"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, August 09, 2010

கடவுளில்லா உலகம்...?

ஓரிறையின் நற்பெயரால்...

  கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை...?

    இன்று உலகில் கடவுளை ஏற்போர் \ மறுப்போர் உட்பட யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை.கடவுளை காணமுடியாதற்கு காரணம் குறித்துக்காணும்பொழுது இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று சொல்வதாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஒரு சக்தியாக தான் இருக்கமுடியும்.

   அவ்வாறு மிகப்பெரும் சக்தி மிகுந்த ஒன்றை அனைத்து படைப்புகளை விடவும் பலவிதமான பலஹீனங்களை தன்னுள் கொண்ட மனிதன் தனது கண்களால் பார்க்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்?

   பார்த்து தான் கடவுளை நம்புவேன் என்பது சிந்திக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்ளும் சீரிய வாதமா? சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது என எண்ணுவது அறிவுக்கு உகந்ததா..?
பொதுவாகவே

  ஒருவர் இறை மறுப்பாளாராக இருக்க இரண்டு அடிப்படை காரணங்களே உள்ளது ஏனெனில் நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,
  • தனக்கோ தன் குடும்ப,சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணம்.இதுவே நாத்திக உருவாக்கத்திற்கு முதற்காரணம்

  • நமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான், 
    நாத்திகர்களுக்கு கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட வெறுப்புகள்.,
மூன்றாவதாய் ஒரு காரணமொன்று இருக்குமேயானால் அது அவர்களின் "பிடிவாதமே"

   ஆக பாதிப்பு,வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவையே பிரதான காரணங்களாகும். கடவுள் மறுப்புக்கு இதை தாண்டி ஆயிரம் காரணங்கள் அவர்கள் மனதில் அடியாளாய் அணிவகுத்து நின்றாலும் இஸ்லாம் என்ற ஒற்றை சொல் குறித்து அவர்களை தெளிவாக அறிய செய்தால் போதும் கடவுள் இல்லை என்றுசொல்வோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை தவிர கடவுள் இல்லை என்று.,

   இன்று இஸ்லாத்தை நோக்கி வரும் ஏனையோர் அதற்கு சான்றாக உள்ளனர். அல்லாஹ் அத்தகையே நல்ல மக்களாக நம்மையும் ஆக்கட்டுமாக!

   இன்று கடவுளை நிராகரிப்போர் அல்லது மறுப்போர் அவ்வாறு கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான காரணமென "பரிணாமவியல் கோட்பாட்டை" தாங்கிப்பிடித்து ஆதாரமாக காட்டுகின்றனர்.ஆனாலும் அதற்கான பதில்கள் மிக நேர்த்தியான முறையில் நம் சகோதர இணையங்களில் அறிவுப்பூர்வமாக தரப்படுகின்றன,

  மக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லாமல் படைப்புவாத கொள்கைக்கு மாற்றமாக நாம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இங்கு பரிணாமவியல் கோட்பாட்டை கையிலேடுத்திருக்கிறார்கள்.

     ஏனெனில்,இதுவரை ஏற்பட்ட உயிரின வளர்ச்சிக்கு உண்டான காரணங்களை (அறிவியல் ரீதியாக (?) பதில் என்று) சொல்கிறார்களே தவிர ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து தெளிவான பதில் அவர்களிடம் இன்னமும் இல்லை.

     மேலும் பரிணமாவியல் விஞ்ஞான அடிப்படையில் முழுக்க முழுக்க நிருப்பிக்கப்பட்ட நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் கோட்பாடல்ல என்பதை அக்கொள்கையே ஆதாரிப்பவர்கள் கூட வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்!

    அடுத்து,அவர்கள் கடவுள் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நிருபிக்கிறோம் என குழம்பி ஸாரி,,, கிளம்பி இரு முக்கிய பதிவுகளை முன் வைக்கின்றனர்

1.கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் குழப்பங்கள்,கொலைகள் பயங்கரவாதங்கள் ஏற்படுகிறது

2.கடவுள் தன் படைப்பில் மக்களிடையே ஏன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்

ஒன்று கடவுளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றொன்று கடவுள் மக்களுக்கு ஏற்படுத்திய பிரச்சனை- அதுக்குறித்து இனி காண்போம்


   கடவுள் பெயரால் மனிதர்களிடையே இனக்கலவரங்கள், சண்டைகள், கலகங்கள், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவது உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் காரணம் கடவுளா...? அல்லது தன் போக்கில் இச்சைகளை பின்பற்றும் மனித மனங்களா?

    மனிதன் தனது ஆசை,கோபம்,விரக்தி,பாதிப்பு,அதிகப்படியான தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழும் காலசூழலில் தனது எண்ணத்தை ஈடேற்றம் செய்ய நன்மை மற்றும் தீமையான காரியங்களை மேற்கொள்கிறான்.

   அவ்வாறு பேராசை காரணமாக தீமையான காரியங்கள் மேற்கொள்ளப்படும் போது மடமைக்கொண்ட மக்களின் மூலம் மதத்தின் பெயரால் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.தன் மார்க்கம் குறித்து போதிய அறிவற்ற அறிவிலிகளும் அவனுக்கு தூணை போகின்றனர். ஏனெனில் ஒருவன் மதப்பெயரால் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு காரணம் தான் சார்ந்த சமுக இன மக்களால் தனக்கு பாதுக்காப்பு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமே தவிர மாறாக கடவுளோ.கடவுள் கோட்பாடுகளோ சொன்னதாக ஆதாரத்தை முன்னிறுத்தியல்ல.

    மேலும் சொல்லப்போனால் இஸ்லாம் இத்தகையே மனிதக்குல தாக்குதலை கண்டிப்பதோடு தனியானதொரு மனிதனுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் சட்டத்திட்டங்கள் குறித்துக்கூறும் பொழுது.,

இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:178&179)

மேலும் பார்க்க:17:33, 6:140, 4:92, 2:111&217

      மேற்கூறிய திருவசனங்கள் தேவையில்லாமல் ஒருவனை கொலை செய்யக்கூடாது என்று சொல்வதோடு நின்றுவிடாமல்,அவ்வாறு ஒருவனை கொன்றால் அஃது அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறது. இதை விட தனி மனித பாதுக்காப்புக்கு ஓர் உயர் வரையறை அளவுகோலை யாராலும் நிர்ணையிக்க முடியுமா?
   ஆக,மனிதன் தனது சுயநலத்தின் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற அடிப்படையே எந்த ஒரு கொலைக்கும்,கொள்ளைக்கும்,ஏனைய கலவரங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணமே தவிர கடவுளோ.அவரது கோட்பாடுகளோ அல்ல, தன் மார்க்கம் கூறும் ஒரு செயல்பாடு குறித்த காரணத்தை சரிவர புரிந்துக்கொள்ளாததும் மதத்துவேசத்துக்கு ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    இதையும் தாண்டி தனி மனித உயிர் இழப்புக்கும் ஏனைய சமுக நல பாதிப்புக்களுக்கும் மதம் தான் காரணம் என உச்சாணி கொம்பில் ஒய்யரமாய் அமர்ந்து உச்சஸ்தாயில் உரக்க கத்துவோர் கீழ்காணும் கேள்விக்களுக்கு காரணம் சொல்லட்டும்...
<> ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாய் வாழும் அண்ணன் தம்பிக்குள் வயல்வெளி,வாய்க்கால்,வரப்பு தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்து கொள்கிறார்களே அதற்கு எந்த மதம் காரணம்...?

<>பூர்விக சொத்தை அடைவதில் தகப்பன்,மகனுக்கு இடையில் ஏற்படும் போட்டி பொறாமைகளில் ஏற்படும் உயிர் இழப்பிற்கு யாரின் மதம் காரணம்..?
<>அடுத்தவன் மனைவியே அடைவதற்கு அவளின் கணவனையே கொல்வதற்கு மேற்கொள்ளும் மட்டரகமான செயல்களுக்கு எவர்களின் மதம் காரணம்...?

<> உதாரணத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட செய்திகள் எல்லாம். இன்னும் எத்தனையோ மோசங்கள்,அசிங்கங்கள்,குற்றங்கள் ஆயிரமாயிரம் உள்ளன.இந்நிகழ்வுகள் யாவும் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் நடக்கவில்லை,மாறாக செய்திதாள்களிலும் ஏனைய ஊடங்கள் வாயிலாகவும் நாம் அன்றாடம் காணும் அவலங்கள் தான்!

  இதன் மூலம் தனி மனித கொடுமைகளுக்கும்,சமுக நல கெடுதிக்கும் காரணம் சுயநலம் என்பது தெளிவு.,

அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்,



  • கடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தார் என பார்ப்பதற்கு முன்பு..

      ஒருவேளை உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் சம்மாய்,அதாவது அவர்கள் வாழ தேவையான வாழ்வாதார வசதிகளுடனும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுப்போலவே உயரம்,நிறம்,பருமன், ஏனைய உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மற்ற மனிதர்கள் யாவருக்கும் அதே அளவில் வழங்கப்பட்டால் தான் உலக மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.

   இப்படி ஒரு நிலையில் உலகம் இயங்குவதாக கொண்டால், உலகில் பொருளாதார விசயங்களில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வராது சரிதான்.,ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே முகச்சாயலுடனும். அதேப்போல அனைத்து பெண்களும் ஒரே முகச்சாயலுடனும் தான் இருப்பார்கள்.

   அப்படி இருந்தால்தான் கடவுள் மனிதர்கள் மத்தியில் அணு அளவிற்கு கூட ஏற்றத்தாழ்வை உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியும். கற்பனை செய்துப்பாருங்கள்...

  தாயிக்கும்,தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்களும், தந்தைக்கும், கணவனுக்கும். பிள்ளைக்கும்,வித்தியாசம் தெரியாமல் பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள்,  பாதிப்படைவார்கள்.,இப்படிப்பட்ட நிலையில் உலகம் சமச்சீராய் இயங்குமா? 

   ஆக உலகம் சீராய் இயங்குவதற்கு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டும் என்பதை கடவுள் மறுப்போர் கூட உடன்பட்டோ,முரண்பட்டோ ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை...இல்லை.. உருவத்தில் வேண்டாம் உலகளவில் மட்டும் கடவுள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யலாமே என பாதி சமச்சீர் நிலைக்கு பலத்த ஆதரவு தெரிவிப்போர் கீழ்காணும் சுட்டியே பார்வையிடவும்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் இருந்தால் தான் உலகில் அனைத்து செயல்களும் தொடர்ந்து இயங்க முடியும்.
சொல்லப்போனால் கடவுள் மறுப்போர் உலகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியுமா...?உருவ மாறுப்பாட்டிற்கு வேண்டுமானால் வாழும் கால சூழல்,தட்ப வெப்ப நிலை காரணம் என்று பதில் சொல்லலாம். பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு என்ன காரணம் கூறுவார்கள்?

 ஏனெனில் ஒருசெல் உயிரி உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு உடல் மட்டும் ஏனைய செயல்களுக்கு தேவையானவைகளை தானாகவே பிறர் தயவின்றி பெறும் போது அனைத்து உயிரினத்தின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு உருவாகும் மனிதன் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து வாழ்வதேன்?

விடை தருமா கடவுளில்லா உலகம் செய்ய விரும்பும் பகுத்தறிவாளர்களின் (?) பரிணாம்...?

கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html

                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

No comments:

Post a Comment

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்