"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, June 13, 2010

யார் அந்த கல்கி அவதாரம்?

     இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?
ஓர் ஆய்வு பார்வை ., 

எப்போது வருவார் கல்கி அவதார்...

  ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும்கடைசி அவதாரமான கல்கிஇறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லைசமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால்அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடுஅந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
ஆனால்கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுபிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம்வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது,தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும்ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷபன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தைஇதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும்முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்துபலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல்முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.
இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள்குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம்மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்,ஹிந்துக்கள்இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்புஇவ்வுலகில் உதித்துஇறைத்தூதை எத்தி வைத்துவாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்கபண்டிட்தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.
1.வேதங்கள்கல்கி அவதாரம் தான்பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இதுகடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.
2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படிகல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.
3.ஹிந்து புனித நூல்களில்கல்கி அவதாரத்தின் தந்தையைவிஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன்அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடுபகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆகவிஷ்னு பகத் என்பதுஅல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில்அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்குசாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.
4.அதோடுகல்கி அவதாரம்ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆகஇது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.
5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும்மிக உயரியமதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால்முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்குஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆகமக்காவிலேயேஅல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.
7.மேலும்கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர்இவ்வுலகத்தையும்ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிஃராஜ்’ இரவில்புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானதுஇதைத்தானே சொல்கிறது?
8.அதோடுகல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்குபத்ரு போர்க்களத்தில்இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவதுகல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும்அம்பெய்துவதிலும்வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில்பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பதுஅதி முக்கியமானகவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவதுகுதிரைவாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டதுதற்போதுநவீன ஆயுதங்களானதுப்பாக்கிகள்,பீரங்கிகள்ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால்வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில்வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பதுபுனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.
தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)
நன்றி :www.islamiyadawa.com

8 comments:

  1. இந்த link யை க்ளிக் செய்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தயவு செய்து சரியான விடை தாருங்கள்.
    http://www.tamilhindu.net/t1358-topic

    ReplyDelete
  2. please add this below link embed code for this post. hope it will helpful for viewer to see and understand...

    http://www.dailymotion.com/video/xuplxn_yy-y-y-yy-yy-y-yy-y-yyy-yy-yy-yy-y-y_news

    thanks.
    Abu Nadeem

    ReplyDelete
  3. போதுமான விளக்கம் கொடுக்கலாம்..கவலை வேண்டாம்..
    http://www.tamilhindu.net/t1358-topic#5110
    றிஸ்வான் ஆதம்

    ReplyDelete
  4. இன்னொன்று முஹம்மது நபியால் வழங்கப்பட்ட குரானை பின்பற்றும் நீங்கள் அவரின் வருகையை முன்பே சொன்ன இந்து மத வேதங்களை ஏன் பின்பற்ற கூடாது

    கல்கி அவதாரம் குறித்து இன்னும் சில கேள்விகளை தமிழ்ஹிண்டு கேட்டு அதன் மூலம் தெளிவு படுத்தி கொள்ள விழைகிறது விஷ்ணு என்றால் அல்லா என கூறினீர்கள் மகிழ்ச்சி அடி முடி தேடிய புராணத்தில் விஷ்ணுவும் பிரம்மனும் எம்பெருமான் சிவனின் பிரம்மாண்ட ஜோதியில் தோல்வி யுற்று திரும்பியது அனைவரும் அறிந்தது அப்படியெனில் விஷ்ணுவை தனக்குள் கொண்டவர் எம்பெருமான் சிவன் விஷ்ணுவுக்கு அர்த்தம் அல்லா எனில் அல்லா சிவனுக்குள் ஐக்கியமா

    ReplyDelete
  5. http://truefactaboutislam.blogspot.com/

    ReplyDelete
  6. http://truefactaboutislam.blogspot.com/2013/02/you-must-know.html

    ReplyDelete
  7. அன்பு சகோ அனானி.,

    உங்கள் கேள்விகளை அணுகும் முன் சிறிய விளக்கம்.

    இஸ்லாம் சுமார் 1400 வருடத்திற்கு முன்பாக அரேபியாவில் தொடங்கப்பட்ட மார்க்கமாகவோ, நபி முஹம்மதே முதன் முதலில் அல்லாஹ் என்ற பதத்தை அறிமுகம் செய்தவரோ அல்ல... இதை முதலில் நீங்கள் நன்கு அறிந்துக்கொள்ள வேண்டும்.

    மனித சமூகம் மண்ணில் வாழ தொடங்கிய நாளிலிருந்தே ஏக இறைவனின் கட்டளையும், பின்பற்ற தவிர்க்க வேண்டிய ஒழுக்க முறைகளும் தெளிவாக இறைவன் புறத்தில் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

    அதற்காகவே மனித சமூகத்தில் அவர்களுக்கிடையே வாழும் ஒரு மனிதரை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.

    அவர் மூலம் தெளிவான வழிக்காட்டுதலை வழங்க வேதங்களையும் கொடுக்கிறான். அப்படி கொடுக்கப்பட்ட இறுதி வேதம் தான் குர்-ஆன், இறுதித்தூதர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.

    சரி உங்க கேள்விக்கு வருகிறேன்.

    மனித பெருக்கம் ஒரே தாய் தந்தையரிலிருந்து தான் பல்கி பெருகி உருவாயிற்று என குர்-ஆன் சொல்வதிலிருந்து தன் இனத்தை சார்ந்தவர்களாக தான் பிறிதொரு நிலப்பரப்பு மற்றும் வேற்று சமூகத்தின் மக்களையும் நோக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தும் இல்லை.

    ஆனால் முன்னர் வழங்கப்பட்ட வேதங்கள் குறித்து குர்-ஆனே நமக்கு தெளிவுறுத்துவதால் அவற்றின் நம்பக தன்மைக்குறித்து நாம் ஒப்பு நோக்குவதற்கு இன்று நமக்கு இருக்கும் ஒரே அளவுக்கோல் குர்-ஆன் என்ற இறைவனின் இறுதி வேதம் மட்டுமே

    ஆக அந்த குர்-ஆன் கூற்றுக்கள் முன்னர் அருளப்பட்ட வேதங்கள் குறித்து பேசுகையில் அவற்றின் தற்போதைய நிலை மனித கரங்களால் கரைப்படுத்தப்பட்டவை என்றே விளிக்கிறது.

    ஆக முன்னர் வாழ்ந்த சமூகத்திற்கு வேதங்கள் அருளப்பட்ட செய்திகளை ஏற்பதும் , நம்புவதும் தான் முஸ்லிம்களின் கடமையை தவிர இன்றளவில் வேதங்களாக முன்மொழியப்படுபவைகள் அதே வடிவில் இறை வேதங்களாக இருப்பதாக கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆக இந்து, யூத, கிறித்துவ சமூகங்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டிருக்க வாய்ப்பு மிக அதிகம். அதை ஏற்றுக்கொள்கிறோம்

    ஆனால் அவை முழுக்க ஏற்புடையதன்றோ, அல்லது முழுக்க குறைப்பாடுடையதென்றோ திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஏனெனில் இறைவன் மனித கரங்களும் அந்த வேதங்களில் நுழைவிக்க பட்டது என சொல்லும் போது ஒருவேளை சிற்சில வசனங்கள் இறைவன் அருளிய அதே வடிவில் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    ஆக குர்-ஆன் கூற்றுக்கு எது முரண் இல்லாத வகையில் முன்னர் அருளப்பட்ட வேதங்களில் தென்படுகிறதோ அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். அந்த வகையில் இறுதித்தூதர் குறித்து முந்தைய வேதங்களான ரிக் யஜீர் சாம அதர்வண மற்றும் தோரா பைபிள் போன்றவைகளில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட செய்திகளை ஏற்றுக்கொள்கிறோம்.

    சில செய்திகளை ஒப்பு நோக்கி ஏற்றுக்கொள்வதால் அந்த வேதம் அளிக்கும் மூ அனைத்து செய்திகளையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பது பொது விதியாகாது. ஏனெனில் குர்-ஆன் சொன்ன ஒரே காரணத்திற்காகவே முந்தைய வேதங்களை நம்புகிறோம் எனும் போது எப்படி நம்ப வேண்டும் என்பதற்கு ஒரு அளவுகோலையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

    எனவேதான் முஸ்லிம்கள் முன்னர் வேதங்கள் அருளப்பட்டன என்பதை நம்பினாலும் தற்போது உள்ள இந்து, யூத, கிறித்துவ கோட்பாடுகளில் இருக்கும் இறை வேதங்கள் என நடைமுறையில் இருப்பவற்றை ஏற்றுக்கொள்வதில்லை,

    மாற்று கருத்து இருப்பீன் மற்றவை பிற
    உங்கள் சகோதரன்
    குலாம்,

    ReplyDelete
  8. “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி எங்கு கிடைக்கும்

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்