்டி வழங்கியமைக்கு
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  47. முதலில் சகோ.குலாம் அவர்களின் "தீவிர" முயற்சிக்குப் பாராட்டுக்கள். தீவிரவாதம் என்பது அதைச்செய்பவர்களைவிட,தீவிரவாதம் என்று சொல்பவர்களைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது!நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும்பல சுதந்திரப்போராளிகள் ஆங்கிலேயரைப் பொருத்தவரை தீவிரவாதிகள். இன்னும் சொல்லப்போனால் இந்திய சுதந்திரப்போராட்டவீரர்கள் அனைவருமே, பிரிட்டீஸார் பார்வையில் தீவிரவாதிகள் என்றே கருதப்பட்டனர்.

    //ஆனால், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், தங்களின் கடவுள் கட்டளைப்படித் தான் செய்வதாக தீர்க்கமாக சொல்றாங்க. அதுவும் ஒருத்தர் விடாமல் அப்படியே சொல்றாங்க.//

    சகோ.கபிலன், அப்படி சொன்னது தீவிரவாதிகள்தான் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்? யாரை தீவிரவாதி என்று முன்னிருத்த வேண்டுமோ அவரைப்பற்றி ஊடகங்களும்,அதிகார வர்க்கமும் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள். ஒரு உதாரணத்திற்காகச் சொல்வதென்றால்,அமெரிக்க ரெட்டை கோபுரத்தை தகர்த்தது கபிலன் என்று BBCயும் CNNனும் சொன்னால் அதை நம்புவர்களுக்கு கபிலன் உலக மகா தீவிரவாதி. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது தெரியாதவர்கலா நாம்?

    இஸ்லாம் என்றால் அமைதி (ஸலாம்).தீவிரவாதமும் அமைதியும் எதிரெதிர் துருவங்கள் மட்டுமின்றி ஒன்றுக்கொன்று முரணானது. அதாவது, முஸ்லிமாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது அல்லது தீவிரவாதியாக இருப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. ஆக,முஸ்லிம்/இஸ்லாமிய தீவிரவாதி என்பது பொருத்தமற்ற வாதம் மட்டுமின்றி சாத்தியமில்லாததும் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      //முஸ்லிம்/இஸ்லாமிய தீவிரவாதி என்பது பொருத்தமற்ற வாதம் மட்டுமின்றி சாத்தியமில்லாததும் ஆகும். //

      அருமையான கருத்து.,
      ஜஸாகல்ல்லாஹ் கைரன்


      வருகைக்கு நன்றி சகோ

      Delete
  48. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதரரே சரியாக சொன்னிர்கள்.அமைதியையும், ஒற்றுமையையும் போதிக்கும் மதம் இஸ்லாம் .போர்களத்தில் எதிரிகளுக்கு கூட தண்ணீர் கொடுத்து உதவியவர் நமது இறைத்தூதர் முஹம்மது நபி (சல்லலஹு வலைவா sallam )

    இன்ஷா அல்லா ...இந்த பதிவு மறுமை நாளில் உங்களுக்காக பேசும் . :-)

    ReplyDelete
  49. வ அலைக்கும் சலாம் வரஹ்

    ஜஸாகல்ல்லாஹ் கைரன்


    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்